Thursday, February 3, 2011

நல்லுறவு அல்ல... கொல்லுறவு - தமிழ்நாட்டு வார இதழ்


வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

இவ்வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் 'ஆனந்தவிகடன்' வார இதழ் தனது தலையங்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளது. அந்த தலையங்கத்தின் முழுவிபரமாவது,

'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.

இலங்கைக் கடற்படையின் அராஜகத் தாக்குதலில் ஐந்நூறாவது மீனவர் சாகட்டும் என்று காத்திருந்து, அதைக் கொண்டாடவா இந்தப் பயணமும் அறிவிப்பும்? ஒருவரையும் சாகவிடாத அளவுக்கு ஓர் ஒப்பந்தத்தைப் போட முடியும் என்பது உண்மையானால், ஏன் இத்தனை தாமதம்?

இலங்கை - இந்திய அரசுகளுக்கு மத்தியில் நிலவி வரும் விநோதமான நட்பு உணர்வு, சாமானியர்கள் தொடங்கி தலைவர்கள் வரையில் எத்தனையோ உயிர்களுக்குச் சமாதி கட்டியிருக்கிறது. உலகமே கொதித்துக் கண்டித்தபோதும், துளிகூட அலட்டிக்கொள்ளாமல், தோளில் கை போட்டுக்கொண்டு பொருத்தமான பொய்களைச் சொல்லிச் சமாளிப்பதில் இந்த இரு அரசுகளின் ஒற்றுமை உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

இறந்த மீனவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை, அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை என்பதுதான் எப்போதும் நிறைவேற்றப்படும் சடங்கு சம்பிரதாயம். இப்போது தேர்தல் நெருக்கம் என்பதால், வீடு தேடிச் சென்று ஆறுதல் சொல்வதும், 'மீனவ சமுதாயத் தலைவர் சிங்காரவேலரின் 151-வது பிறந்த நாள் விழாவை அரசே கொண்டாடும்' என்று அறிவிப்பு செய்வதுமாக, சற்றே விசேஷக் காட்சிகள்கொண்ட அரசியல் நாடகங்கள் அரங்கேறுகின்றன!

தனியார் நிலத்தில் மேய வரும் காட்டு விலங்குகள், மின்வேலியால் தாக்குண்டு இறந்துபோனால், நிலத்தின் உரிமையாளரைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்துகிறது அரசாங்கம்.

வன விலங்கின் உயிர் மீதே இத்தனை அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் நம் அரசு, எல்லை பிடிபடாத கடல் பிரதேசத்தில் மீனவனின் உயிர்கள் தொடர்ந்து பறிக்கப்படுவதை 'இருநாட்டு நல்லுறவு' என்ற பெயரால் இன்னும் எத்தனை காலம் பேடித்தனமாக வேடிக்கை பார்க்குமாம்?

http://www.puthinappalakai.org/view.php?20110203103091

தமிழ்நாட்டு மீனவர்கள் 378பேர் இதுவரை சிறிலங்கா கடற்படையால் படுகொலை


1983ம் ஆண்டுக்கும் 2005 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சம்பவங்களின் விளைவாக 378 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோல தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினர் துப்பாக்கிகளுக்கு இரையாகும் சம்பவங்கள் 83ம் ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.

இவ்வாறு இந்தியாவின் ஆங்கில ஊடகமான The Times of India வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி. அந்த செய்திக் கட்டுரையின் முழுவிபரமாவது,

டிசம்பர் 08 2008 அன்று பாபு என்ற இந்த மீனவன் கடலுக்குச் சென்றபோது இதுதான் தனது இறுதிப்பயணம் என்பனை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் கடலுக்குப் புறப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் பாக்கு நீரிணையிலுள்ள கச்சதீவுப் பகுதியில்வைத்து பாபு சிறிலங்காவினது கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கினைப் பதிவுசெய்த நாகபட்டினம் காவல்துறையினர் சிறிலங்காவினது கடற்படையினரே இந்தக் கொலைக்குப் பொறுப்பு என தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்டிருந்தனர்.

தமிழ்நாட்டு மீனவன் சுடப்பட்ட செய்தி வெளியே வந்தபோது வழமைபோலவே அரசியல் கட்சிகள் அனைத்தும் வரிந்துகட்டிக்கொண்டு எழுந்தன. ஆனால் முன்னர் இடம்பெற்றதைப் போலவே ஒரு சிலமாதங்களின் பின்னர் இந்த வழக்கும் மூடப்பட்டது.

நாகபட்டினத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்ந்துவரும் பாபுவினது மனைவி சரஸ்வதி தனது கணவன் கொலைசெய்யப்பட்டமைக்கான பதிலுக்காக இன்றும் காத்திருக்கிறாள். "எனது கணவர் இறந்தபோது 20,000 ரூபாய்களை அரசாங்கம் வழங்கியிருந்தது. ஆனால் எனது கணவரின் உயிருக்கு எதுவும் ஈடாகாது. குறித்த அந்த நாளில் நான் அனைத்தையுமே இழந்துவிட்டேன்" என்கிறாள் சரஸ்வதி.

1983ம் ஆண்டுக்கும் 2005 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் சம்பவங்களின் விளைவாக 378 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோல தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினர் துப்பாக்கிகளுக்கு இரையாகும் சம்பவங்கள் 83ம் ஆண்டுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.

"கச்சதீவு சிறிலங்காவிற்குத் தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்கள் 1975ம் ஆண்டு ஆரம்பித்தன" என ஆய்வாளரும் ஒளிப்படக் கலைஞருமான செல்வபிரகாஸ் கூறுகிறார். இராமேஸ்வரத்தினை அண்டியிருக்கும் கச்சதீவு 1974ம் ஆண்டு சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்தது.

ரைம்ஸ் ஒவ் இந்தியாவிற்குக் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவினது கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் இடம்பெறும் போதெல்லாம் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களிலுள்ள காவல்நிலையங்களில் இந்திய துப்பாக்கிகள் சட்டத்தின் 307ம் பிரிவின்கீழ் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.

பெரும்பாலான வழக்குகளில் குறிப்பட்ட இந்தச் சம்பவமானது "கச்சதீவுக்கு அருகாக இந்தியக் கடல் எல்லையில் இடம்பெற்றது" என்றும் இதற்குச் சிறிலங்காவினது கடற்படையினர்தான் பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இவ்வாறு தொடரப்பட்ட பெரும்பாலான வழக்குகள் போதிய தகவலின்மையினாலும் தாக்குதலாளிகள் தொடர்பான ஆதாரங்கள் இன்மையினாலும் கைவிடப்பட்டிருக்கிறது.

"மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு எதிரான வழக்குகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதற்கு வழிசெய்கிறதே தவிர வேறெதற்குமில்லை. சிறிலங்காக் கடற்படையினரின் தாக்குதலினால் காயமடைந்த மற்றும் கொல்லப்பட்ட பல நூற்றுக்கண்க்கான மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் போதிய எதனையும் செய்யவில்லை" என ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாஸ் கூறுகிறார். கச்சதீவுக் கடற்பிராந்தியத்திலேயே அதிக இறால் பிடிபடுவதால் அதிகளவிலான மீனவர்கள் இந்தப் பகுதியினை அதிகம் நாடிச்செல்கிறார்கள்.

சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுடனான போர் இடம்பெற்றுவந்த காலப்பகுதியில் தமிழ்நாட்டு மீனவர்கள் அதிகளவில் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் 2009ம் ஆண்டு புலிகளமைப்பு இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் இடம்பெறும் சம்பவங்களின் அளவு சற்றுக் குறைந்திருப்பதாகவும் கல்விமானங்களும் செயற்பாட்டாளர்களும் கூறுகிறார்கள்.

"இதுபோல போர் முடிவுக்குவந்துவிட்ட பின்னரும் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்தும் இலக்குவைக்கப்படுவதானது மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விடயத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது" என்கிறார் பீப்பிள் வோச் என்ற தொண்டு நிறுவனத்தினைச் சேர்ந்த ராஜன். "புதுடில்லியினைப் பொறுத்தவரையில் சிறிலங்கா, பாகிஸ்தானைப் போல் அல்லாமல் அதன் நட்பு நடாகும். ஆனால் பாகிஸ்தான்கூட இதுவரை இந்திய மீனவர்கள் ஒருவரையேனும் சுட்டுக்கொன்ற வரலாறு கிடையாது" என்றார் அவர்.

சிறிலங்கா கடற்படையினரின் செயற்பாடுகள் அவர்கள் அனைத்துலக நெறிமுறைகளின் வழி ஒழுகுகிறார்கள் என்பதைக் காட்டவில்லை என வன்னிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தியாவின் தேசியப் பாதுகாப்புக்கான வல்லுநர்கள் குழுவில் அங்கம் வகித்த வி. சூரியநாராயணன் கூறுகிறார். அனைத்துலக ரீதியில் நோக்குமிடத்து தொடர்புடைய நாடுகளில் கடல்சார் எல்லைகளைக் கவனத்தில்கொண்டு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதில்லை. எல்லைதாண்டிய மீன்பிடி என்பது அடிக்கடி இடம்பெறும் ஒரு சம்பவமாகும்.

"சிறிலங்காவினைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிக்கிறார்கள். அதுபோலவே இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் மற்றும் சிறிலங்காவின் கடற்பிராந்தியத்திலும் பங்களாதேஸ் மீனவர்கள் மியன்மார் கடற்பிராந்தியத்திலும் நுழைந்து எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுகிறார்கள். ஐ.நாவின் கடல்சார் சட்டத்தின் 73 மற்றும் 145வது சரத்துக்களின் அடிப்படையில் இதுபோல எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடுவது ஒரு குற்றமாகும்" எனச் சூரியநாராயணன் தொடர்ந்தார்.

அனைத்துலக சட்ட ஆணையத்தின் படி, அயல் நாடுகளின் கடற்பிராந்தியத்திற்குள் சென்று மீன்பிடியில் ஈடுபட முனைவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இதுபோல எல்லைதாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடாத்தக்கூடாது என இந்த ஆணையகம் கூறுகிறது.

சரி குறிப்பிட்டதொரு மீனவர் படுகாயமடைந்துவிட்டால் அல்லது மரணித்துவிட்டால் அதற்கான நட்டஈட்டினை எந்த நாட்டு அரசாங்கம் வழங்கும் என்பதில் எந்தவிதமான தெளிவான பதிலும் இல்லை. "கரையோரச் சமூகங்களின் மத்தியில் அளவில் பெரிய வாக்கு வங்கிகள் இருக்கின்றபோதும் அரசியல் வாதிகள் உருப்படியான காரியங்கள் எதனையும் முன்னெடுப்பதில்லை" என மூலோபாய மற்றும் பாதுகாப்புக் கற்கைகள் என்பதற்கான அமைப்பின் தலைவர் வாசன் கூறுகிறார்.

குறிப்பிட்டதொரு தேர்தலின் முடிவையே மாற்றக்கூடிய 37 தேர்தல் தொகுதிகள் கரையோர மீனவர் சமூகத்தினைக் கொண்டது. ஆனால் சரஸ்வதி போன்ற பாதிக்கப்பட்ட பெண்களின் நிலைமைதான் என்ன?

http://www.puthinappalakai.org/view.php?20110203103091

Wednesday, February 2, 2011

த‌கவல் நதி பாய்ந்து ஓட‌ட்டும்;டிவிட்டர் பிரகடனம்.

