Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Wednesday, February 2, 2011

மீனவர் மீது தாக்குதல் - நண்பர்களுக்கு மின்னஞ்சல்

வணக்கம் ,

கடந்த 30 ஆண்டுகளாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. கடலுக்குப் போகும் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் வழக்கமாகிப் போயிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குப் போக பயப்படும் படியான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 539 மீனவர்கள் கொல்லப்பட்டதாக பதிவாகியிருக்கிறது. ஜனவரி 2011ல் மட்டும் இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மலிவான அரசியல் சூழலில் இந்த வாழ்வாதார பிரச்சனை தீர்வு காணப்படாமலேயே இருந்து வருகிறது.

இந்தத் தாக்குதல்களை எதிர்த்தும், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நாடியும் இணைய சமூகங்களில் ஆர்வலர்கள் விழிப்புணர்வை பரப்பி வருகிறார்கள். உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களைப் போல, இந்தப் போராட்டமும் நிகழ் உலகுக்கும் பரவி துன்புறுத்தப்படும் மீனவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வேறு ஆதரவற்ற எளிய மீனவ மக்களுக்காக உங்கள் குரலையும் எழுப்புங்கள். #tnfisherman என்ற குறிச்சொல்லுடன் டுவிட்டரில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுஞ்செய்திகள் மூலமும் செய்தியை பரவச் செய்யுங்கள். உங்கள் சில நிமிடங்கள் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கும் அருமருந்தாக அமையலாம்.

மேல் விபரங்களுக்கு http://www.tnfisherman.org/

அன்புடன்,


மா சிவகுமார்

Sunday, January 30, 2011

தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு

சிங்கள கடற்ப்படையால் கடந்த பத்து நாட்களுக்குள்ளாகவே இரண்டு மீனவர்கர் காட்டு மிராண்டித்தனமாக கொள்ளப்பட்டுள்ள செய்தி நிச்சயம் தமிழ் இன உணர்வாளர்களுக்கு பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது...

ஆனால் இதுவரை சுமார் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட மீனவமக்கள் சிங்கள படையினரால் கொல்லப்பட்டபோதும் ஒவ்வொவொரு மீனவன் கொல்லப்படும்போதும் இரண்டு அறிக்கைகள் இரண்டு கண்டனங்
கலோடும்,தமிழின தலைவரின் ஒரு டெல்லி தந்தியோடும்,அற்பமான நிவாரனத்தொகையோடும் அந்த நிகழ்வுகளை அவ்வாறே மறந்துவிட்டு அடுத்த வேலை பார்க்க சென்ற எம் சுயமரியாதை தமிழ் மக்கள் இம்முறை அது நிகழாது தம் இனம் காக்க எதையாவது நகர்த்திபோடுவர் என நம்புவோமாக......


ஆஸ்த்ரேலியாவில் மேட்டுகுடிமக்கள் தாக்கப்படும்போது ஓடி ஓடி கதறி அழுத வடஇந்திய செய்திசேனல்கள் எம் ஏழை மீனவனின் கண்ணீர் கதையை இதுவரை காட்டமறுப்பது ஏனோ??? அவன் ஏழை என்பதாலா?அல்லது தமிழன் என்பவன் கேனயன் என்பதாலா????


வட இந்திய சேனல்களை நொந்து என்ன பயன்???? முத்தமிழை வளர்ப்பதையே முதர்த்தொழிலாக கொண்டு இயங்கும் நம் தமிழ் தொலைக்காட்சிகள் மானம் அற்ற நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை நோட்டமிட்டு வயிறு வளர்க்கும் சேனல்கள் வயிற்றுப்பிழைப்புக்காக உயிர் பணயம் வைத்து கடல் கடந்து சென்று சுட்டு கொல்லப்படும் மீனவனின் இனமானம் இழந்து வாடும் துயர வாழ்வு கண்ணில் தெரியுமா சொல்லுங்கள்...


நான்கரையாண்டுகள் கொடநாட்டில் தூங்கி விழித்து தேர்தல் வர இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் எம் மீனவ ஏழை குடிகள் நினைவில் வர ஓடோடி வந்து மீனவனின் இறுதி சடங்குக்கு சென்று ஆறுதல் சொல்லும் எங்கள் இனமானமுள்ள தன்மான தலைவியை பாராட்ட வார்த்தைகள் உண்டோ.அறிக்கைப்போர் நடத்தும் வீராங்கனையே எதிர்க்கட்சி தலைவியான உன்னால் இந்த ஐந்தாண்டுகள் தாய் தமிழகம் அடைந்த நன்மைகளுக்கு அளவுண்டோ..ஈழப்போரின் இழப்புகளை இதெல்லாம் சாதரணமப்பா என நியாயப்படுத்தியவர் இப்போது வீறுகொண்டு எழுவது எதனால் தமிழன் நியாபகமறதிக்காரன் என்பதலா????


திராவிட இயக்கத்தின் தலைவனே, தன்மான தங்கமே,சுயமரியாதை சிங்கமே, கருப்பு சட்டையின் கரம்பிடித்து வளர்ந்த கண்ணாடிபோட்ட கார்ல் மார்க்சே, பாராட்டு விழாக்களிலே காலத்தை தள்ளும் பாருடை வேந்தே,நீ செய்த காரியங்கள் தமிழ்கூறும் நல்லுலகம் காலம் உள்ளவரை மறவாது என் கண்மணியே...

