Wednesday, February 2, 2011

மீனவர் மீது தாக்குதல் - நண்பர்களுக்கு மின்னஞ்சல்

வணக்கம் ,

கடந்த 30 ஆண்டுகளாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. கடலுக்குப் போகும் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் வழக்கமாகிப் போயிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குப் போக பயப்படும் படியான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 539 மீனவர்கள் கொல்லப்பட்டதாக பதிவாகியிருக்கிறது. ஜனவரி 2011ல் மட்டும் இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மலிவான அரசியல் சூழலில் இந்த வாழ்வாதார பிரச்சனை தீர்வு காணப்படாமலேயே இருந்து வருகிறது.

இந்தத் தாக்குதல்களை எதிர்த்தும், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நாடியும் இணைய சமூகங்களில் ஆர்வலர்கள் விழிப்புணர்வை பரப்பி வருகிறார்கள். உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களைப் போல, இந்தப் போராட்டமும் நிகழ் உலகுக்கும் பரவி துன்புறுத்தப்படும் மீனவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வேறு ஆதரவற்ற எளிய மீனவ மக்களுக்காக உங்கள் குரலையும் எழுப்புங்கள். #tnfisherman என்ற குறிச்சொல்லுடன் டுவிட்டரில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுஞ்செய்திகள் மூலமும் செய்தியை பரவச் செய்யுங்கள். உங்கள் சில நிமிடங்கள் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கும் அருமருந்தாக அமையலாம்.

மேல் விபரங்களுக்கு http://www.tnfisherman.org/

அன்புடன்,


மா சிவகுமார்

No comments:

Post a Comment