தமிழகத்தின் முதல் சமுக ஊடக பயன்பாடு என்று சொல்லப்படகூடிய மீனவர்கள் பாதுகாப்புக்கான டிவிட்டர் இயக்கம் எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்திருக்கும் போது உருவாகியிருப்பது தற்செயலானது என்றாலும் பொருத்தமானது என்றே தோன்றுகிற‌து.
இதற்கான காரணம் மிகவும் சுலபமானது.மீனவர் ஆதரவு இயக்கம் போலவே எகிப்து மக்கள் போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பது டிவிட்டர் மற்றும் அதன் சகோதர சேவைகள் தான்.(பேஸ்புக்,யூடியூப்).
எகிப்தில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்கு முன் டுனிசியாவில் டிவிட்டர் புரட்சி வெடித்தது.வேலையில்லா திண்டாட்டம் ,ஊழல் போன்ற பிர்சனைகளால் வெறுத்து போன டுனிசிய மக்கள் டிவிட்டர் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளத்துவங்கியது அரசுக்கு எதிரான மக்கள் இயக்கமாக உருவானது.
டுனிசியாவின் புரட்சி தீ மற்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரவலாம் என்று கணிக்கப்பட்டதற்கு ஏற்பவே எகிப்தில் பதவி நாற்காலியில் பல ஆண்டுகளாக ஒட்டிக்கொண்டிருக்கும் முபாரக் அரசுக்கும் எதிரான‌ போராட்டம் வெடித்தது.எதிர்பார்க்க கூடியது போலவே எகிப்து அரசு முதல் வேலையாக டிவிட்டருக்கு தடை விதித்து இண்டெர்நெட் பயன்பட்டிற்கும் கட்டுப்பாடுகளை விதித்தது.
போராட்டத்தை நசுக்க எப்போதுமே ஆதக்க சக்திகள் பல்வேறு அடக்கு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.தகவல் யுகத்தில் மக்கள் போராட்டத்திற்கான மாபெரும் ஆயுதமாக இணையம் உருவாகி இருப்பதால் போராட்டம் என்று வரும் போது அரசுகள் முதலில் செய்வது இண்டெர்நெட்டின் குரல் வலையை நெறிப்பது தான்.
அதிலும் குறிப்பாக இப்போது டிவிட்டரில் கை வைக்கின்றனர்.
டிவிட்டர் செய்திகள் மூலம் போராட்டத்திற்கு தூண்டுகோளாக இருக்ககூடிய‌ தகவல்கள பகிர்ந்து கொள்ளப்பட்டு பரஸ்பர ஆதரவு திரட்டப்படுகிற‌து.வெகுஜன ஊடகங்கள் தனிக்கை மற்றும் லாப நஷ்ட கணக்கின் அடிப்படையில் செய்திகளை சீர் தூக்கி பார்த்து வெளியிடும் நிலையில் இணையவாசிகள் எந்தவித அச்சமோ தய‌க்கமோ இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டு ஆதரவு திரட்ட டிவிட்டரும் பேஸ்புக்கும் கை கொடுக்கின்றன.
எனவே தான் செஞ்சீனமும் சரி மதாடிப்படைவாத ஈரானும் சரி மக்கள் அதிருப்தியை எதிர் கொள்ளும் போது டிவிட்டர் நதியின் மூலம் எதிர்ப்பு தகவல்கள் பாய்ந்தோடுவதை தடுக்க வேண்டும் என நினைக்கின்றன.
இப்போது எகிப்திலும் இது தான் நடந்திருக்கிறது.
உண்மையில் எந்த ஒரு நாட்டில் டிவிட்டருக்கு தடை விதிக்கப்படுகிறதோ அங்கு நிலைமை சரியில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு டிவிட்டர் மக்கள் சாதனமாக உருவாகியுள்ளது.
வர்த்தக நிறுவனமாக இருந்த போதிலும் டிவிட்டர் நிர்வாகம் இதனை உணர்ந்திருப்பது நல்ல விஷ‌யம்.அதைவிட இந்த புரிதலை வெளிப்படுத்தும் வகையில் டிவிட்டர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள‌ அறிக்கை வரவேற்கத்தக்கது.
டிவிட்டர் நதி பாய்ந்தோடட்டும் என்னும் தலைப்பிலான பதிவில் டிவிட்டர் இணை நிறுவனர் பிஸ் ஸ்டோன்,தங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் எந்த இடத்தில் இருப்பவரும் உடனடியாக தொடர்பு கொள்ள வழி செய்வதே டிவிட்டரின் நோக்கம் என்றும் இதற்கு கருத்து சுதந்திரம் மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சில டிவிட்டர் செய்திகள் அடுக்குமுறை தேசங்களில் முற்போக்கான மாற்றத்தை கொண்டு வர வல்லவை என்றும் கூறியுள்ள ஸ்டோன் டிவிட்டரின் உள்ளடக்கத்தில் உடன்பாடு  இல்லாவிட்டாலும் கூட அந்த தகவல்கள் பாய்ந்தோட செய்து வருவதாக கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரத்தை அடிப்படை ம‌னித‌ உரிமை என்று குறிப்பிட்டுள்ள ஸ்டோன் எந்த கருத்தையும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதை தடுக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
டிவிடரின் தணிக்கை கொள்கை பற்றியும் விரிவாக விளக்கியுள்ள ஸ்டோன் கருத்து சுதந்திரம் தொடர்பான டிவிட்டரின் கருத்துக்களை பின்தொடர்வதற்கான முகவரியையும் கொடுத்துள்ளார்.
டிவிட்டர் ஒரு போராட்ட கருவியாக உருவாகியுள்ள நிலையில் டிவிட்டரின் இந்த தன்னிலை விளக்கம் மற்றும் கருத்து சுதந்திரத்துக்கான ஆதரவு வரவேற்கத்தக்கதது.
சில ஆண்டுகளுக்கு முன் ஈரானில் எதிர்ப்பு அலை எழுந்த போது டிவிட்டரே அதன் மையமாக விளங்கியது.அப்போது டிவிட்ட தளத்தின் பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டிருந்த‌து.இந்த நேரத்தில் டிவிட்ட மூடப்பட்டால் போராட்டக்காரகளின் குரல் கேட்காமல் போய் விடும் என் க‌ருதி அமெரிக்க அரசே டிவிட்டரிடம் பராமரிப்பு பணிகளை தள்ளிவைக்க கேட்டுக்கொண்டது நினைவிருக்கலாம்.
———-
http://blog.twitter.com/2011/01/tweets-must-flow.htm
———-
(தமிழக மீனவர்களுக்கான டிவிட்டர் இயக்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்)


 cybersimman

மீனவர் மீது தாக்குதல் - நண்பர்களுக்கு மின்னஞ்சல்

வணக்கம் ,

கடந்த 30 ஆண்டுகளாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. கடலுக்குப் போகும் மீனவர்கள் தாக்கப்படுவதும், கொடுமைப்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்கள் படகுகள் அழிக்கப்படுவதும் வழக்கமாகிப் போயிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குப் போக பயப்படும் படியான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை 539 மீனவர்கள் கொல்லப்பட்டதாக பதிவாகியிருக்கிறது. ஜனவரி 2011ல் மட்டும் இரண்டு மீனவர்கள் உயிரிழந்துள்ளார்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் மலிவான அரசியல் சூழலில் இந்த வாழ்வாதார பிரச்சனை தீர்வு காணப்படாமலேயே இருந்து வருகிறது.

இந்தத் தாக்குதல்களை எதிர்த்தும், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நாடியும் இணைய சமூகங்களில் ஆர்வலர்கள் விழிப்புணர்வை பரப்பி வருகிறார்கள். உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்களைப் போல, இந்தப் போராட்டமும் நிகழ் உலகுக்கும் பரவி துன்புறுத்தப்படும் மீனவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

வேறு ஆதரவற்ற எளிய மீனவ மக்களுக்காக உங்கள் குரலையும் எழுப்புங்கள். #tnfisherman என்ற குறிச்சொல்லுடன் டுவிட்டரில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுஞ்செய்திகள் மூலமும் செய்தியை பரவச் செய்யுங்கள். உங்கள் சில நிமிடங்கள் மேலும் உயிரிழப்புகளைத் தடுக்கும் அருமருந்தாக அமையலாம்.

மேல் விபரங்களுக்கு http://www.tnfisherman.org/

அன்புடன்,


மா சிவகுமார்

மீனவர் பிரச்சனை என்றால் சிலருக்கு தொண்டையில் குத்திய முள்

மீனவர் பிரச்சனை என்றால் சிலருக்கு தொண்டையில் குத்திய முள்! #tnfisherman
டிவிட்டரில் தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த தோழர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்! தமிழக மீனவர்கள் செத்தால் ரெண்டு நாளைக்கு மேல எவனும் கண்டுக்க மாட்டான் என்ற வாதத்தை பொய்யாக்கிய இணைய தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு லட்சத்து எழுபதாயிரத்து ஆறாயிரம் கோடி.
டிவிட்டரில் தமிழன்பன் : http://twitter.com/#!/tamizhanban08

டிவிட்டரில் எழுதுவதால் மீனவர்பிரச்சனை தீர்ந்துவிடுமா என்கிறார்கள் டிவிட்டரில்கூட எதிர்க்க துணிவில்லாதவர்களோடு நமக்கென்ன பேச்சு#tnfisherman
மீனவர் பிரச்சனை என்றால் சிலருக்கு தொண்டையில் குத்திய முள் போல்தெரிகிறது எவனுக்கும் வார்த்தையே வரமாட்டேங்குதே! #tnfisherman
தமிழன் அமைச்சனானா எங்க பிரச்சனை பேசுவீங்கன்னு பார்த்தா நீரா ராடியாகிட்ட என்னென்னமோ பெசிறிக்கீங்க எங்கள பத்தி பேசலையே #tnfisherman
மீனவர்கள் பேராசைக்காரர்கள் என்றார் கருணா. வாயிற்றுபிழைப்பிற்கு வாழ்வோடு போராடும் அவன் எங்கே? தமிழகத்தையேவளைத்த நீ எங்கே?#tnfisherman
தேர்தல் வரைக்கும் மீன்பிடிக்கிறத தடுக்க போறியா? இல்ல சிங்களன்கிட்ட சொல்லி தேர்தல்வரை தற்காலிகமா சுடுறத நிறுத்தபோறியா? #tnfisherman
இத்தாலியில் இருந்து தலைவியை இறக்குமதி செய்தவர்கள் தலைவனை இலங்கையில் தேடினால் என்ன ஆச்சரியம்? #tnfisherman
போன்ல பேசினா ஒட்டுகேக்குரான்னு நிருபமாவ அனுப்பி வைச்சிருக்க. உண்மையை சொல்லு ஒரு தமிழன் தலைக்கு விலை என்ன? #tnfisherman
கச்சீவு தாரைவார்க்கப்பட்ட பொழுதும் நீ கடிதம்தான் எழுதினாய் காலம் கடத்துவதை தவிர்த்து உனது கடிதம் என்ன சாதித்து விட்டது #tnfisherman
மீனவனை அம்மணமாக்கி அடிக்கிறான் உங்களுக்கு என்னடா இனமானத்தலைவன் என்று பட்டம்? #tnfisherman
மும்பை குண்டுவெடிப்பை குப்பனும் சுப்பவுனும் கண்டிக்கவில்லை என்கிறார் ஒலக நாயகன் #tnfisherman
தமிழக காங்கிரஸ் தலைவர்களே உங்களுக்கு தமிழர்களை நினைவில் இருக்கிறதா? நீங்கள்தான் காமராசர் ஆட்சி அமைக்க போறீங்களா? தூ… #tnfisherman
ஆரியர்களை டெல்லி வரை துரத்தி சென்ற தானைதலைவன் வாழ்க வாழ்க!
-இனமானத்தலைவர் குஞ்சுமணி மன்னிக்க வீரமணி #tnfisherman
தமிழ்நாட்டில் சிறுத்தை தலைவர் கொஞ்ச நாளாய் மியாவ் மியாவ் என்றார் இப்பெல்லாம் லொள் லொள் என்றாகிவிட்டார் #tnfisherman
ஒருவேளை தென் அமெரிக்க மீனவன் சுடப்பட்டு இருந்தால் @CharuNivedita குரல் கொடுத்து இருப்பாரோ? #TNfisherman
நிருபமா ராசபக்சேவிடம் மீனவனை ஏன் கொன்றாய் என்று கேட்பாரா? அல்லது நலம் நலம் அறிய ஆவல் என்பாரா?#tnfisherman
என்னுடைய மீனவனை ஏன் சுட்டாய் என்று கேட்க துப்பில்லாத இந்தியா வளரும் வல்லரசாம். போங்க பாஸ் நீங்க ரெம்ப காமெடி #tnfisherman
இராசதந்திரத்தில் கருணா 23 ஆம் புலிகேசியை மிஞ்சிவிட்டார் பாருங்கள். காலுக்கு விழ டெல்லிக்கு போகனுமா? #tnfisherman
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம் இலங்கையோடு இணைந்தே இன்னும் பல மீனவர்களை கொல்வோம் #tnfisherman
“இப்படியே போ கடல்ல உங்கப்பன் நண்டு வறுத்து தின்னுட்டு இருப்பான்”னு கவுண்ட மணி சொன்னது இந்திய கப்பல்படையை தானா? #tnfisherman
கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள் மீனவர்களே கருணா டெல்லியில் தன் குடும்பத்திற்கு போக உங்களுக்கு ஏதாவது வாங்கி வருவார் #tnfisherman
ஜனவரி23 ல கொல்லப்பட்ட மீனவனுக்கு பிப்ரவரி 6 ல உண்ணாவிரதம் உங்களுக்கு என்ன பிரச்சனை வைகோ? #tnfisherman
கருணாநிதிக்கு நீங்கள் ஏன் சிங்கள ரத்னா குடுக்ககூடாது ராசபக்சே ? உங்க நாட்டுல எவன்உங்களுக்காக இவரைவிட அதிகம் ஆணி பிடிங்கிட்டான்? #tnfisherman
என்ன தலைவா? உன் மக சங்கமம் நடத்த ஒரு கோடி எங்க மீனவன் சங்கருந்தா ஐந்து லட்சமா? எப்பவுமே உன் குடும்பத்துக்கு தனி கணக்கா? #tnfisherman
நூத்திபத்து கோடி பேரில் ஒரு தலைமை இல்லாமல் தலைமையை வாடகைக்கு எடுப்பவர்களிடம் நாம் என்னத்தை எதிர்பார்க்க?#tnfisherman
தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் போட்டாலும் உங்களை சிங்கள கப்பல்படையிடம் காட்டிகொடுத்துவிட்டுத்தான் சாவேன்! #tnfisherman
எருமை கூட தமிழர்களிடம் பொறுமை கற்கும் #Tnfisherman
தலைவா நீ சங்கத்தமிழில் நடிக்கும் பொழுது உன் சங்கையே கடிக்கும் ஆவேசம் பிறக்கிறதே என்ன செய்ய? #tnfisherman
ஐந்துமுறை ஆண்டதுக்கே #tnfishermanஐநூறு பேர முழுங்கிட்ட இன்னொரு முறையா? தமிழினம் தாங்காதுடா யப்பா!  (சந்திரமுகி நாசர் மாதிரி வாசிக்க)
இது என்னடா இந்திய இறையாண்மை? காஸ்மீருக்கு ஒரு பார்வை கச்சத்தீவுக்கு ஒரு பார்வை ?#tnfisherman
யாரவது சுபவீக்கு மேடைபோட்டு தாருங்கள் அப்புறம் எப்படி கூவுறார் என்று பாருங்கள் #tnfisherman

