Monday, January 31, 2011

petitiononline தொடர்பான ஒரு விளக்கம் - நீச்சல்காரன்

petitiononline தளத்தில் தயாரித்துள்ள படிவத்தை கையெழுத்திட்டுக் கொண்டிருப்பீர்கள் நன்றி தொடருங்கள்
அதற்கு முன் சில விளக்கங்கள்.

இது எந்த சட்டப் புத்தகத்தையோ வரலாற்று ஆவணத்தை முன்வைத்தோ எழுதப்படவில்லை, சுடப்படும் மீனவர்களைக் கண்டு மன கொதிக்கும் ஒரு சாராசரி மனித மனநிலையில் எழுதப்பட்டது. மேலும் இது மனப் பிரதிப்பளிப்பைத்தான் காட்ட விளைகிறது கூரிய கருத்துக்களைத் தான் பிராதனமாக கொண்டிருக்கும் இதை வைத்து தர்கரீதியாக கேள்விகள் எழுப்பக்கூடாது என நினைக்கிறேன். கடல் வளத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என்கிற முறையில் பெட்டிஷன் வடிவமைக்கப்படவில்லை. "//In Our Opinion// {அடுத்த நாட்டு எல்லை இல்லை} சர்வதேச எல்லை கடந்து மீன் பிடிக்க உரிமை வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் "என்றுதான் எழுதப்பட்டுள்ளது. அதை மீறி இந்த கோரிக்கை இலங்கை மீனவர்களுக்கு எதிரானது என்று தவறான கருத்தை எடுத்துவைத்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

இந்தப் படிவம் petitiononline என்கிற தளத்தில் நாம் தொடங்கிய படிவமே. கையெழுத்தை உறுதி செய்ய விரும்பி அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல் உங்களுக்கு நன்றி தெரிவிக்கவே, அதில் கோரப்படும் நன்கொடை[donation]க்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த நன்கொடைகள் அந்த தளத்திற்கானவை. நன்கொடை தரவிரும்புகிறவர்கள் இந்த தளத்தை பிரபலப்படுத்தலாம்.

இந்தப் படிவம் எந்தளவிற்கு நம்பகமானது என்பதை வைத்துத் தான் இதன் பலமும் உள்ளது. கையோப்பம் இடுபவர்கள் விருப்பமில்லாதவர்களின் பெயர்களை எழுதி அவர்களுக்கு மனவருத்தம் அளிக்க வேண்டாம். உண்மையான ஆதரவு மட்டும் வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

http://neechalkaran.blogspot.com/

No comments:

Post a Comment