Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Saturday, January 29, 2011

இணையத்தால் என்ன சாதிக்கலாம்? #tnfisherman

இணைய தளம்
டுவிட்டர்
ஃபேஸ்புக்
கடந்த சில நாட்களாகவே டுவிட்டர் பொங்கி குமுறிக் கொண்டிருக்கிறது, ப‌ல பத்தாயிரம் டுவிட்டுகளைக் கடந்துகொண்டிருக்கிறது. சற்றேறக்குறைய அனைத்து தமிழ் பதிவர்களும் சளைக்காமல் டுவிட்டர் தகவல்களை அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். தமிழ் இணைய உலகம் ஒருமுகமாக ஒன்றிணைந்து அரசுகளை எதிர்த்து குரல் கொடுப்பது இதுவே முதல் முறை எனக் கருதுகிறேன். மட்டுமல்லாது இணையப்பயன்பாடு இல்லாதவர்களுக்கும் கூட இது சென்று சேர்ந்து ஒரு அலையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இணையத்தால் என்ன சாதிக்கலாம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுவருகிறது. ஆனால் கொதிக்கும் பாலில் பொங்கும் நுரை போல கொதிப்பு அடங்கியதும் வலுவிழந்து போகும். ஏனென்றால் இது உணர்ச்சி வேகத்தில் ஒருமுகப்படும் ஒரு அலை.



ஆனால், நம் கோபம் நியாயமானது. இந்த எழுச்சியின் அடிப்படையான பாதிக்கப்பட்டோருக்காக‌ குரல் கொடுப்பது என்பது இன்றியமையாத் தேவையானது. இந்த நியாயமும் தேவையும் உணர்ச்சி வேகத்தின் மீதும், இரக்க உணர்ச்சியின் மீதும் ஏறிப் பயணிப்பது இலக்கைச் சேர உதவாது என்பதை நாம் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும். அறிதலின் மீது, தேடலின் மீது, உண்மையின் மீது பயணப்படாத வேகம் அடங்கிப் போவது இயல்பானது. சில‌ டுவிட்டுகளை அனுப்பிவிட்டு, சில நாட்கள் பேசிவிட்டு நகர்ந்துவிட்டோமென்றால் நேற்றைய ஜெயக்குமார், நாளைய ஜெயக்குமாரகவும் தொடரும்.



இது மீனவர்களின் சோகம் மட்டுமேயல்ல. அரசின் அலட்சியம் என முடித்துக்கொள்வதும் அல்ல. இது திட்டமிட்டு நிகழ்த்தபடுபவை என்பதை நாம் உணர வேண்டும். இந்தக் குரல் தமிழ்நாட்டை தாண்டி ஒலிக்கவில்லை, நாங்கள் இந்தியர்கள் இல்லையா? என இன்று கேட்பவர்களில் எத்தனை பேர் தண்டகாரண்யாவில் கொல்லப்படும் இந்தியர்களுக்காக குரல் கொடுத்தவர்கள்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? காஷ்மீரில் கல்லெறிந்த குழந்தைகள் சுட்டுக்கொல்லப்பட்டனரே, இந்தியாவில் எப்படி பிரிவினைவாதம் பேசலாம் என எண்ணியவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? கொன்றால் மட்டும் தானா? தண்ணீர் வரவில்லை என்று சாலை மறித்தபோது திரைப்படத்திற்கு நேரமாகிறது என்று திட்டியவர்கள் எத்தனை பேர்? விலைவாசி உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சம்பளம் வாங்கவில்லையா என வக்கணை பேசியவர்கள் எத்தனை பேர்? தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும்போது இன்னும் என்னதான் வேண்டும் இவர்களுக்கு என ஏகடியம் பேசியவர்கள் எத்தனை பேர்? அவர்கள் இந்தியர்கள் இல்லையா? அல்லது அந்த பாதிப்புகள் உங்களுக்கு இல்லையா? எல்லாவற்றையும் தனித்தனியே பார்த்து தவிர்க்க காரணம் தேடிய அனைவருக்கும் இந்த டுவிட்டர் பாட்டுகள் இன்னுமொரு பொழுது போக்கு.