தமிழன்பன்

மீனவர்களைக் காப்பாற்றுங்கள் #tnfisherman

ஐநூற்றுச் சொச்சம் மீனவர்கள்... ஐநூற்றுச் சொச்சம் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது இதுவரை. இனிமேலும் தொடராமலிருக்க, ஒரு வலையுலக யுத்தம்

*
கூட்டணி பேரம், பதவிச்சண்டை என்றால் மட்டும் ஆளாய்ப் பறந்துவிட்டு, ஒரு மரணம் சம்பவித்தால் லட்சத்தைத் தூக்கியெறிந்து தற்காலிகமாக வாயை அடைப்பது இங்கு மட்டும் தான் நடக்கும். நடவடிக்கை எடுக்கக் கேட்டால் இருக்கவே இருக்கிறது கடிதங்களும் தந்திகளும்.. இதையும் மீறி யாராவது ஏதாவது கேட்டால் கடந்த ஆட்சியில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றொரு எகத்தாளப் பேச்சு. 

தங்களது குடும்பங்கள் இன்னும் நூறாண்டுகள் செல்வச்செழிப்புடன் வாழ தொலைநோக்குப் பார்வையுடன் யோசிக்கும் தலைவர்கள், ஒரு சாதாரணன் சாதாரண வாழ்க்கை வாழ வழி செய்யாதிருப்பது திருட்டுத்தனம்.

அயல்நாடு செல்லும் பிரபலங்கள் சோதனை என்ற பெயரால் அவமானப்படுத்தப்பட்டால் கூட பொங்கியெழும அரசியல் எரிமலைகள், இங்கொருவன் கொல்லப்பட்டு அவன் குடும்பம் சிதைக்கப்பட்டால் கூட மௌனம் சாதிப்பது அருவருப்பாக இருக்கிறது.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகாதா? 





தமிழக மீனவர்களைக் காக்க நடக்கும் இந்த நல்லதொரு விஷயத்தில் நீங்களும் பங்கெடுக்கலாம். கீழிருப்பதை மின்னஞ்சல் மூலமாக அனைவருக்கும் அனுப்பவும். உங்கள் பதிவில் மறுபதிப்பும் செய்யலாம்.


Your support can make a difference in Indian Fishermen's Life - Pls Fwd through mail




Hi Friends,

I am sure you must have heard about the recent killings of Indian Fishermen from Tamil Nadu. by Sri Lankan Navy., if you have not request you to read through these links from popular dailies. - Pandiyan Killed on 12th of Jan 2011 ,  Jayakumar Strangulated on 24th Jan 2011 ,


So far, in the last few decades 530 fisherman has been killed, thousands of fisherman has been harassed, and multiple crores of rupees worth fishing equipments and boats have been demolished by Sri Lankan Navy. Our Indian Government has been a silent spectator for all this.

As a fellow Indian brothers & sisters , I appeal to you to voice your support for the fellow Indian fishermen brothers . As a fellow Indian you can do the following to voice your support for the poor fishermen, who have become target for the Sri Lankan Navy.

1.Sign the petition to stop the killing by Sri Lankan Navy -http://www.petitiononline.com/TNfisher/petition.html
2.Join the online protest to save the fishermen by tweeting about this using #tnfisherman tag - http://twitter.com/#%21/search?q=%23tnfisherman
3.You can add the twibbon to your twitter profile / Face book profile picture to show your protest - http://twibbon.com/join/TNFisherman
Read and contribute for the Face Book page on Save Tamil Nadu Fisherman - http://www.facebook.com/savetnfisherman
4.Read and contribute articles for http://www.savetnfisherman.org%20/

We are also seeking volunteers to contribute to this cause. If you are interested you can write to us savetnfisherman@gmail.com,tnfishermancampaign@gmail.com

One last request, Please send this mail to as many us of your friends and colleagues.

with best regards,

A Fellow Indian

நன்றி

மகேஷ் : ரசிகன்

Tuesday, February 1, 2011

மீனவர் துயரம் தீயாக பரவியது

 


இலவச வேட்டியை கட்டி கலர் டிவி பார்க்கும் தமிழனுக்கு கடலில் செத்து மிதக்கும் தமிழனை பற்றி கவலை இருக்காது
என நினைத்த தமிழரசுக்கும் இந்திய அரசுக்கும் இணைய தோழர்கள் ஆப்பு வைத்து வருகிறார்கள்.
நூற்று கணக்கான டிவிட்டுகளால் குத்தி வருகிறார்கள் இந்தியா எனும் ஆனைக்கு டிவிட் எனும் அங்குசம் சின்னதுதான்
இருந்தாலும் அது நேராக குத்தவேண்டிய இடத்தில் குத்துகிறது .

வழக்கமாக மொக்கை, சில பொழுதுபோக்கு எழுத்தாளர்களை பற்றிய சண்டை சில கவிதைகள் சில முற்போக்கு கட்டுரைகள் சில வசவுகள் என மிதக்கும் இந்த வெளி இப்போது போர்குரலுடன் திமிரி எழுகிறது .

தேர்தல் என்பது கந்துடைப்பு அதற்கு இலவசம் என்பது ஏமாற்று என்பது சாதாரணமக்களுக்கே புரிந்துவிட்ட நிலையில் இணைய வாசிப்பாளர்கள்
அடுத்த கட்டமாக மத்திய மாநில அனைத்து ஓட்டு கட்சி அரசியல் வாதிகளையும்
டிவிட்டரில் தோலுரிக்கிறார்கள்

மீனவர்கள் கடல் எல்லை தாண்டி போவதுதான் பிரச்சனை என யாரும் சொல்லமுடியாது ஏனெனில் இந்தியாவின் கடல் எல்லை எது இலங்கையின் கடல் எல்லை எதுவென்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்கிறது போதும்

மீனவர்கள்  எல்லைகளை கடந்தவர்கள் என்கிற நமது வாதம் வருகிறது

மொத்தத்தின் இந்த மீனவர் பிரச்சனை என்பது ஈழத்தமிழர் பிரச்சனையில் இருந்து தனியாக பார்க்க முடியாது

ஈழத்தமிழர்களும் தமிழ் நாட்டுதமிழர்கள் கொல்லப்படும்போது போர்குரல் எழுப்பனும்


இணையத்தில் பற்றவைக்கப்பட்டுள்ளது ஒரு புரட்சி தீ நிச்சயமாகவே அதை அணையாமல் கொண்டு செல்ல வேண்டும்

நிறைய நண்பர்கள் மீனவர் பிரச்சனை குறித்த கட்டுரைகளை தேடி படித்து கீச்சுகிறார்கள்
இது ஒரு விசயத்தின் மீது முன்பிருந்த அசட்டையான மனப்பான்மையை போக்குகிறது
மேலும் நடைமுறை விசயத்தின் தீவிரத்தை விடுத்து கதை கவிதை எனும் கற்பனை குதிரைகளை தற்காலிகமாகவேணும் நிருத்தி வைக்கிறது .

சாதி , இன , வர்க்க வேறுபாடின்றி நாமனைவரும் மீனவ நண்பனுக்காக ஒன்று சேர்கிறோம் என்பதே ஒரு பெரிய புரட்சிதான்

புரச்சியை ஆகாத விசயமாக அதை புர்ச்சி என கேலி செய்தவர்கள் தமிழக மீனவர்களுக்காக நடக்கும் புரட்சியை கண்டுகொள்ளட்டும்

மறுபுறம் நாங்கள் களத்தில் இருக்கிறோம் நீங்கள் மத்தியதரவர்க்கம் இணையத்தில் சும்மா வாள் சுழற்றுகிறீர்கள் என சொன்ன போலி முற்போக்குவாதிகளே இது புரட்சிகரமானது என
சொல்ல வைத்து இருக்கிறது

இணையமோ மற்றெவ் ஊடகமோ அதனளவில் பிற்போக்குதனமில்லாதவை
அதை உபயோக்கிறவனவே அதை தீர்மானிக்கிறான் என்பதை இந்த நபர்கள் இப்போதாவது புரிந்து கொண்டமைக்கு நன்றி

மனிதன் மிக கொடூரமாக ஒடுக்கப்படும்போது புரட்சி வரும் என்பதை இது காட்டுகிறது

பிரச்சனையை விரிவாக அறிய  சொடுக்கவும்

http://inioru.com/?p=16420
--
தியாகு

இதயத்தின் அழுகுரல்


Photobucket
மீன் பிடிக்க கடலுக்கு போன நாங்க
எங்கள பிடிக்க ராணுவம் வர்றது ஏங்க?

வயித்து பிழைப்புக்காக கடலுக்கு போறோம் நாங்க
பொழுதுபோக்குக்காக எங்கள சுட்டு பழகுறாங்க
கடலம்மா கொந்தளிச்சா !சுனாமியா எங்களை அழிச்சா !!

கட்டுமரத்துல போன அந்தோணி இப்ப கட்டைல போறது ஏங்க ?

எங்க வாழ்க்கைல மொத்தமா நெறஞ்சு இருக்கிறது நிராசை
அரசாங்கம் சொல்லுது செத்துபோனா அது உங்க பேராசை !!

செத்தவன திட்டுறான் ,சுட்டவனோ சிரிக்கிறான்

சாவு ஒன்னும் மோசமில்லை,எங்களுக்கு காவு ஒன்னும் புதுசுமில்லை

கடலால இருக்குற உசுரு கடலோட போகட்டும்
உடலால தினம் நாங்க செத்தா தினம் அழ இங்க என்ன மிச்சம் !!

உசுர விட்டவன் உசரத்துக்கு ஓடி போய்ட்டான்
மிஞ்சி வாழ்றவன் அஞ்சி அஞ்சி நித்தம் சாகுறான் !

சுடுறா சுடுறா..சூனாபானா

ஏன் இந்த கொலை வெறி # tnfisherman

பதிவுலகெங்கிலும் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது எதிர்ப்பு தீ தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு எதிராக. நான் ஒரு இலங்கையன் என்றாலும் சாதாரன உணாச்சியுள்ள மனிதனாக, பதிவுலகில் அங்கத்தவனாக, தமிழ் பேசுவனாக இந்தப்பதிவு. தீப்பிழம்பாக இல்லாவிட்டாலும் சிறு தீக்குச்சியாகவேனும் பயன்படட்டும். சிறு தீக்குச்சியும் பல பெரிய தீப்பிழம்புகளை பிரசவிக்கும் என்ற நம்பிக்கையில்.


இது இன்று நேற்று செய்திகளில் வரும் விடயமல்ல எப்போயிருந்தோ வந்துகொண்டேயிருக்கிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை என்ற செய்தி. ஏன் இந்த மனித உயிர்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்படுகிறது. இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்திருந்தாலும் கூட அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடிக்கலாமே தவிர சுட்டுத்தள்ளுவதற்கு என்ன அதிகாரமிருக்கிறது இலங்கை கடற்படைக்கு யார் கொடுத்தார் அந்த அதிகாரத்தை அவர்களுக்கு. இதைத்தவிர சில பதிவுகள் கொல்லச்சொல்வது இந்திய அரசுதான் என்கிறது யார் சொல்வார் உண்மையை.


உலகில் மனித உயிர்களின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. மிருகங்களுக்கு காட்டப்படும் அனுதாபம் கூட மனித உயிர்களுக்கு காட்டப்படுவதில்லை. யாராக இருந்தாலும் மனிதன் தானே அவன் உயிர் இருக்கும் வரையில்தானே அவன் வாழ்க்கை. அவனுக்கும் ஒரு குடும்பம் பிள்ளைகள் இருக்கும்தானே என்ற மனிதநேயம் மரித்துப்போய்விட்டதோ.. விலை மதிக்க முடியா மனித உயிர்கள் இப்பொழுதெல்லாம் சில்லறைத்தனமாக பறிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இவற்றையெல்லாம் நோக்கும் போது மனிதனுக்கு ஆறறிவுதானா என்ற சந்தேகம் எழுகிறது.ஐந்தறிவுகொண்ட எந்த மிருகமும் தன் இனத்தை தானே கொல்லும் இழி செயலை செய்வதில்லையே..


