Monday, January 31, 2011

'ரம்' காவடி எடுக்கப் போறேன் ரஜினி காந்துக்கு...!

ராஜபக்க்ஷே :

"தமிழ் நாட்டு
மொள்ளமாறி முடிச்சவிக்கைகளையெல்லாம்
என் சட்டைப் பையில் வச்சிருந்தேன்.
டில்லியிலிருக்கிற மூதேவிகளை
பெட்டிக்குள்ளே வச்சிருந்தேன்.
அந்த தைரியத்துல
ஈழத்தை எரிச்சேன்.
ஐனூறு மீனவர்களை
காவு கொடுத்தேன்; ஆனால் -
இந்த பிஸ்கோத்துகள் கிளர்ச்சியால்
எனக்கு வயித்தைக் கலக்குது.
அவங்க ட்வீட்டறதும், ப்ளாக்குறதும்,
ஏசுறதும், பேசுறதும்...!
ஈனமானமுள்ளவன் இனிமேல்
மீனவனைச் சுடுவானா?
அப்புறம், இந்தப் பக்கம் பார்த்தால்
எகிப்த்து;
அந்தப்பக்கம் பார்தால் துனீசியா...
அதனால் எனக்கு
நல்ல புத்தியைக் கொடு
புத்தம் சரணம் கச்சாமி..!"

***

அன்னை சோனியா :

"வேண்டாம் வேண்டாம்
போட்டுத் தள்ளு எனதருமை ராஜபக்ஷே...
மக்கள் ஸ்பெக்ட் ரத்தை மறக்க வேணும்.
நான் இன்னும் இத்தாலிக்கு
மணி ஆர்டர் செய்ய வேணும்.
என் சந்ததிகளும்
கோடானு கோடிகளைப்
பார்க்கவேணும்.
ரோமாபுரிப் போப்பாண்டவா,
உன் முன்னால் மண்டியிட்டு
வேண்டுகிறேன் - அவனை
இன்னும் 500 பேரையாவது
கொன்றுபோட வரம் கொடு..."

***

கருணா நிதி :

"அந்தப் பொம்பளைக்குப் புத்தியில்லை.
அவங்க் சம்பாதிக்க, நான் நாக்கு வழிக்கவா?
எனக்கு சந்ததிகளில்லையா?

என் திருக்குவளைக் குல தெய்வமே
இந்த தள்ளாத வயதிலும்
மஞ்சத் துண்டில் கோவணம் கட்டி
திருமா என்னைத் தோள் பிடிக்க
சேகர்பாபு கால் பிடிக்க
தட்டுத் தடுமாறியாவது
மூணு சுத்து, சுத்தி வாரேன்.
அந்த ராஜபக்சே ரவுடியை
வரப்போகிற தேர்தல் வரையாவது
கொலை செய்வதை தள்ளிப்போட
கொஞ்சம் தந்தி அடித்துச் சொல்லு...!"

***

ஜெயலலிதா :

"ஆடு, மாடு, கோழி வெட்ட தடை என்று
தப்பான சட்டம் போட்டேன் - என்
பன்னாரி மாரியம்மா!
வேப்பிலை ஆடை கட்டி,
வேண்டியவர்களையும் கூட கூட்டி,
அடி மேல் அடி வைத்து,
உன் கோவிலுக்கு நான் வாரேன்.
ஆயிரத்தெட்டு எருமைமாட்டை
(தமிழர்களைக் குறிக்கவில்லை)
காவு தாரேன்.
ஆனது ஆச்சு - இன்னும் ஒரு மூணு மாசம்.
தேர்தல் வரை பொருத்துக் கொள்ளேன்
முத்துமாரி;
தேர்தல் தாண்டி சுட்டுக்கச் சொல்லு
மாகாளி...!"

***

ராமதாஸ் :

"எஞ்சாமீ, முனீஸ்வரா,
ஆட்டுக்கிடா காவுபோட்டு,
கறியுஞ் சோறும் ஆக்கிவச்சி,
சாராயத்த ஊத்திவச்சி
(ஆபத்துக்குப் பாவமில்ல)
படையல் போட்டு வேண்டிக்குறேன் - நான்
அம்மாவோட கூட்டணின்னா,
மீனவனைப் போட்டுத் தள்ளு;
ஐய்யாவோட கூட்டணின்னா
தேர்தல் வரைக்கும் நிப்பாட்டு1"

***

விஜய காந்த்து, வைக்கோ, வெந்தது, வேகாதது :


"திருப்பதி மலையேறி வாரோம்,
சபரிமலை தேடி வாரோம்,
பழனியிலே மொட்டை போட்டு
பஞ்சாமிர்தம் நக்கப்போறோம்.
அதாவது, வந்து, வந்து, வந்து,
மீனவனைக் கொல்லணும் -
ஆனா கொல்லக் கூடாது...!"

***

சினிமா ரசிகர்கள் :

"மீனவன் செத்து கருவாடா ஆனா
எனக்கென்ன...?
ஈழத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினா
எனக்கென்ன...?
நான் -
'ரம்' காவடி எடுக்கப் போறேன்
ரஜினி காந்துக்கு.
அலகு குத்தி போகப்பொறேன்
அஜீத் குமாருக்கு.
வேல் காவடி எடுக்கப் போறேன்
விஜை படத்துக்கு.
முளைப்பாரி தூக்கப் போறேன்
மாறன் படத்துக்கு.
கோயில் கட்டிக் கும்பிடப் போறேன்
நமீதாக் குட்டிக்கு.
மீனவன் செத்து கருவாடா ஆனா
எனக்கென்ன...?
ஈழத்தைக் கொளுத்தி சாம்பலாக்கினா
எனக்கென்ன...?"

***

அப்துல் கலாம் :


"நல்ல வேளை -
என் கனவு நினைவான பிறகு
இந்த ராமேஸ்வரம் பிரச்சினை வந்ததே.
இனிமேல் நீ போட்டல் என்ன,
போடலைன்னா என்ன!
ஆனால் மீனவர்களே.........
நீங்கள் கனவு காணுங்கள் -
மீன் களைப் பற்றியல்ல -
உங்கள் உயிரைப் பற்றி...!"

புதிய பாமரன்

No comments:

Post a Comment