இவை அனைத்திலும் ஊடாடும் இழை ஒன்றுண்டு. காஷ்மீரில் கல்லெறிந்தவர்களுக்கு சுதந்திர தாகமுண்டு. அவர்களின் சுதந்திரத்தை துப்பாக்கிகளால் துளைப்பது இந்திய அரசு. அவர்களின் வாழ்வுரிமையில் காட்டும் அதே அலட்சியம் தான் இலங்கையால் சுடப்படும் மீனவர்களின் வாழ்வுரிமையிலும் காட்டப்படுகிறது. காஷ்மீரிகளைச் சுடுவது இந்திய அரசு, மீனவர்களைச் சுடுவது இலங்கை அரசு. அரசுகள் வேறு ஆனால் அவைகளின் நோக்கம் ஒன்று. ஆஸ்திரேலியாவில் சிலர் கொல்லப்பட்டவுடன் வெடித்தெழுந்த அரசு, ஐநூற்றுக்கும் அதிகமாக மீனவர்கள் செத்து வீழ்ந்த பின்னரும் தன் உறக்கம் கலைய மறுக்கிறது என்றால் காரணம் என்ன? அமெரிக்காவில் ஒரு இந்தியன் விபத்தில் மரணமடைந்தாலும் ஆதங்கப்படும் அரசு, வளைகுடாப் பாலையில் வறுபட்டு விழும் இந்தியர்களுக்காக சொட்டுக் கண்ணீரும் வடிப்பதில்லை என்றால் காரணம் என்ன? ஆளும்வர்க்க நலன்களுக்கு உகந்தவர்களுக்காக மட்டுமே அசைந்து கொடுப்பது தான் அரசு. மற்ற அனைவரும் தேர்தலுக்கான புள்ளிவிபரம் மட்டுமே.



மீனவர்களை கடலிலிருந்து மட்டுமல்ல கடற்கரையிலிருந்தும் அகற்ற நினைக்கிறது இந்திய அரசு. சிரமப்பட்டு ஏன் மீன்பிடிக்க வேண்டும் என சுய உதவிக்குழுக்கள் மூலம் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொடுக்கிறது. மறுபுறம் கடலில் சுட்டுக்கொல்ல அனுமதி கொடுக்கிறது. நினைத்துப்பாருங்கள், இந்தியாவின் இராணுவ பலத்திற்கு முன்னால் இலங்கை சுண்டைக்காய். அந்த சுண்டைக்காய் இந்தியாவை எதிர்த்து ஐநூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்திருக்க முடியுமா? இந்தியாவின் அனுமதி இல்லாமல் துப்பாக்கியை தூக்கத்தான் முடியுமா?



இந்த இந்தியாவை எதிர்த்து காஷ்மீரில் போராடுபவர்களை பிரிவினைவாதிகள் என்று எப்படி கூறுவீர்கள்? வடகிழக்கில் போராடுபவர்களை எப்படி தீவிரவாதிகள் என்பீர்கள்? அவர்கள் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என்றால் இலங்கை கடற்படை மட்டும் எப்படி உங்களுக்கு எதிரியாகும்? இலைகளைக் கிள்ளிப் போட்டு நச்சுமரத்தை வீழ்த்திவிட முடியுமா? வேரோடு வெட்டி வீழ்த்த வேண்டும். அதற்கு தமிழக மீனவர்களை கொல்கிறார்களே என்று இரக்கப்படுவது மட்டும் போதுமானதல்ல. அதிகாரவர்க்கத்தின் நலன்கள் என்ன? அதை ஆட்டுவித்துப் பலனடைவது யார் என்பதை கண்டுகொள்ளாமல் இருக்கும் வரை எதுவும் இங்கு சாதியமில்லை. கண்டு கொள்வோம். வங்கக்கடலின் நீரிலிருந்து பொங்கி எழட்டும் ஒரு நெருப்பு அலை.



தொடர்புடைய இடுகைகள்


தமிழக மீனவர்களை கொல்லச்சொல்வது இந்திய அரசுதான்

மீனவர்கள் வலையில் சிக்காத கச்சத்தீவு



நான் அனுப்பிய டுவிட்டுகள்


காஷ்மீரில் போராடுபவர்கள் பிரிவினைவாதிகள் வடகிழக்கில் போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்றால் இலங்கை கடற்படை மட்டும் எப்படி எதிரி? #tnfisherman



ஈழப் போராட்டம் இறையாண்மை, காவிரியில் தண்ணீர் வராது தேசிய ஒற்றுமை மீனவனைக் கொல்வது மட்டும் எல்லை தாண்டிய பிரச்சனையா? #tnfisherman



எகிப்தில் இந்தியர்கள் ஷேமம், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் ஷேமம், தமிழ் மீனவர்கள் இந்தியர்களில்லை போட்டுத்தள்ளு #tnfisherman



