Showing posts with label India. Show all posts
Showing posts with label India. Show all posts

Saturday, January 29, 2011

தமிழர்களின் எழுச்சி.. #tnfisherman...


"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சால மிகுத்துப் பெயின்"

வண்டியில் ஏற்றும் சுமை மயிலிறகே ஆனாலும் குறிப்பிட்ட அளவினைத் தாண்டும்போது வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பது குறள்.

இந்திய அரசின் கோழைத்தனமும் சுயநலமும் நிறைந்த 'இறையாண்மை' வண்டியில் தொடர்ந்து ஏற்றப்பட்டுக் கொண்டிருப்பது மயிலிறகல்ல- தமிழ்மீனவனின் உயிர். இதோ முறியத் துவங்கி இருக்கிறது இறையாண்மை அச்சு!

தமிழக மீனவன் இலங்கை ராணுவத்தால் சுடப்பட்டு இறந்ததும். இத்தனை நாள் இல்லாது இணைய உலகில் திடீரென ஒரு எழுச்சி நெருப்பாக பற்றிக்கொள்ளும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. சமூகக் கோபமும், அக்கறையும் சராசரி இந்தியனிடம் குறிப்பாக தமிழனிடம் இல்லாமல் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நண்பர் TBCD அனுமன் வால் தீயென பற்றவைத்த சிறுநெருப்பு இன்று உலகம் முழுதும் பரபரப்பாக பேசப்படுகிறது.

தமிழ் ஈழத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இன அழிப்பு உச்சகட்டத்தை அடைந்தபோது இந்திய ஊடகங்கள் அதை திட்டமிட்டே மறைத்தன. அப்போது இப்படி ஒன்று நடந்திருந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கும். நம் இப்போதாவது விழித்துக்கொண்டோமே...

இப்படித் தொடர்ந்து ட்விட்டுவது இரண்டொரு நாளில் குறைந்துபோகும் என்றுதான் கருணாநிதி முதலான அரசியல் சுயநலங்கள் கணக்குப் போட்டிருக்கும். ஆனால் உலகின் அத்தனை ஊடகங்களையும் திரும்பிப்பார்க்க வைத்த இணையதள நண்பர்கள் அனைவருக்கும் என் சல்யூட்.

இப்படி ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் மாற்றம் நிச்சயம் வரும்.இந்த போலி அரசியல் வியாதிகளையும் நம்மால் துடைத்தொழிக்க முடியும்.

"நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 
நாடொறும் நாடு கெடும்"

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும். 

இது சம்பந்தமான பதிவுகள்... ( இணைப்புகள் விடுபட்டிருந்தால் தயவு செய்து பின்னூட்டங்களில் தெரியப்படுத்துங்கள்)



#TNFisherman ட்விட்டரில் ஒரு உணர்வுத்தீ


மீனவர்களுக்காக டிவிட்டர் நெருப்பு! #tnfisherman

#tnfisherman இந்த திடிர் எழுச்சி எப்படி சாத்தியம்?


ட்விட்டரில் நடக்கும் போராட்டம்!!!!!#tnfisherman


#tnfisherman மெளனசாட்சியின் மூன்று கவி தைகள்


மீனவர்களுக்காக காகித ஆயுதம் செய்வோம்

தண்ணீரிலும் கண்ணிரிலுமே வாழ்கை.


மீனவ நண்பன் - டிவிட்டருக்கு வாருங்கள் #ட்ன்பிஷேர்மன்



இணையத்தில் மீனவர்களுக்கு என்ன செய்யலாம்?