தன் வயிற்றுப்பிழைப்புக்காக கடலுக்கு மீன்பிடிக்கச்செல்பவன் தன் உயிர்தொலைத்து கரைதிரும்புவது கொடுமையிலும் கொடுமைதான். இந்தக்கொலைகளை செய்பவர்கள், செய்ய தூண்டுபவர்கள், ஆதரவளிப்பவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவர்களே அது யாராக இருந்தாலும் சரி. எதிரொலிகள் எட்டுதிசையிலும் ஒலிக்கட்டும். இனிமேலாவது நிறுத்தப்படட்டும் இந்த கொலை வெறி உயிர் பறிக்கும் தாக்குதல்கள்..

Riyas

மீனவர் வாழ்வு? (சீருடை மிருகம்)

ஓ........
சீருடைத் தரித்த
சீர்கெட்ட விலங்கே!


நீ...
தரையில் குடித்த
தமிழ் ரத்தம் போதாதென்றா
கடல் பக்கம்
நீட்டுகிறாய் உன்
நீண்ட நாக்கை?


எங்கள்...
ஓட்டு பொறுக்கிகளின்
மெத்தனத்தால்,
உயிர்பொறுக்கியாய் திரியும்
ஓநாய் கூடங்கள் நீங்கள்!


இன்று...
தன்மானம் பகை நெருப்பில்
எரிகிறது!
தமிழீழத்தின் அவசியம்
புரிகிறது!!


உலகே பகையை கண்டு கொள்!
உலகே பகையை கண்டுக் கொல்!!


எழுத்து... நான்,
இயக்கம்... மாணவன்,வெறும்பய(ஜெயந்த்) 

தமிழக மீனவர் படுகொலைகள்: இரு நாட்டு மீனவர் மோதலா?

ராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் என்பது தனித்த பிரச்சனையல்ல. இலங்கையின் இனவாதப் போக்கிற்கும் அதை எதிர்த்துக் கிளம்பிய ஈழ மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கும், இப்போது மாபெரும் இனப்படுகொலை ஒன்றின் மூலம் போர் முடித்து வைக்கப்பட்டிருப்பதற்கும், இலங்கைக்கு வெளியே தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை நசுக்குவதற்கும், மீண்டும் ஒரு போராட்டம் ஈழத்தில் வேர் விடாத படி அதன் அஸ்திவாரங்களில் ஒன்றாக பாம்பன் பகுதியை தங்களின் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதும், தனியார் – தாராளமயத்திற்காக கடலையும் கரையோரங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்க்கவும், இன்னும் பல்வேறு காரணங்களுக்காய் இந்திய, இலங்கை அரசுகளின் இந்த கூட்டுக்கொலை இராமேஸ்வரத்தில் நடத்தப்படுகிறது.
இக்கொலைகளை இலங்கை கடற்படைகள் முப்பதாண்டுகளாய் செய்தது. இப்போது மீனவர்களைக் கொல்லவென்றே கூலிப்படைகளை நிறுவியிருக்கிறது இலங்கை. இந்தியா இக்கொலைகளை மறைமுகமாக ஆதரிக்கிறது. விஸ்தரிப்பு எண்ணம் கொண்ட இந்திய அரசும், பௌத்த சிங்கள பேரினவாத அரசும் இணைந்து தங்களின் சொந்த சுயலாப வர்த்தக, அரசியல் நலன்களுக்காய இக்கொலைகளை செய்து கொண்டு, கண் துடைப்பு நாடகங்களையும் நடத்திக் கொண்டிருக்கின்றது.

இரு நாட்டு தமிழர்களிடையே பிளவு?

இராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் கடந்த முப்பதாண்டுகளாய் நடக்கிறது. சுமார் 500- க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் போர், ஈழ மக்களின் துயரம், ஈழம் என்கிற அளவிலேயே தங்களின் தமிழார்வத்தை வெளிப்படுத்திய தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் அதே அளவுக்கு தமிழக மீனவப் படுகொலைகளைக் கண்டித்ததில்லை.
ஈழ விவாகரம் தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்ட அளவுக்கு இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை தமிழகம் தழுவிய பிரச்சனையாக மாற்றப்பட்டதில்லை. மாபெரும் இன அழிப்பின் பின்னர், ஈழ மக்கள் இராணுவ நிழலில் அமைதியான பின்னர் இப்போது அதிகமாக இராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை பேசப்படுகிறது. அதுவும் சிறிய அளவில்தான். திராவிட இயக்க அரசியலிலும் மீனவ மக்கள் பிரச்சனை பேசப்பட்டதும் இல்லை. அதற்கு அக்கறையான எந்த முடிவுகளும் எடுக்கப்பட்டதும் இல்லை.
ராஜீவ் கொலைக்கு முன்னர் இலங்கைக் கடற்படைக் கொலைகள் என்று மட்டுமே (அதுதான் உண்மை) சொல்லப்பட்ட மீனவர் படுகொலைகள், ராஜீவ் கொலைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் நிகழ்த்தும் கொலைகள் என்று பிரச்சாரப்படுத்தப்பட்டது. போர் காலத்தில் மரியா என்ற படகில் வந்து புலிகள் சுட்டுக் கொன்றதாகச் சொன்னார்கள். இந்த நிலையில்தான் 2009 – மே மாதம் போர் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது புலிகள் இல்லை. ஆனால் மீனவர் படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போது சொல்கிறார்கள், “இலங்கை மீனவர்களின் வளங்களை இந்திய மீனவர்கள் கொள்ளையடிக்கிறார்கள், வலைகளை இந்தியப் படகுகள் சேதப்படுத்துகின்றன” என்கிறார்கள். இது தொடர்பாக இந்திய இலங்கை மீனவர்களிடையே நடந்த பேச்சு வார்த்தை தொடர்பாக ஆழமானதும் அவசியமானதுமான இக்கட்டுரையைப் படியுங்கள், பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம். (இலங்கை : இராமேஸ்வரம் மீனவர் சந்திப்பு நடப்பது என்ன? – அகில். http://inioru.com/?p=16420 )
அதாவது நாம் தமிழக மீனவர்களைக் கொல்கிறது இலங்கை கடற்படை என்கிறோம். அவர்களோ “தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள், மீன் வளங்களை அழிக்கிறார்கள், வலைகளை அறுத்தெரிகிறார்கள்” என்று தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உண்டு பண்ணுகிறார்கள். உண்மையில் தமிழக, ஈழத் தமிழ் மீனவர்களிடையே பிளவை உருவாக்கும் நோக்கம் யாருடையது? இரு நாட்டு மீனவர்களுடையதா? இரு நாட்டு அரசுகளுடையதா?
அந்த வகையில் கடைசியாக இலங்கையில் இருந்து வெளிவரும் வீரகேசரி இதழ் ( யாருக்கும் கேட்காத பருத்தித்துறை மீனவர்களின் குரல்!  http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27971 ) இப்படி  ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. ஈழ மக்கள் அமைதியாக்கப்பட்டு விட்ட நிலையில் அறிவுஜீவித்தளத்தில் இலங்கை அரசின் அரசியல் நிலைகளை முன்னெடுக்க விரும்பும் சிலர் பருத்தித்துறை மீனவர் குரலில் இப்போது பேசத் துவங்கியிருக்கிறார்கள்.
பருத்தித் துறைப் பகுதியைச் சார்ந்த மரியகுணஸ்டீன்,  // “இது சிங்க இறால் பிடிக்கும் காலம். இந்தக் காலத்தில் தெற்கிலிருந்து சிங்கள மக்களும் முனைப்பகுதிக்கு மீன்பிடிக்க வருகிறார்கள். கடல்மார்க்கமாகவே வந்து, அந்த வழியிலேயே அவர்கள் செல்கிறார்கள். இந்திய மீனவர்களால் தான் தொழிலில் எமக்கு அதிகம் நஷ்டம் ஏற்படுகிறது. நாம் வலை விரித்திருக்கும்போது விளக்குகள் எதுவுமின்றி வரும் அவர்கள் எமது வலைகளைக் கிழித்தெறிகிறார்கள். ரோலர் படகுகளால் எமது வலைகள் துண்டாக்கப்படுகின்றன. இதன் காரணமாக நாம் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுக்கிறோம். கடந்த வாரம்கூட சுமார் ஒன்றரை லட்சம் ரூபா விரயமானது. இதுகுறித்து நாம் அதிகாரிகள் பலரிடமும் முறையிட்டோம். ஆனால் சாதகமான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருவேறு நாடுகள் எனச் சொல்லிப் பிரிவினைவாதத்துடன் நாம் பார்க்கவில்லை. மனிதாபிமானம் வேண்டும் என்பதையே நான் கூற விரும்புகிறேன்” // என்று சொல்கிறார். இந்த அப்பாவி மீனவரை தன்னைப் போன்ற ஒரு ஒடுக்கப்பட்ட இனமான தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டிய சக்தி எது?
விசைப்படகுகளால் வலைகள் கிழிக்கப்படுவதும், விரித்து வைக்கப்பட்டிருக்கும் வலைகளை விசைப்படகுகள் இழுத்துச் செல்வதும், மீன் பிடி எல்லைகளை தீர்மானிப்பதில் வரும் குழப்பங்களும் மீன்பிடித் தொழிலில் மிக மிக சாதாரணமானது. இது தொடர்பான பிரச்சினை தமிழக மீனவர்களிடையே கூட அடிக்கடி நடப்பதுண்டு. மேலும் இந்தப் பிரச்சினை உலகெங்கும் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் வாழும் மீனவர்கள் அடிக்கடி சந்திக்கக் கூடியதுதான்.
இலங்கையில் தெற்கில் இருந்து வரும் சிங்கள் மீனவர்கள் வடக்கில் தமிழ் மீனவர்களின் மீன் பிடி உரிமையை கட்டுப்படுத்தவில்லையா? கடல் மீன் பிடி உரிமையில் இலங்கையின் பெருந்தேசிய சிங்கள வெறி கடலில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தவில்லையா?  இலங்கைக்குள்ளேயே நிலைமை இப்படி இருக்கும் போது ஒரு அப்பாவி மீனவனை தமிழக மீனவர்களுக்கு எதிராகப் பேசத் தூண்டும் குரல் இலங்கை அரசின் குரலல்லாமல் வேறு என்ன?

மீனவர்களின் நட்பு கடலின் ஆழத்தை விட அதிகமானது.