ஈழப்போரை ஒருமணி நேர உண்ணா நோன்பில் முடிவுக்கு கொண்டுவந்த எங்கள் தலைவா,ஈழத்தமிழனுக்காக ஒருமணி நேரம் நடித்தவர் சாரி துடித்தவர் மீனவ பெரும் குடிகளுக்காக ஒரு கால் மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ராஜபக்சேவின் நாஜிப்படையை விரட்டி அடிப்பாரடா கலங்காதே என் உடன்பிறப்பே,,

அல்லது டெல்லிக்கு ஒரு கடிதம் போட்டு 2016 ஆம் ஆண்டுக்குள் களங்கம் தீர்ப்பார் பொருத்துக்கொல்லடா என் பொன்மணியே.

அல்லது தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப்போட்டாலும் காவடிஎடுப்பேன் பதவிக்காக போர்ப்படை பார்த்து பதறாதே கண்கள் பணிக்கும் இதயம் இனிக்கும் தம்பி ராஜபக்சே அப்பாவியடா மீனவனை கொல்வது ஆரிய கடல்பூதமாடா என சிரிப்பு அறிக்கையை துயரத்தில் மூழ்கிருக்கும் தமிழகம் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்....



சினிமாவுக்கு ஆங்கில தலைப்புவைத்தால் ஆப்படிப்போம் என கொக்கரித்த உயிர்மைக்காரன் எங்கே?
காஸ்மீரத்தில் கொடி நாட்டி அமைதியை கொண்டு வந்த தேசிய வியாதிகள் எங்கே?
மண்ணாங்கட்டி மத சார்பின்மை பேசும் கதர் சட்டை, கை சின்ன காரன் எங்கே?
காவிரி பிரச்சனையை காமெடி பிரச்சனையாக்கி உண்ணாவிரதம் இருந்த கலை குடும்ப கண்மணிகள் எங்கே ?
இங்குள்ள களைகளை பிடுங்காமல் வடஇந்திய அரசியல் புடுங்கிகளை நொந்து கொள்வது வீண் வேலை.ஒப்பாரும் நிக்காரும் இல்லா சுயமரியாதை கொண்ட தமிழர்களே பொறுத்து வெறுத்தது போதுமடா விழித்துகொள்..
நேற்று ஈழம் இன்று மீனவன் நாளை தமிழகம் கூட கழுத்தறுக்கப்படலாம்.இனப்பெருமை பேசி பேசி அலுக்கவில்லையா செயலில் இறங்க வேண்டிய நேரமிது.
நீ தமிழனடா, தமிழ் ஒருவனை சாந்தப்படுத்துவது மட்டுமில்லை தமிழ் ஒருவனுக்கு ரௌத்ரத்தையும் பழக்கும்....பழக்கிகொள்...


தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.இல்லேயேல் தமிழன் என்று சொல்லடா தலைல அடிச்சி கொள்ளடா...









அரசியல்வாதிகளுக்கு நம் அழுகை சத்தத்தை கேட்க்கும் நோக்கில் உண்டாக்கியுள்ள www.savetnfisherman.org தளத்திற்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் கரங்களை வலிமையாக்குவோம்.



இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

ஐத்ருஸ்

மானமுண்டா இந்திய அரசே?!

எங்கள் கல்லூரியில் சில வட கிழக்கு இந்திய மாணவர்கள் படித்தார்கள். (சிக்கிம், மணிப்பூர், அருணாச்சல்பிரதேசம், நாகாலந்து, மேகாலயா முதலிய மாநிலங்கள்)
அவர்களுக்கு ஏனோ இந்தியர்கள் என்ற உணர்வு அதிகம் இருந்ததில்லை. விடுமுறையில் ஊரிலிருந்து கிளம்பும் போது இந்தியாவுக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டு வருவார்களாம். அப்போதெல்லாம் அதைக் கேட்க எங்களுக்குக் கோபம் வரும். காரணம் கேட்டால் பெரிதாய் விவரிக்க மாட்டார்கள். உங்களுக்குப் புரியாது என்று சொல்லிவிடுவார்கள்.


தமிழ்நாட்டு மீனவர்களின் படுகொலையைக் கண்டும் காணாமல் கள்ளமௌனம் சாதிக்கும் இந்திய அரசின் போக்கும், ஊடகங்களின் பச்சைச் சுயநலப் போக்கையும் காணும் போது அவர்கள் சொன்னது புரிகிறது.


பெருந்தலைவர்களே, மகாநடிகர்களே! நாட்டு விமான நிலையங்களில் அவமானப்படுவதைச் சுரணையற்ற்ய்ச் சகித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்ட பாவத்துக்காக நாங்களும் சகித்துக் கொள்ளலாம்.


எங்கள் இன்னுயிர் சகோதரர்கள், அப்பாவி மீனவர்கள் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் நீங்கள் இருப்பதை நாங்கள் எப்படிச் சகிக்க முடியும்? எங்கள் குரல் கேளாதது போல், உறங்குவது போல் நடிக்க வேண்டாம். தலையில் இடிவிழும் ஜாக்கிரதை!



பதிவர்: தீபா

Saturday, January 29, 2011

தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு

http://www.savetnfishermen.org/
அன்பிற்குரிய தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,
கடந்த 20 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மீனவர்களின் மீதான தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வாகப் போயிருக்கின்றன.
இந்திய மத்திய அரசு இதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
1.தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும்படி இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விட வேண்டும். மீனவர்களின் கடலில் மீன்பிடிக்கும் உரிமை நாட்டு எல்லைகளால் கட்டுப்படுத்தப்படக் கூடாது.

2. இந்திய கடற்படை மூலமாக, பாக் நீர்ச்சந்தியில் தமிழக மீனவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

3. கச்சத் தீவை இலங்கையின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்க வேண்டும்

தமிழ்நாட்டின் உணர்வுகளை மத்திய அரசில் வற்புறுத்தி, தமிழர் நலன்களை பாதுகாக்கும்படி இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
மா சிவக்குமார்

சுட்டி : http://masivakumar.blogspot.com/2011/01/blog-post_28.html

பதிவர் :  மா சிவக்குமார்