தொகுதி பேசத்தான் கருணாநிதி டில்லி போகிறார் என்று பொய் சொல்லாதீர்கள், மீனவர்களைக் காக்கவே செல்கிறார் #tnfisherman



மீனவர்களும் மக்களும் ஆயுதம் ஏந்தினால் அதை வன்முறை என வரையறை செய்ய முடியுமா?#tnfisherman



கடல் எல்லை தாண்டுவது உலகெங்கும் நடப்பது. சுட்டுக்கொல்வது இங்கு மட்டும் நடப்பது. இதன் பொருள் அரசுக்கு இதில் உடன்பாடு என்பது. #tnfisherman



http://www.PetitionOnline.com/TNfisher/ நண்பர்களே, இதிலும் உங்கள் கையெழுத்தை பதிவு செய்யுங்கள் #tnfisherman



காஷ்மீர் கல்லெறி வன்முறையா? மீனவர் படுகொலைக்கு இரங்குவதா? தவறு. போராடவேண்டும்#tnfisherman



மத்திய மாநில அரசுகளிடம் மனுக்கொடுக்க நாம் ஒன்றும் பிச்சைக்காரர்களல்லவே #tnfisherman



பன்னாட்டு மீன்பிடி கப்பல்களுக்கான அனுமதியை புரிந்து கொள்ளாமல் மீனவர் படுகொலைகளையும் புரிந்துகொள்ள முடியாது #tnfisherman



மீனவர்கள் கொல்லப்படுவதும் அதை எதிர்த்து குரல் கொடுப்பதும் தனிப்பட்ட பிரச்சனைகளால்ல‌ #tnfisherman


பதிவர்: செங்கொடி

ஏதாவது செய்யுங்கள்!

இழப்புகளின் வலியை எப்போதும்
சற்று அதிகமாகவே உணர முடிகிறது!
வலி சுமப்பவர்கள் கேட்கிறோம் - ஐயா!
இப்போதாவது ஏதாவது செய்யுங்கள்!

சில வருடங்களில் இந்தியா வல்லரசாம்
சொல்லிக் கொள்கிறார்கள் - நல்லது
அப்படியானால் இதையும்
தெரிந்து கொள்ளுங்கள்
இப்போதே இலங்கை வல்லரசுதான்
சொல்லாமலே கொல்கிறார்கள்!

இந்தியாவிற்கு எப்போதும்
தமிழர்கள் தேவை!
இராணுவ பலம் சோதிக்க
இலங்கைத் தமிழன்! - தன்
சகிப்புத்தன்மையைகாட்ட
இந்தியத் தமிழன்!

அம்மா தன் கணவர் கொலைக்கு
ஈழத்தமிழரைப் பழிதீர்த்தாராம் - தேச
பக்திமிக்கவர்கள் சொன்னார்கள்
அமைதியாகக் கேட்டுக்கொண்டோம்
ஒருவேளை தமிழ்நாட்டில் நிகழ்ந்ததால்
ஒட்டுமொத்த தமிழரையும்...?

நண்பர் பிரபாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு தமிழனாக இதைப் (கவிதை மாதிரி?) பதிவுசெய்கிறேன்!

பதிவர் வானம் தாண்டிய சிறகுகள்

கொந்தளிக்கும் கடல்... துடிக்கும் மீனவன் உடல்..!

கயிற்றை எடுத்து... கழுத்தில் நெரித்து..

டுக் கடலில் காலனாகக் காத்திருக்கும் சிங்கள ஓநாய்களைத் தட்டிக்கேட்க வழியே இல்லையோ?

நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்​தைச் சேர்ந்த ஜெயக்குமார், செந்தில், ராஜேந்திரன் என்ற மூவரும் கடந்த 22-ம் தேதி காலை மீன் பிடிக்கக் கிளம்பினார்கள். சேது சமுத்​திரத் திட்டப் பணிகள் நடந்த இடத்தின் அருகே மாலை 6 மணிக்கு வலை விரித்துக் காத்திருந்தனர். இரவு 11 மணிக்கு கறுப்பு நிறப் படகில் வந்தான் எமன். அதன் பிறகு நடந்த கொடூரத்தை, உயிர் பிழைத்து வந்த செந்தில் சொல்கிறார்.
''கிட்டத்தட்ட வலையை எடுத்துக்கிட்டுக் கிளம்ப இருந்த நேரம்... எங்களை நோக்கி வேகமா வந்துச்சு
##~##
இலங்கை நேவி படகு. அதுல 10 பேர் வரைக்கும் இருந்தாங்க. அவங்களைப் பார்த்ததும், 'நாங்க மீனவர்கள்தான்’ என்பதாக சைகை காட்டினோம். அதை கண்டுக்காத நேவிக்காரங்க, சிங்கள மொழியில் திட்டிக்கிட்டே, 'உடனே கடலில் குதிச்சு நீந்திக் கரைக்குப் போங்கடா நாய்களா’ன்னு சொல்லித் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி, 'சுட்டுருவோம்’னு பயமுறுத்தினாங்க. நானும், ராஜேந்திரனும் பயந்து கடல்ல குதிச்சுட்டோம். ஜெயக்குமார் அண்ணனுக்கு சுனாமி சமயத்துல கையில் அடிபட்டதால, அவரால் சரியா நீந்த முடியாது. அதை அவர் கெஞ்சியபடி சொல்லியும், அவங்க கேட்கலை. எங்க படகுக்குள் குதிச்ச ஒரு நேவிக்காரன், எங்க படகில் இருந்த கயிறை எடுத்து ஜெயக்குமாரின் கழுத்​தில் இறுகக் கட்டினான். மறு​முனையைத் தூக்கி அவங்க படகில் போட்டுட்டு, அவனும் போய் ஏறிக்கிட்டான். அப்படியே அவங்க படகைக் கிளப்பி, எங்க படகை சுத்தி வட்டமடிக்க... கழுத்துல கயிறு இறுக்கி... வலி தாங்க முடியாம கதறியபடியே படகில் இருந்து கடலில் விழுந்துட்டார். கொஞ்ச தூரம் அவரை அப்படியே கயிறு மூலமா இழுத்துட்டுப் போனவங்க, கயிறைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்​டாங்க. நீந்திட்டு இருந்த நாங்க வேகமாகப் போய்ப் பார்த்தப்ப, என் அண்ணன் உயிரோட இல்லை...'' என்று சொல்லிக்கதறினார்.
இறந்துபோன மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க, நாகப்பட்டினம் தொகுதி தி.மு.க. எம்.பி.
ஏ.கே.எஸ்.விஜயன், வேதாரண்யம் எம்.எல்.ஏ. வேதரத்தினம், நாகை டி.ஆர்.ஓ. ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர். ஊருக்குப் போனால் பிரச்னை ஆகும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட... வேதாரண்யம் மருத்துவமனை வளாகத்​திலேயே காசோலையை, ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம், அவர்கள் வாங்க மறுத்தும், வற்புறுத்திக் கொடுத்தனர்.
ஜெயக்குமாருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகின்றன. ஒன்றரை வயதில் பூமிகா, ஆறு மாதத்​தில் ஜனனி என்று இரண்டு பெண் குழந்தைகள். ''எங்க உசுருக்கு அஞ்சு லட்சம்னு விலை வெச்சிருக்கீங்களா? இப்படியே எங்க தாலிய அறுத்துக்கிட்டே போறானுங்களே... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? இப்படிப் பாதி​யில விட்டுட்டுப் போயிட்டாரே, இந்தப் பிஞ்சுங்களை நான் எப்படி வளர்ப்பேன், அப்பா எங்கன்னு கேட்டா நான் என்னன்னு சொல்லிச் சமாளிப்பேன்?'' என்று கைக்குழந்தை ஜனனியோடு தெருவில் உருண்டு புரண்ட முருகேஸ்வரிக்கு யாரிடமும் ஆறுதல் வார்த்தைகள் இல்லை.

புஷ்பவனம் கிராம மீனவர் தெரு நாட்​டார் பாலசுப்பிரமணியன், ''இதுவரை 534 மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றுள்ளது. எத்தனையோ முறை வழி தவறி நம் எல்லைக்குள் வந்த இலங்கை மீனவனுக்கு, சாப்பாடெல்லாம் கொடுத்து, திருப்பிப் பத்திரமாக அனுப்பிவைத்தோமே... நம் கடற்படையும் அவர்களைப் பத்திரமாகத்​தானே அனுப்பிவைக்கிறது. இதற்கெல்லாம் காட்டும் நன்றிக்கடன் இதுதானா?'' என்று கொந்தளித்தார்.