இந்திய இலங்கை மீனவர்கள் நட்பு மட்டுமல்ல உயிருக்கு உத்திரவாதமில்லாத உலகிலேயே உயிராபத்து அதிகமுள்ள தொழில்களில் ஒன்றாக மீன் பிடித்தொழிலில் மீனவர்கள் பேதம் பார்த்து பழகுவதில்லை. ஒரு சுரங்கத் தொழிலாளியின் உயிர் நாடியில் கசிந்து கொண்டிருக்கும் மரணம், அவனது எல்லையற்ற அன்பிற்கு அடையாளமாக இருப்பது போலதான் மீனவனின் அன்பும். அவன் உணர்வுகளால் உந்தப்படுகிறவன். சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டவன். தான் அன்பு செலுத்தும் ஒன்றுக்காக உயிரைக் கூடக் கொடுக்க அஞ்சாதவன்.
இதுதான் மீனவர்களின் உணர்வுபூர்வமான வாழ்வு. அதே நேரம் அவர்களுக்குள்ளே எந்தப்பிரச்சினைக்காக மோதிக்கொண்டாலும் அது மூர்க்கமாக இருக்குமளவு அப்பாவித்தனமாகவும் இருக்கும். அவர்கள் சமவெளியின் கறைபடியாத எளிய மனிதர்கள். தமிழக மீனவனாக இருந்தாலும் இலங்கை தமிழ் மீனவனாக இருந்தாலும் இதுதான் உண்மை. பாரம்பரிய மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் ஒரு மீனவனின் கருணையையும் அன்பையும் வேறெந்த சமூகங்களிடமும் காண்பது அரிது. அப்படி ஒரு நீண்ட கால அன்பும் நட்பும் கலந்துதான் தமிழக ஈழத் தமிழ் மீனவர்களின் நட்பு. கச்சத்தீவும் அந்தோனியார் கோவிலும் அந்த நட்பிற்கு நீண்டகால சாட்சியமாக நிற்கின்றன.
இது போக எல்லை தாண்டி புயல் மழையில் சிக்கி தத்தளிக்கும் மீனவர்களை, பரஸ்பரம் காப்பாற்றி கரை சேர்த்து உணவு கொடுத்து உறவு வளர்த்த கதை மீனவனுடையது. வேதாரண்யத்திலும் , பேசாலையிலும், மன்னாரிலும்,  யாழ்பாணத்திலும், பாம்பனிலும், தூத்துக்குடியிலும், கன்னியாகுமரியிலும், என்று இரத்தமும் சதையுமாக இரு நாடு மீனவர்களின் உறவுகளையும் எந்த அழிவு சக்திகளின் எல்லைகளும் பிரித்து விட வில்லை. ஆனால் இன்று?
இரண்டு அரசுகளின் எண்ணங்களை ஈடேற்றவும் இந்த இரு நாட்டு மீனவர்களும் பலிகடாவாக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசின் ஆதரவாளர்களோ அதை ஊதி விட்டு இந்த பிரிவினையை முன்னெடுக்கிறார்கள். தமிழக மீனவர்களைப் பொறுத்தவரையில் தடை செய்யப்பட்ட மடியை பயன்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் இந்த மடிகள் முதலில் அழித்தது மீன் வளத்தை அல்ல, ஏழை கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை. அது உள்ளூர் சிறு கட்டுமரக்காரனின் மீன் பிடி உரிமையை நசுக்குவது உண்மைதான். ஆனால் பிரச்சனை இதுவல்ல. தங்களின் சொந்த நலனை முன்னெடுக்க விரும்பும் அரசுகள் பழியை இவர்கள் மீது போட்டு, இவர்களை மோத விட்டு தங்களின் நலனை இராமேஸ்வரத்தில் முன்னெடுக்கின்றன.
உண்மையில் மீன் வளங்கள் இப்பிராந்தியத்தில் இல்லாது போகக் காரணம் பன்னாட்டு ஏக போக மீன் பிடி நிறுவனங்களே. மீன் வளம் பெருக வருடதிற்கு 45 நாட்கள் மீன் பிடித்தடையை உள்ளூர் மீனவர்களுக்கு கொண்டு வந்துள்ள இரு நாட்டு அரசுகளும் தங்களில் கடல்பரப்பில் ஏக போக பன்னாட்டு நிறுவனங்களை கடல் கொள்ளையில் ஈடுபட அனுமதித்துள்ளன. அவர்களுக்கு தடையும் இல்லை தண்டமும் இல்லை. ஆக இரு நாட்டு மீனவர்களும் போராட வேண்டியதும், எதிரியாக கருத வேண்டியதும்  இந்த பன்னாட்டு நிறுவனங்களைத் தானே தவிர தமிழக மீனவர்களை அல்ல.
பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்காகவும் மீன் பிடி நிறுவனங்களுக்காகவும் சேது சமுத்திரத் திட்டத்தை தமிழனின் வரலாற்றுப் பெருமையாகக் காட்டும் அரசியல் வாதிகள் அதை மீனவர்கள் எதிர்ப்பதை கணக்கில் எடுக்க மறுக்கின்றனர். சேதுக் கால்வாய் திட்டம் இரு நாட்டு மீனவர்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வணிகச் சூதாட்டம் என்பதுதான் உண்மை. கடலிலே இப்படியான கொள்ளைகள் ஒரு பக்கம் என்றால் கரையில் செயற்கைத் துறைமுகங்கள், கடலோர பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள்,  இறால் பண்ணைகள், என்று கடலோரங்களை தனியாரிடம் ஒப்படைக்க இன்னொரு சுனாமியாய் வருகிறது அடுத்தடுத்த திட்டங்கள்.
இவைகளை முன்னெடுக்கும் இந்திய அரசும், நீண்டகால அரசியல் நோக்கில் மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கும் இலங்கையும்தான் இரு நாட்டு மீனவ மக்களின் எதிரிகளே தவிர கொலை செய்யப்பட்டவனையே எதிரியாகச் சித்தரிப்பது இன்னுமொரு அயோக்கியத்தனமல்லவா? ஆனால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், கொலை செய்யும் இலங்கை கடற்படைக்குமான பிரச்சனையை இந்திய, ஈழ மீனவர்களுக்கிடையிலான பிரச்சனையாக ஹிந்து ராம், பேராசிரியர் சூரியநாராயணன் போன்றவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஹிந்து ராம் யார் என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

இணையத்திலிருந்து களத்திற்கு வாருங்கள்!

துனிசியாவிலும், எகிப்திலும் டிவிட்டர், பேஸ்புக் இணையங்கள் குறிப்பிடத் தக்க செல்வாக்கைச் செலுத்தினாலும் புரட்சியை அவை கொண்டு வந்து விடுவதில்லை. பெருந்திரள் மக்களை வீதிக்குத் திரட்டி வந்து ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதன் மூலமே அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் டிவிட்டரிலேயே தொடங்கி டிவிட்டரிலேயே இந்தப் பிரச்சனை தீர்ந்து விடாது நண்பர்களே! ஒன்று திரட்டிய சக்தியை எங்கே எப்படி வெளிப்படுத்தி நெருக்கடியை உருவாக்குகிறோம் என்பதில்தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது.
இதனால் நாமெல்லாம் உடனே களமிறங்கி வெற்றியை ஈட்டிவிடுவோம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை நோக்கி தெளிவான கொள்கை, நடைமுறையோடு நாம் இந்தப்பிரச்சினையை கொண்டு செல்வது சரியாக இருக்கும். சிலர் மீனவர் பிரச்சினைக்காக எந்த அரசியல் கட்சியையும் எதிர்க்க கூடாது என்றெல்லாம் தவறான கருத்து வைத்திருக்கிறார்கள். இது குறித்து பின்னர் எழுதுகிறேன்.
ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரணை வரம்புக்குட்பட்டுதான் பயன்படுத்த முடியும். தண்டகாரண்யாவில் மாவோயிஸ்டுகளும் . காஷ்மீரில் போராடும் சக்திகளும் அப்படி ஓரளவுக்கு பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்துவதுதான் சரியும் கூட, அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. மேலும் அந்த முரண்பாட்டை பயன்படுத்துமளவு அவர்கள் ஒரு சக்திகளாக இருக்கிறார்கள். அப்படி இல்லாத போது நாமும் அப்படி இறங்கினால் நம்மைத்தான் ஆளும் வர்க்கம் பயன்படுத்திக் கொள்ளும்.
இப்போதே மீனவர் படுகொலை குறித்து பல்வேறு சதிக்கதைகளை இலங்கை அரசு உருவாக்கி தனது எடுபிடிகள் மூலம் பரப்பத் துவங்கியிருக்கிறது. அதிலொன்றுதான் இருநாட்டு மீனவர்களுக்கிடையே மோதல் என்ற கதை. இதையும் நாம் எதிர்கொண்டு வீழ்த்த வேண்டிய அவசியமிருக்கிறது. இதன்றி வெறுமனே மனிதாபிமானத்துடன் மட்டும் இந்தப் பிரச்சினையை எளிமைப்படுத்தி புரிந்து கொள்வது சரியல்ல என்பதோடு ஆபத்தானதும் கூட.
____________________________________________________

- வெண்மணி

எங்க வீட்ல துக்கம் நடத்திருக்கு, பகிர்ந்து கொள்ள வருவீங்களா?

#tnfishermanஆத்மா பேசுகிறது... 

நான் இறந்து போயிருந்தேன்
எனக்காக
தமிழ்நாடே
எழவு வீடாய்
மாறியிருந்தது...

நீங்கள் கொடுக்கும்
"லட்சங்கள்
எம் புருஷனுக்கு ஈடாகுமா?"
என் மனைவி
தலையிலடித்து
கதறுகிறாள்.

விஷயம் என்னவென்று
உணராமல்
தாய் அழுவதால்
என் குழந்தைகளும்
வெடித்து அழுகின்றன.

இந்த வகை மரணத்தில்
இதுவே இறுதியாய் இருக்கட்டும்
என
டிவிட்டர்களும்
வலைப்பதிவுகளும்
தமிழ் உணர்வுடன்
அனல் பரப்பி
தகிக்கின்றன.

ஆனால்
ஒன்றை மட்டும்
என்னால் இயல்பாய்
எடுத்துக்கொள்ளமுடியவில்லை.

நீந்த இயலாத
என்னை இரையெடுத்த
அந்த சிங்கள அரக்கன்
தன்
பல் இடுக்கில்
சிக்கிய இறைச்சித்துண்டை
சிரித்துக்கொண்டே
நீக்கிக்கொண்டு
இருப்பதை

பார்க்கும் போதுதான்
என் ஆத்மாவே
மரித்துவிடும் போலிருக்கிறது.

- பாரதீ.

Monday, January 31, 2011

கண்ணீரில் மிதக்க வைத்தான்:(

மானங்கெட்ட, ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளிருக்கும் நாட்டில் பிறந்ததைத் தவிர வேறென்ன பாவம் செய்தார்கள் மீனவர்கள்? ஒன்றல்ல இரண்டல்ல ஐநூற்றி சொச்சம் மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடைசியாக (இதுவே கடைசியாக இருக்குமென வேண்டுகிறேன்) ஜெயக்குமார் என்ற மீனவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு கொடூரமான முறையில் சாகடித்துள்ளனர். ஐந்து லட்சமோ ஒரு லட்சமோ, அரசுப் பதவியோ, கட்சிப் பதவியோ எந்த விதத்திலும் அவரின் ஆன்மாவை அமைதிப்படுத்தாது. இணைய நண்பர்கள் தங்களால் இயன்றவரை உங்கள் நட்புலகத்திற்கும், உறவினர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எடுத்துச்சொல்லுங்கள். http://www.savetnfisherman.org/ என்ற தளத்தினை பரவலாக அறியச்செய்யுங்கள். Lets make a difference.









'மீனவ நண்பனாக' என்னென்ன செய்யலாம் - கருணாநிதி?

கடந்த 35 வருடங்களாக சுமார் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதாவது ஒரு மீனவ கிராம்த்தில் சராசரியாக 200 குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், சுமாராக மூன்று மீனவ கிராமங்களே தமிழகத்தில் அழிக்கப்பட்டிருக்கின்றன!

தான் சுட்டதாக இலங்கை ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் சுடப்பட்டு இறந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போன்றதொரு நிஜம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கபில் சிபல் போன்றோர்கள் கூறுவதை புறம் தள்ளிவிட்டு அப்பிரச்சினையை அணுகுவது போல், இவ்விஷயத்தில் செத்து மடிவது நம் இனம் மட்டுமே என்பதால், இலங்கை சொல்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டு, இலக்கில்லாமல் கூப்பாடு போடுவதை நிறுத்திவிட்டு, இனி ஒரு சாவு கூட இங்கு விழக்கூடாது என்ற எண்ணத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய அவசர அவசியம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு. இந்திய இலங்கை கடல் எல்லையில் தான் இப்பிரச்சினை நடக்கிறது. ஆக இப் பிரச்சினையின் முழுப்பொறுப்பும் மத்திய அரசாங்கத்தையே சார்ந்தது. மாநில அரசு தனது காவல் துறையை அனுப்பி மீனவர்களுக்கு பாதுகாப்பாக எல்லையில் நிறுத்த முடியாது. அதேபோல் தமிழக முதல்வர் இலங்கை அதிபரை அழைத்தோ அல்லது அங்கு சென்று பேசியோ இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது - உண்மை தான் ஏற்றுக் கொள்வோம். அதனால் தமிழக முதல்வர் கருணாநிதி இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை, பாவம் அவர் என்ன செய்வார்? என்று கேட்பது - சரியல்ல!

சரி இதற்கு விடிவு காண என்ன தான் செய்ய வேண்டும் கருணாநிதி?


* இந்தியாவிலேயே மிக நீண்ட கடற்கரை மற்றும், சுமார் 18 மைல் தொலைவிலேயே அண்டை நாட்டை கொண்டிருக்கும் ஒரு மாநிலத்திற்கு அதன் மக்களை, குறிப்பாக மீனவர்களை பாதுகாக்க இரு நாட்டு கடல் எல்லையில் நிரந்தர கடல் பாதுகாப்பு படையை நிறுத்த் வேண்டும்.

* அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் உள்ள நாடு இந்தியா என்று உலக நாடுகளுக்கு காட்டிக் கொள்ள வேண்டிய இக்கட்டான கால கட்டத்தில் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை ஒரு நொடியும் தாமதிக்காமல் மீட்டெடுக்க வேண்டும்.

* அண்டை நாட்டின் ஆபத்து உள்ள எல்லையோர மாநிலம் என்ற அடிப்படையில், காஷ்மீரைப் போன்று (அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும்) சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலமாக தமிழகத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியைப் பெற வேண்டும்.

* அந்த நிதியைக் கொண்டு சிறியதும், பெரியதுமான உலகத்தரத்திலான இருபது மீன்பிடி துறைமுகங்களை அமைத்து, ஒவ்வொரு நாளும் கிடைக்கும் கடல் உணவுப் பொருட்களை, ஓரிடத்தில் சேமிக்கும் கடல் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி, அங்கிருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும்.

* ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் மீனவர்கள் எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டால், அதற்கு நீதிமன்ற விசாரணையின் மூலம் தான் தண்டனை அளிக்கப்பட வேண்டுமே தவிர, எக்காரணம் கொண்டும் 'ஒரு' தமிழக மீனவனின் உயிர் பறிக்கப்பட்டால் கூட இலங்கையை எதிரி நாடாக அறிவித்து, சர்வதேச அரங்கில் இதற்கான தீர்வைக் காண வேண்டும்.

இவ்வளவுதான்! மீனவர்கள் பாதுகாப்பு பற்றி பேசும் பொழுது மீன்பிடி துறைமுகம், ஒருங்கிணைந்த கடல் போக்குவரத்து வசதி, ஏற்றுமதி எல்லாம் எங்கு வருகிறது? ஏன் வருகிறது? என்ற கேள்வி எழலாம். ஆனால் மத்திய அரசு நிதி உதவியில், கண்காணிப்பில் கிழக்கு கடற்கரை முழுதும் அடுத்தடுத்து நவீன மீன்பிடி துறைமுகங்கள், அவற்றையெல்லாம் இணைக்கும் நீண்ட தூர கடல் போக்குவரது செயல்பாடுகள், அதற்கும் மேலாக கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதிக்கென்றே பிரத்தியேகமான துறைமுகம்..... நினைத்துப் பாருங்கள், இதில் ஒரு அன்னிய நாட்டவன் உள்நுழைந்து தாக்குவது என்பது இந்திய தொழிற்துறையையே தாக்கியதாகாதா...?!

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாமே மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய விஷயமாயிற்றே, இதை கருணாநிதியால் எப்படி சாத்தியமாக்க முடியும் என்பது தானே கேள்வி? அதையும் பார்ப்போம்.

எதை வைத்துக் கொண்டு மத்திய அரசில், மூன்று கேபினெட், நான்கு இணை அமைச்சர் பதவிகளைப் பெற்றார்? எதை வைத்துக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழலை ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருக்கிறார்? அதே மந்திரத்தை வைத்துக் கொண்டுதான் மேற்கூறிய அனைத்தையும் சாத்தியமாக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் பாண்டியை சேர்த்து மொத்தம் 40 பாரளுமன்ற உறுப்பினர்களில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் இரு கம்யூனிஸ்டுகளை தவிர்த்து, மீதமுள்ள 29 எம்.பி களும் ஓரணியில் நின்றாலே போதும் - மேற்சொன்ன விஷயங்கள் சாத்தியம் தான். அதற்கு கருணாநிதி செய்ய வேண்டியது ஒன்று தான். மேற்கூறிய ஐந்து கோரிக்கைகள் அடங்கிய ஒரே மனு. அதை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஒரு குழு. அதற்கு தலைமையேற்க வேண்டியது எதிர்கட்சி தலைவி ஜெயலலிதா. போராட்டத்தை வடிவமைப்பது வைகோ மற்றும் நெடுமாறன். மேற்படி போராட்டத்தில் எடுக்கப்படும் எந்த விதமான முடிவுகளுக்கும் தி.மு.க வின் 18 எம்.பி களும் கட்டுப்படுவார்கள்! இதை கருணாநிதியே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!

அவ்வளவு தான்(!). இப்படி ஒரு நிலைப்பாடு எடுக்கப் பட்டால், மீதமுள்ள தேசிய கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பி களும் போராட்டக்குழுவின் முடிவுகளுக்கு உடன்பட்டாக வேண்டும். அப்படி உடன்படாதவ்ர்கள், அவர்கள் மட்டுமன்றி அவர்கள் பரம்பரையைச் சேர்ந்த எவருமே தமிழகத்தில் இனி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற இயலாத நிலையை உருவாக்க வேண்டியது, வைகோ, நெடுமாறன், சீமான் வகையறாக்களின் பொறுப்பு!

இது நடந்தால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வருமா? வராதா? -  கண்டிப்பாக வரும். ஆனால் பிரச்சினையே, மேற்சொன்ன மாதிரி ஒரு ஒற்றுமையான சூழ்நிலை உருவாக வேண்டும். அதை உருவாக்கும் பொறுப்பை முன்னெடுக்க வேண்டியது யார்? கருணாநிதியா? வைகோ வகையறாவா? அல்லது பொது மக்களா?

பொது மக்கள் எக்காலத்திலும் இதை முன்னெடுக்க மாட்டார்கள். பின்ன கருணாநிதியா? இப்பிரச்சினை தனக்கு விழும் ஓட்டை எந்த விதத்திலும் பாதிக்காது என்கிற போது அவரும் இதை முனெடுக்க மாட்டார். அப்படியானால் இவ்விஷயத்தில் அதிக பிரயத்தனப்படும் வைகோ உள்ளிட்டவர்கள் தான் இதை முன்னெடுக்க வேண்டும். சாத்வீகமான முறையில் கருணாநிதியை சம்மதிக்க வைக்க தொடர்ந்து முயல வேண்டும். வெற்றி கிட்டும் வரை முயல வேண்டும்.

ட்விட்டரில் எழுதுவது, வலைப்பூவில் திட்டுவது - இதெல்லாம் வேலைக்கு ஆகாது. மக்கள் எழுச்சியுற வேண்டும், தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்களும், எம்.பி களும் ஒன்றிணைய வேண்டும்...!

திஸ்கி: ஏய்... ஏய்... யாரப்பா...?  நல்ல கனவு, திடீர்னு எழுப்பி கெடுத்திட்டியே.. பாவி! ...ஏய் என்ன ஏம்ப்பா திட்டுற? நல்ல கனவுன்னா.. அடிக்கடி இதே மாதிரி கனவு காணு, உனக்கு தெரிஞ்சவங்கள எல்லாம் இதே போல கனவு காண சொல்லு. நெசத்துலயே நடக்காமயா போயிடப் போவுது?!

#tnfisherman இது எப்படி சாத்தியம் ஆனது

#tnfisherman  ஏதோ தொழில்நுட்ப ரீதியில் இந்த வார்த்தையை ட்விட்டர் தளத்தில் இருந்து சேகரிக்கிறது, இதனால் தமிழக மீனவர்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என்று நினைத்து நான் www.savetnfisherman.org  இந்த தளத்தை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். இதனால் நான் இந்த ட்விட்டர் விஷயத்தில் கூட பங்கு கொள்ளாமல் இரண்டு நாட்களாக  என் வேலையை கவனித்துக்கொண்டு இருந்தேன்.  ஆனால் இன்று #tnfisherman சந்திப்பும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும். இந்த பதிவை படித்தப்பின் எனக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இது எப்படி சாத்தியம் ஆனது என்று.  தொடர்ந்து சமுதாய விஷயங்களில் மவுனம் சாதித்த வலைப்பதிவர்கள் இன்று தமிழக மீனவர்களுக்காக ஒன்று கூடி இருக்கிறார்கள்.


என்னால் இந்த முயற்சிக்கு முடிந்தவரை  உதவி செய்ய இப்போது தயாராக இருக்கிறேன். இனி #tnfisherman  இந்த குழுவினர் எடுக்கும் ஒவ்வொரு  முடிவுக்கும்  பங்கு கொண்டு போராட இருக்கிறேன்.

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள் www.savetnfisherman.org இந்த தளத்தின் சுட்டியை உங்கள் அனைத்து நண்பர்களுக்கு FACEBOOK, TWITTER, மற்றும் EMAIL வழியாக அனுப்பி தெரியப்படுத்துங்கள். 

WWW.SAVETNFISHERMAN.ORG இந்த தளத்தில் இது வரை FOLLOWER ஆகாதவர்கள் உடனே தன்னை இணைத்துக்கொள்ளுங்கள்.  இந்த போராட்டத்தில் நம் பலத்தை காட்ட இது உதவியாய் இருக்கும்.


இதுவரை பெட்டிஷன் அனுப்பாதவர்கள் உடனே அனுப்புங்கள், உங்கள் நண்பர்களையும் இதில் பங்கு பெற செய்யுங்கள்.


 
 
 
 
 

வறிய மீனவர்களின் உயிர்கள் மலிவானவையா?!


திருகோணமலை துறைமுகத்தில் தரித்துநின்ற கடற்படையினரின் இரு மோதல் படகுகளை விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் பிரிவு 1995 ஏப்பிரல் மாதத்தில் தாக்கியழித்தது. குறித்த தாக்குதலுடன் 3ஆம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது. எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கின்றது. அன்று இரவு யாழ்ப்பாணத்தின் வடமராட்சிக் கிழக்கு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நான்கு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நான்கு குடும்பங்கள் தங்களுடைய குடும்பத்தலைவர்களை இழந்தன. அந்தக் குடும்பங்களின் சில பிள்ளைகள் கல்வி முன்னெடுப்பை விட்டு, தொழில் செய்ய வேண்டி ஏற்பட்டது.

1990களின் ஆரம்பத்திலிருந்து 2009 மே மாதம் வரையில் வடக்கு- கிழக்கு கடற்பகுதிகளில் தங்களுடைய வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுத்து வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு, விடுதலைப் புலிகள் என்ற காரணமும் கூறப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால், வடக்கு- கிழக்கு கரையோரங்களில் வாழும் மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களில் கணவன்மரை, பிள்ளைகளை தொழிலிலுக்கு அனுப்பி பறிகொடுத்தவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். இலங்கை மோதல்களுக்குள் தங்களுடைய கணவன்மாரை பறிகொடுத்தவர்களில் அதிகமானோர் மீன்பிடி சமூகத்துக்குள்ளேயே இருக்கின்றார்கள்.

கடலில் போராடி தங்களுடைய வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ளும் மீனவ சமூகம் இறுதிவரை அதற்க்காக போராட வேண்டியிருக்கிறது. கடல் கொந்தளிப்பு, மழை, சூறாவளி, அதிகாரங்களின் துப்பாக்கிகள் என்று எதனையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மீண்டும் மீண்டும் கடலலைகளுக்கு மத்தியில் போராடி வேண்டியிருக்கிறது.

இதே பரிதவிப்பை தமிழ்நாட்டு மீனவர்களும் 1984களில இருந்து சந்தித்து வருகிறார்கள் என்பது மிகவும் கவலைக்கிடமானது. என்ன இலங்கை மீனவர்கள் சந்தித்த உயிர் இழப்புடன் ஒப்பிடுகையில் இது குறைவு அவ்வளவே. எனினும், இதுவரை சுமார் 500க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இறைமைதங்கிய(?) துப்பாக்கிகளினால் பலிவாங்கப்பட்டிருக்கிறார்கள்;. மனித உரிமைகள், விழுமியங்கள் பற்றியெல்லாம் இவர்கள் எப்படி வாய் கூசாமல் பேசுகின்றார்கள் என்று நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. ஆனாலும், வெளியில் பேசிவிடவா முடியும்.

தமிழக சட்ட மன்ற தேர்தல்கள் அண்மித்துள்ள நிலையில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுகின்றமை அரசியற் தலைவர்களினால் மிகப்பெரிய அளவில் நோக்கப்படுகின்றது. தேர்தல் காலங்கள் வந்தால் தான் எல்லாப் பிரச்சினைகளும் மேடைக்கு வருகின்றன. இல்லாவிட்டால் சில தந்திகள், அறிக்கைகளுடன் அவை கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. இது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும்.

ஆனாலும், தங்களின் வாழ்வாதாரத்தை பெற்றுத் தருபவர்களை இழந்து விட்டு வறிய தமிழக மீனவக் குடும்பங்கள் அல்லற்படுவது தொடர்ந்து வருவதை அனுமதிக்க முடியாது. நலிந்த வடக்கு- கிழக்கு மீனவ சமூகம் சந்தித்து நிற்கின்ற பிரச்சினைகளையே தமிழக மீனவ சமூகமும் சந்தித்து நிற்கின்றது. பெரியண்ணனால், தன்னுடைய தம்பியை கட்டுப்படுத்த முடியவில்லையா? அல்லது அதற்கு முயற்சிக்கவில்லையா?? என்று விளங்கவில்லை.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் (இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதுவர்) நிருபமா ராவ் இலங்கை வந்திருக்கிறார். பேசியிருக்கிறார். அறிக்கைவிடுவார். போய்விடுவார். ஆனால், தமிழக மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதை தடுப்பதற்கான முழு உத்தரவாதத்தை அவரால் வழங்கமுடியுமா??? பதில் அனைவருக்கும் தெரியும். மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் என்று.

இந்திய பாரிய ரோலர் படகுகளின் அத்துமீறல்.