ஜெயக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க-வின் ஓ.எஸ்.மணியன், ''முதலில் பீரங்கியால் சுட்டான், அடுத்துத் துப்பாக்கியால் சுட்டான். பிறகு கட்டையால் அடித்துக் கொன்றான். இப்​போதோ கழுத்தில் கயிறு போட்டுக் கொல்​றான். மீனவன் செத்தால், பணத்தைத் தூக்கிக்​கொண்டு ஓடி வருகிறவர்கள், அவனைச் சாகாமல் காப்பாற்ற ஒரு நிரந்தர ஏற்பாட்டை செய்யாமல் இருப்பது ஏன்?'' என்றார் கோபமாக.

ஆனால் இந்த மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கடலோரக் காவல்படை சொல்ல ஆரம்பித்திருக்கிறது.
மீனவக் குடும்பங்களில் வீதிக்கு ஒரு கைம்பெண்ணை உருவாக்கும் கயவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார்?

ஜூனியர் விகடன் 30-ஜனவரி-2011

நம் தமிழர்களை காப்பாற்ற உங்கள் பிளாக்கில் ஒரு சிறிய இடம் கொடுங்கள்

எங்கள் ஈழத் தமிழனை தான் ஜோடி போட்டுகொண்டு வேட்டையாடினிர் மீதமிருக்கும் என் தமிழனையாவது காப்பாற்றி தாரும் என்று நாங்கள் அழும் சத்தத்தை கூட கேட்க விரும்பாமல்  ஏ.சி ரூமில் படுத்து கொண்டு கவிதையும் அடுத்த படத்திற்கான கதையையும் எழுதி கொண்டு உல்லாசமாக இருக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் அழுகை சத்தத்தை கேட்க்கும் நோக்கில் உண்டாக்கியுள்ள www.savetnfisherman.org தளத்திற்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் கரங்களை வலிமையாக்குவோம்.



இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form

நீங்கள் பிளாக் வைத்து இருந்தால் கீழே இருக்கும் இந்த கோடிங்கை காப்பி செய்து உங்கள் பிளாக்கில் Design - Add a Gadget - Html Java/Script சென்று இந்த கோடிங்கை பேஸ்ட் செய்து உங்கள் பிளாக் சைடு பாரில் இந்த படத்தை தெரிய வைத்தால் இந்த செய்தி மேலும் பலரை சென்றடைய ஏதுவாக இருக்கும். நம் தமிழனுக்காக உங்கள் பிளாக்கில் ஒரு சிறய இடத்தை ஒதுக்கி கொடுக்கவும்

  • இப்படி இந்த பேனரை உங்கள் தளத்தின் சைடு பாரில் பதிந்தால் உங்கள் பிளாக்கில் வரும் வாசகர்களுக்கு அறிய உதவும்.
டிஸ்கி 1: உங்கள் பிளாக்கில் ஒரு பதிவை ஒரு கண்டனமாக தெரிவியுங்கள். டைப் செய்ய கடினமாக இருந்தால் மற்ற நண்பர்கள் போட்டுள்ள பதிவுகளை காப்பி செய்தாவது உங்கள் பிளாக்கில் பதிவிடுங்கள் ஒரு வழியாக தூங்கி கொண்டிருப்பதை போல நடித்து கொண்டிருக்கும் அரசியல் முதலைகளை எழுப்பினால் போதும்.
டிஸ்கி 2:  நண்பர்கள் யாரும் எனது இந்த பதிவிற்கு டெம்ப்ளேட் கமென்ட் போட வேண்டாம் அந்த நேரத்தில் உங்கள் கண்டனத்தை மேலே உள்ள லிங்க்குகளில்  இணைந்து தெரிவிக்கவும்.


பதிவர்: வந்தேமாதரம்

தமிழக மீனவர்கள் தொடர் படுகொலை: இலங்கை தூதரகம் சி.பி.எம் முற்றுகை !


இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்து வருகிறது. கடந் தாண்டு மட்டும் 20 மீனவர் கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். அவ்வப் போது மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பிடுங்கிக் கொள்வதோடு, படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த 15 தினங்களில் இரண்டு தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களையும், மீனவர்கள் படுகொலைச் செய்யப்படுவதையும் தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று, இலங்கத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை விட்டு மீனவர்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர் படுகொலையை மத்திய அரசு வேடிக்கை பார்க்காதே, மீனவர் படு கொலையை தடுக்க ராஜீய ரீதியான நடவடிக்கை எடு, இலங்கை அரசு சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை கட்சி ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஏந்தி வந்தனர்.

“பிழைப்புத்தேடி கட லுக்குச் சென்றால், பிணமாக திரும்புவதை தடுத்து நிறுத்து”, “வாய்ச்சவடாலை ஓரங்கட்டி மீனவர்கள் உயிரை பாதுகாத்திடு”, “ மத்திய, மாநில அரசுகளே, மீனவர் வாழ்வுரிமையை பறிக்காதே” என்பன போன்ற கோஷங்கள் போராட்டத்தில் எழுப்பப் பட்டன.