இலங்கை- இந்திய பாக்கு நீரிணைக் கடற்பகுதியில் தொடர்ந்தும் பிரச்சினை நிலவி வந்திருக்கிறது. ‘கச்சதீவு’ கையளிப்புக்கு முன்னர் இருந்து. அடிப்படையில் 1990களுக்குப் பின்னர் வடக்கு மீனவர்கள் பாரிய படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியில் இந்திய ரோலர் படகுகள் எந்தவித இடையூறும் இன்றி இலங்கை கடற்பகுதிகளுக்கு வந்து மீன்களை அள்ளிச் சென்றிருக்கின்றன. அதனையே, இப்போதும் செய்ய முனைகின்றன.

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்தொழில் சங்கங்கள் இணைந்து பாரிய ரோலர் இழுவைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பதற்கு தடை விதித்தன. எனினும், வல்வெட்டித்துறையில் 17 பாரிய இழுவைப் படகுகள் தொடர்ந்தும் தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதனையடுத்து, பாரிய இழுவைப் படகுகளைக் கொண்டு மீன் பிடிப்பதற்கு தடைவிதிக்குமாறு யாழ்ப்பாண கடற்றொழில் சங்கங்கள் இணைந்து இலங்கை அரசாங்கத்தை கோரின. இதனைக் கருத்திற்கொண்டு பாரிய இழுவைப் படகுகளில் மீனிபிடிப்பதற்கு அரசு தடை விதித்தது.

இது, மீனவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில், ஆழம் குறைந்த பாக்கு நீரினைப் பகுதியில் பாரிய ரோலர் இழுவைப் படகுகளின் மூலம் மீன்கள் பிடிக்கப்படும் போது அந்தப் பகுதியிலுள்ள பவளப்பாறைகள் சிதைக்கப்படுகின்றன. இதனால், மீன்களுக்கு தேவையான பிளாந்தன்கள் உற்பத்தி தடைப்படுகின்றன. இதனால், அந்தப் பகுதியில் மீன்வளம் குறைவடைகின்றன. இதுவே, அதற்கான அடிப்படைக் காரணமாகும்.

எனினும், இந்திய பாரிய ரோலர் இழுவைப் படகுகள் தொடர்ந்தும் இலங்கை மீனவர்களின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றனர். அத்துடன், இலங்கை மீனவர்களின் வலைகள் மற்றும் உபகரணங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை தடுப்பதற்கு யாழ்ப்பாண மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழக மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் பேச்சுக்கள் அவ்வப் போது நடந்து வருகின்றன. ஆனாலும், அத்துமீறல் தொடர்கின்றன.

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதும், இந்திய ரோலர்களின் அத்துமீறலும் வேறுவேறானவை. இரு விடயங்களும் தனித்தனியாக பேசித்தீர்க்கப்பட வேண்டும். அதனைவிடுத்து, இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எளியவர்களின் உயிர்கள் என்னவோ மலிவானவை என்று துப்பாக்கிகள் மட்டுமல்ல, பலரின் புத்திகளும் சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!
 
பதிவர்:

petitiononline தொடர்பான ஒரு விளக்கம் - நீச்சல்காரன்

petitiononline தளத்தில் தயாரித்துள்ள படிவத்தை கையெழுத்திட்டுக் கொண்டிருப்பீர்கள் நன்றி தொடருங்கள்
அதற்கு முன் சில விளக்கங்கள்.

இது எந்த சட்டப் புத்தகத்தையோ வரலாற்று ஆவணத்தை முன்வைத்தோ எழுதப்படவில்லை, சுடப்படும் மீனவர்களைக் கண்டு மன கொதிக்கும் ஒரு சாராசரி மனித மனநிலையில் எழுதப்பட்டது. மேலும் இது மனப் பிரதிப்பளிப்பைத்தான் காட்ட விளைகிறது கூரிய கருத்துக்களைத் தான் பிராதனமாக கொண்டிருக்கும் இதை வைத்து தர்கரீதியாக கேள்விகள் எழுப்பக்கூடாது என நினைக்கிறேன். கடல் வளத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற முறையில் பெட்டிஷன் வடிவமைக்கப்படவில்லை. "//In Our Opinion// {அடுத்த நாட்டு எல்லை இல்லை} சர்வதேச எல்லை கடந்து மீன் பிடிக்க உரிமை வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் "என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அதை மீறி இந்த கோரிக்கை இலங்கை மீனவர்களுக்கு எதிரானது என்று தவறான கருத்தை எடுத்துவைத்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

இந்தப் படிவம் petitiononline என்கிற தளத்தில் நாம் தொடங்கிய படிவமே. கையெழுத்தை உறுதி செய்ய விரும்பி அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல் உங்களுக்கு நன்றி தெரிவிக்கவே, அதில் கோரப்படும் நன்கொடை[donation]க்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த நன்கொடைகள் அந்த தளத்திற்கானவை. நன்கொடை தரவிரும்புகிறவர்கள் இந்த தளத்தை பிரபலப்படுத்தலாம்.

இந்தப் படிவம் எந்தளவிற்கு நம்பகமானது என்பதை வைத்துத் தான் இதன் பலமும் உள்ளது. கையோப்பம் இடுபவர்கள் விருப்பமில்லாதவர்களின் பெயர்களை எழுதி அவர்களுக்கு மனவருத்தம் அளிக்க வேண்டாம். உண்மையான ஆதரவு மட்டும் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

http://neechalkaran.blogspot.com/

மீனவ நண்பன்

தலைவா...!

உங்களை கடலில் தூக்கிப்போட்டால்

கட்டுமரமாக மிதப்பீர்களாமே...

ஆனால் நாங்கள் கடலில்

பட்டுப்போன மரமாக

வீசப்படுகிறோம்.

எங்கள் இனங்கள் பிணங்களாய்

மிதக்கின்றன..

நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும்

சுருட்டிக்கொள்ளுங்கள்...

அது அரசியல்வாதிகளின் அடிப்படை உரிமை..

ஆனால்

எங்கள் உரிமைகளுக்கு ஒரு கோடியாவது காண்பியுங்கள்..

கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு

இதயத்தில் இடம் கொடுத்தது போதும்..

எங்கள் உயிர் உடலில் தங்க

ஒரு இடம் கொடுங்கள்..

ஓட்டுக்காக இலவசங்களை அள்ளி

வீசுகிறீர்கள்...

எங்கள் உயிர் எங்கள் வசம் தங்க

ஒரு ஏற்பாடு செய்யுங்கள்..

எம் ஜி ஆர் படத்தில் நடித்தே மீனவ நண்பன் ஆனார்...

நீங்கள் அரசியல் மேடையில் நடித்து

மீனவ எதிரி ஆகி விடாதீர்..

கடைசியாக ஒரு வார்த்தை...

இலங்கைத்தமிழர்களைத்தான் காக்க முடியவில்லை..

இங்கே இருக்கிற தமிழர்களையாவது.........
பதிவர்: சி.பி. செந்தில்குமார்

தமிழக மீனவர்களின் ரத்தக்கண்ணீர்


இலங்கை ராணுவத்தினரின் ரத்தவெறிக்கு தமிழக மீனவரகளின் பலி தொடர் கதையாகிறது. தமிழக மீனவர்கள் உண்மையில் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற உண்மையை இந்திய அரசு மறந்து விட்டது. பிரான்சு நாட்டில் தன் இனத்தவர்கள் தலை பாகை அணிய தடை விதிக்க பட்டதை கண்டு பொங்கி எழுந்த நமது பாரத பிரதமர், பிரான்சு ஜனாதிபதியிடம் அதை முக்கிய பிரச்ச்னையாக பேசி, தீர்வை காண முயன்றார். ஆனால் இன்று இந்தியாவை சேர்ந்த மீனவர்கள் அன்னிய நாட்டு ராணுவத்தால் படுகொலை செய்ய படுவதை தடுக்க நடவடிக்கை எதுவும் எடுக்க நினைக்க கூடவில்லை.

மத்திய அரசு மந்திரி பதவியில் இருக்கும் தமிழக அமைச்சர்கள் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வ காண நினைப்பதையே பாவமாக கருதுகிறார்கள்.தன் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யவும், தன் குடும்பத்தினருக்கு பதவி வாங்கவும் வித விதமான சத்தியாகிரக போராட்டங்களை நடத்தும் தமிழக அரசியல்வாதிகள் நம் மக்கள் மாண்டு வீழவதை பற்றி கவலை கொள்வதே இல்லை.

இதற்கு தீர்வு தான் என்ன. அரசியல்வாதிகளிடம் ரத்தக்கண்ணீர் விட்டால் தீர்வு கிடைக்காது. மீனவர்கள் தங்கள் சாதி மத வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு ஒன்று சேர்ந்து தங்கள் பலத்தை தேர்தலில் காட்ட வேண்டும். ஒரு 50 தொகுதியிலாவது தாங்கள் ஒற்றுமையின் மூலம் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்க முடியும் என்று நிருபித்தால் தான் நீங்கள் சொல்வதை நாளை யாரும் கேட்பார்கள். ஆளும் கட்சியை எதிர்த்து வாக்களித்தால் பிரச்சனை தீரும் என்று சொல்ல வில்லை. ஆனால் தேர்தல் முடிவுகளையும் ஆட்சியாளர்களையும் முடிவு செய்யும் வலிமை உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் நிருபிக்க வேண்டும். இதற்கு தேவை உங்கள் ஒற்றுமை.

ஏனென்றால் ஆட்சியாளர்கள் காதுக்கு கேட்பது இரண்டு ஓசைகள் மட்டும். ஒன்று நோட்டு. மற்றொன்று ஓட்டு.

மீனவர்கள் பிரச்சனை பற்றி எழுத வேண்டுகோள் விடுத்த பதிவர் செந்தழல் ரவிக்கு நன்றி

பதிவர் - சதுக்க பூதம்

தமிழக மீனவன் - ஃபிளாஷ் விட்ஜெட்


<embed src='https://473441265180385674-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/valaimanaiblog/tnfishermanflash.swf' width='320' height='240' wmode='transparent'/></embed>
<br /> <a href="http://www.savetnfisherman.org/" target="_blank">Save TN Fisherman </a>



குறிப்பு : தங்கள் வலைப்பூவிற்கு ஏற்றவாறு கோடிங்கில் இருக்கும் 320 X 240 அளவை மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

240 X 180 - 280 X 210 - 360 X 270 - 400 x 300 - 640 X 480 -

பதிவர் சுகுமாரன் சுவாமினாதன்

என் தமிழன்


* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

* அரசியல்வாதி என்னும்
பிணம்தின்னி கழுகின் பின்
சாவமாய்த்திரிந்தான் என் தமிழன்...
அவன் எச்சிக்கையில் ஒட்டி
கிடக்கும் ஓற்றை வார்த்தைக்காய்
ஏங்கி தவித்தான் என் தமிழன்..

* ஈழத்தமிழனைத் தான் காவு
கொடுத்தோம் என்றால்,
எஞ்சிய எம் ஏழை மீனவத்தமிழனையும்
சாவுக்கு தாரைவார்க்கவோ
நாம் தரணியில் பிறந்தோம்?



இதயத்தில் இணைந்திட்டவன் ,
தன் சொந்தத்தின் வாழ்வுக்காய்,
கடல் தேடி சென்றானே!!!
கடலோடு போன தந்தை,
நம்மை கரைசேர்க்க, கரைவருவாரோ
என எதிர்ப்பார்த்து நிற்கும்
எந்தன் தாய்க்கும், தவித்து நிற்கும்
எந்தன் பிள்ளைக்கும
என்ன பதில் நாம் சொல்ல...?
சொல் தமிழா என்ன பதில் நாம் சொல்ல...






* முத்தமிழ் பேசுவோம் ...
எம் தமிழுக்கு செம்மொழி
உயர்வு வாங்கித்தர போர்க்கொடி
நீட்டுவோம்...ஆனால்
என் ஏழைத்தமிழனுக்கோ?

* ஏழைத்தமிழன் என்றால்
அத்துணை இளப்பமா?...
ஆறடுக்கு மாளிகையில் நீ இருக்க
உன்னை ஏற்றிவிட்ட
ஏழைக்கரங்கள் செய்வது அறியாமல்
ஏங்கி நிற்க....எச்சரிக்கை
விடுவதாய் ஏமாற்றுதல் நியாயமா?

* பொறுத்திருந்து பொறுத்திருந்து
நாட்களும் நரகமாக,
எங்கள் வாழ்கையும் வீணானது
தான் மிச்சம்...

* எங்கள் எச்சம் தின்னும்
தந்திர நரிகளே...
நாங்கள் மாறினால் நீங்கள்
மண்டியிட்டு வேண்ட காணி நிலமும்
உங்கள் கைக்குள் இருக்காது..
நாங்களும் மாறுவோம்... எத்தனை
நாள் தான் உன்னிடம் ஏமாறுவோம்..

* பொறுத்தது போதும்...
அரசனும் வேணாம்...
அரசியல் வேடதாரியும் வேண்டாம்...
இன்னும் பொறுத்தால்
மிச்சமே
மிச்சும்...
ஒன்று படு தமிழா
நம் தமிழனுக்காய்...
நம் தலைமுறைக்காய்..
இனி ஒரு விதி செய்வோம்..
சாட்டையை சுழற்றி மாற்றம் செய்வோம்
புறப்படு என் தமிழா.....

* அன்பைமட்டும் ஆயுதமாய்
கொண்டு ஆளப்பிறந்தவன்
என் தமிழன்...
அகிம்சை வழியன்றி யாதும்
அறியான் என் தமிழன்...

நம் போடும் சத்தம் சென்றடைய http://www.savetnfisherman.orgதளத்தில் நம் ஆதரவை தெரிவிப்போம்

இணைய தள முகவரி- http://www.savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- http://twitter.com/savetnfisherman
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

குரல் கொடுப்போம்... நம் உரிமையை நாமே பெறுவோம்...நன்றி___________

பதிவர் - ரேவா கவிதைகள்

#tnfisherman சந்திப்பும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும்.


#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.

பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.

2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)
மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.

பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.

3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.

பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.

4. ஆன்லைன் பெட்டிஷன்.
பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

பங்களிப்பு: நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.

5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.

பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.

6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.

பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.

==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

நேற்றைய சந்திப்புப் பற்றிய twitlonger
http://www.twitlonger.com/show/8g8uc1

நேற்று நடைபெற்ற கூட்டம் பற்றிய பத்ரியின் பதிவு
http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html

நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com
tnfishermancampaign@gmail.com

பெட்டிஷன் அனுப்பும் சுட்டி
http://www.petitiononline.com/TNfisher/petition.html
_____________

பதிவர் - கும்மி

'ரம்' காவடி எடுக்கப் போறேன் ரஜினி காந்துக்கு...!

ராஜபக்க்ஷே :

"தமிழ் நாட்டு
மொள்ளமாறி முடிச்சவிக்கைகளையெல்லாம்
என் சட்டைப் பையில் வச்சிருந்தேன்.
டில்லியிலிருக்கிற மூதேவிகளை
பெட்டிக்குள்ளே வச்சிருந்தேன்.
அந்த தைரியத்துல
ஈழத்தை எரிச்சேன்.
ஐனூறு மீனவர்களை
காவு கொடுத்தேன்; ஆனால் -
இந்த பிஸ்கோத்துகள் கிளர்ச்சியால்
எனக்கு வயித்தைக் கலக்குது.
அவங்க ட்வீட்டறதும், ப்ளாக்குறதும்,
ஏசுறதும், பேசுறதும்...!
ஈனமானமுள்ளவன் இனிமேல்
மீனவனைச் சுடுவானா?
அப்புறம், இந்தப் பக்கம் பார்த்தால்
எகிப்த்து;
அந்தப்பக்கம் பார்தால் துனீசியா...
அதனால் எனக்கு
நல்ல புத்தியைக் கொடு
புத்தம் சரணம் கச்சாமி..!"

***

அன்னை சோனியா :

"வேண்டாம் வேண்டாம்
போட்டுத் தள்ளு எனதருமை ராஜபக்ஷே...
மக்கள் ஸ்பெக்ட் ரத்தை மறக்க வேணும்.
நான் இன்னும் இத்தாலிக்கு
மணி ஆர்டர் செய்ய வேணும்.
என் சந்ததிகளும்
கோடானு கோடிகளைப்
பார்க்கவேணும்.
ரோமாபுரிப் போப்பாண்டவா,
உன் முன்னால் மண்டியிட்டு
வேண்டுகிறேன் - அவனை
இன்னும் 500 பேரையாவது
கொன்றுபோட வரம் கொடு..."

***

கருணா நிதி :

"அந்தப் பொம்பளைக்குப் புத்தியில்லை.
அவங்க் சம்பாதிக்க, நான் நாக்கு வழிக்கவா?
எனக்கு சந்ததிகளில்லையா?

என் திருக்குவளைக் குல தெய்வமே
இந்த தள்ளாத வயதிலும்
மஞ்சத் துண்டில் கோவணம் கட்டி
திருமா என்னைத் தோள் பிடிக்க
சேகர்பாபு கால் பிடிக்க
தட்டுத் தடுமாறியாவது
மூணு சுத்து, சுத்தி வாரேன்.
அந்த ராஜபக்சே ரவுடியை
வரப்போகிற தேர்தல் வரையாவது
கொலை செய்வதை தள்ளிப்போட
கொஞ்சம் தந்தி அடித்துச் சொல்லு...!"

***

ஜெயலலிதா :

"ஆடு, மாடு, கோழி வெட்ட தடை என்று
தப்பான சட்டம் போட்டேன் - என்
பன்னாரி மாரியம்மா!
வேப்பிலை ஆடை கட்டி,
வேண்டியவர்களையும் கூட கூட்டி,
அடி மேல் அடி வைத்து,
உன் கோவிலுக்கு நான் வாரேன்.
ஆயிரத்தெட்டு எருமைமாட்டை
(தமிழர்களைக் குறிக்கவில்லை)
காவு தாரேன்.
ஆனது ஆச்சு - இன்னும் ஒரு மூணு மாசம்.
தேர்தல் வரை பொருத்துக் கொள்ளேன்
முத்துமாரி;
தேர்தல் தாண்டி சுட்டுக்கச் சொல்லு
மாகாளி...!"

***

ராமதாஸ் :

"எஞ்சாமீ, முனீஸ்வரா,
ஆட்டுக்கிடா காவுபோட்டு,
கறியுஞ் சோறும் ஆக்கிவச்சி,
சாராயத்த ஊத்திவச்சி
(ஆபத்துக்குப் பாவமில்ல)
படையல் போட்டு வேண்டிக்குறேன் - நான்
அம்மாவோட கூட்டணின்னா,
மீனவனைப் போட்டுத் தள்ளு;
ஐய்யாவோட கூட்டணின்னா
தேர்தல் வரைக்கும் நிப்பாட்டு1"

***

விஜய காந்த்து, வைக்கோ, வெந்தது, வேகாதது :


"திருப்பதி மலையேறி வாரோம்,
சபரிமலை தேடி வாரோம்,
பழனியிலே மொட்டை போட்டு
பஞ்சாமிர்தம் நக்கப்போறோம்.
அதாவது, வந்து, வந்து, வந்து,
மீனவனைக் கொல்லணும் -
ஆனா கொல்லக் கூடாது...!"

***

சினிமா ரசிகர்கள் :

"மீனவன் செத்து கருவாடா ஆனா
எனக்கென்ன...?
ஈழத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினா
எனக்கென்ன...?
நான் -
'ரம்' காவடி எடுக்கப் போறேன்
ரஜினி காந்துக்கு.
அலகு குத்தி போகப்பொறேன்
அஜீத் குமாருக்கு.
வேல் காவடி எடுக்கப் போறேன்
விஜை படத்துக்கு.
முளைப்பாரி தூக்கப் போறேன்
மாறன் படத்துக்கு.
கோயில் கட்டிக் கும்பிடப் போறேன்
நமீதாக் குட்டிக்கு.
மீனவன் செத்து கருவாடா ஆனா
எனக்கென்ன...?
ஈழத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினா
எனக்கென்ன...?"

***

அப்துல் கலாம் :


"நல்ல வேளை -
என் கனவு நினைவான பிறகு
இந்த ராமேஸ்வரம் பிரச்சினை வந்ததே.
இனிமேல் நீ போட்டல் என்ன,
போடலைன்னா என்ன!
ஆனால் மீனவர்களே.........
நீங்கள் கனவு காணுங்கள் -
மீன் களைப் பற்றியல்ல -
உங்கள் உயிரைப் பற்றி...!"

புதிய பாமரன்

Sunday, January 30, 2011

Alternate Perspective #tnfisherman ஒரு பதில்...

மக்கள் வேக வேகமாக ட்விட்டுகளின் வழியாக தங்களின் ஆதங்கத்தை பதிந்து கொண்டிருக்கிறார்கள். நானும் ட்விட்டி கொண்டிருக்கும் பொழுது நம்ம மக்கள் மீனவர்களை காப்பாற்றுங்கள் என்னும் அமைப்பின் கீழ் இயங்கும் தளத்தில் ஒரு கட்டுரையை யாரோ எழுதி அங்கு வெளியிட்டுருந்தார்கள்.



அந்த கட்டுரை மிக்க கரிசனத்துடன் ஆரம்பிப்பது போல ஆரம்பித்து எல்லாமே நம்ம தப்பு. இலங்கை கப்பற்படையின் மீது எந்த தப்புமே இல்லங்கிற மாதிரி முழு பூசணிக்காயையும் மறைத்து அவ்வளவு அழகாக எழுதியிருக்கார். படிச்சா, நீங்களும் மனது மாறிட வாய்ப்பு இருக்கு. அந்த கட்டுரையில் சொல்லி இருக்கு விடுதலை புலிகளை இவர்கள் ஒரு காலத்தில் ஆதரித்ததால், இலங்கை இவர்களை வெறுப்பதற்கு எல்லா முகாந்திரமும் இருப்பதாக சப்பையும் கட்டி இருக்கிறார். ஒரு இடத்தில கூட கச்சை தீவை நாம ‘தாரை’ வார்த்துக் கொடுத்திருக்க கூடாதுன்னு ஃபீல் பண்ணவே இல்லை. இன்னும் என்னன்னவோ உளறி கொட்டப்பட்டிருக்கிறது நீங்களே படிச்சிக்கோங்க இங்க...
Alternate Perspective on Tamil Nadu Fishermen issues .
படிச்சவுடன் எனக்கு நியாயமாக தோன்றிய பதிலையும், கேள்வியையும் அங்கயே பதிஞ்சிருக்கேன். என்னுடன் தருமியும் கூடவே இருந்ததால் அவரிடமும் அந்த இணைப்பை கொடுத்து படிக்க வைத்ததின் பெயரில் அவரும் பதில் கொடுத்திருக்கார். இப்போ இருவரின் பதிலையும் இங்கு கொடுக்கிறோம், நீங்க அந்த கட்டுரையை படிச்சிட்டு வாசிச்ச மேட்டர் புரியும். நன்றி!


இது என்னோட பின்னூட்டம் அங்கே இட்டது:


A well written essay with lots of 'bullet' points darted against Indian fisherman interest. So, unregulated, over exploitation of harvest is happening in Indian waters by Tamil fisherman in particular. Therefore, in order to regulate give it to open market so that small scale fisherman can completely be wiped out one day in the future from their only known profession which is fishing for their livelyhood.


Anyway, here is my question - in the first place way before GOI handed down "the Kacchatheevu" to Sri Lanka would they studied the pros and cons of Indian fisherman loss due to signing off the island? Would they hold any general consensus and dialogues with Indian east coast fisherman?


Why is that only our side of population should reduce their needs, lose their lands and yet get blamed with surmounting needs of our own population. I do not understand your foreign policy, with such a huge bulging population of ours we go ahead give away the very little land(the island) we have, however it is also geopolitically strategical hot spot!! Still you are trying to justify where and how strategically failed. I believe we pay a big price geopolitically one day by losing that piece of land! Shame on us!!


இது தருமியோட பின்னூட்டம் அங்கே இட்டது:


I very much consider this post a badly timed one. It tries to side track people from the ISSUE that is being discussed now – it is all about the life and safety of OUR fishermen and NOT on the economic cobwebs between the nations.
The economic and trade affairs talked about in the essay – a very inconvenient place to discuss it here. Actual problem is entirely different. The author very CONVENIENTLY forgets the naked and vulgar truth before us now.

//SL considers them as enemies//

Yes .. It is very natural with the relationships between Tamils and Singhalese. The natural enmity is there for long. Everyone knows it. Present problem is hatched only by this enmity.

//if our fishermen are going to SL borders to catch then its definitely wrong,/

GOOD LOGIC. But how many Singhalese fishermen were arrested/ tortured/ Killed/ maimed by indian coast guard so far? How come on one side you have so much brutality? Are the fishermen of Sri Lanka are saints not entering indian border? And above all, on whose side are you? Are you talking for the 500 plus killed Tamil fishermen or their killers, I wonder?

//“rettai madi valai”?//

No baby on earth would imagine that all these are all due to the “rettai madi valai”

//we also helped LTTE which is legitimate to us but terrorists to SL//

GREAT. You have hit the bull’s eye at last!

//mistake is very much on our side too.//

YES… we have an inefficient govt at the centre and state and many fickle minded people like you among us.

//we can never resolve this problem by a Defense mechanism.//

should we follow our great gandhian dharma??!! Shall we start some SATYAGRAHA?! And our kind-hearted rajapakshae will settle all the problems smoothly!!

இந்தக் கட்டுரையை எழுதியவர் நீரோவிற்கு உறவினரா? வீடு இங்கே தீப்பிடித்து எரிகிறது. இவர் பொருளாதாரம் பேசுகிறார்!

பி.கு: தருமியின் பதிவு இங்கே...470. Alternate Perspective #tnfisherman ... ஒரு பதில்..


Thekkikattan|தெகா