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்:

“தமிழக மீனவர்கள் கட லில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 400க்கும் மேற்பட்டோரை இலங்கை ராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர். கடந்த 22ம் தேதி ஜெயக்குமார் என்ற ஊனமுற்ற மீனவரை, கயிற்றால் கட்டி கடலில் தள்ளி இலங்கை ராணுவம் படுகொலை செய்துள்ளது. தமிழக மீனவர் களின் வாழ்வுரிமையான மீன்பிடியை தடுக்கும் வகையில் இத்தகைய படுகொலைகளை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

இந்தப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக மக்கள் ஏகோபித்தமான முறையில் குரல் எழுப்பிய பிறகும், படுகொலை தொடர்கிறது. ஜெயக்குமார் படுகொலைக்கு பிறகு மத்திய அரசு, இலங்கை அரசை கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்..

கடல் எல்லையில், இந் திய கடற்படையும், இலங் கை கடற்படையும் இணைந்து கூட்டு ரோந்து நடத்துவதன் மூலமே இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல், மீனவர்கள் படுகொலைகளை தடுக்க முடியும். இலங்கை அரசு, இனி படுகொலைகள், துப்பாக்கிச்சூடு நடக்காது என்று தான் கூறியுள்ளது. அப்படியெனில் இதற்கு முன்பு நடந்த அனைத்து தாக்குதலுக்கும், அத்துமீறல்களுக்கும், படுகொலைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது மத்திய, மாநில அரசுகள் தலையிடாமல், தடுக்காமல் உள்ளன. மக்கள் பாதிக்கப்படும் போது அரசியல் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதையும், ஆறுதல் கூறச் செல்வதையும் திசை திருப்பக் கூடாது.”

கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ், வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், மாநிலக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.மகேந்தி ரன் எம்எல்ஏ, ஏ.ஆறுமுக நயினார், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பா.கருணாநிதி ஆகியோர் முன்செல்ல தூதரகத்தை முற்றுகையிட சென்ற கட்சி ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 
ப‌திவ‌ர்: மாற்று

ட்விட்டரில் நடக்கும் போராட்டம்!!!!!#tnfisherman

மீனவர் கொலைகளுக்கு எதிராக ட்விட்டரில் நடக்கும் போராட்டத்தின் முக்கிய தளம் http://www.savetnfisherman.org/

ட்விட்டரில் நுழைந்து #tnfisherman என்ற டேக் ஐ இணைத்திடுங்கள் அல்லது #tnfisherman #indianfisherman #worldfisherman என்றும் இணைக்கலாம்..

என் டிவீட்ஸ் சில சாம்பிளுக்கு..

Peace in Tamilnadu = Peace in Indian subcontinent (India, Pakistan, Bangladesh, SriLanka),

maryshan
We want selfless leaders who dont have dire desire to kill their own people for power & money.

maryshan
Decentralize the power to the grass root i.e to Tamilnadu. to save Tamil fishermen..

maryshan
We lived as a nation so long, bcos of ahimsa , adaptability and accepting nature of the Indian.

solution need not be brought through violence but by using your minds to think.PM, CM..

maryshan
solution need not be brought through violence but by using your minds to think.PM, CM..

maryshan
There is solution for every problem and we dont want that solution brought through violence

maryshan
Was south & north more united when the British ruled us.?STOP THE KILLING!

maryshan
Are fishermen a minority dear CM.?STOP THE KILLING!



»
People from many religions , but who is the God here?.. money ?. power?.STOP THE KILLING!

maryshan
மானாட மயிலாட . அங்கே உயிரோடு ஊசலாட. நேவிக்காரன் விளையாட.. கண்டும் நாடகமாட..STOP THE KILLING!
»

maryshan
Its a scar , ever dying scar about our own country PM ji..STOP THE KILLING!
maryshan
Vital thing is the SAFETY dear Mr.PM..
maryshan
Vital thingsare education for all, reducing the infant mortality rate, stop female foeticide,?


maryshan
Developing nation of 1 billion?..in what ways?.STOP THE KILLING!


maryshan
leaders cherishing & celebrating power ?..STOP THE KILLING!

So many cultures, so many languages. but humanity ??? from leaders ?..STOP THE KILLING!
» maryshan
Reminds me of Telengana & the leaders going for hunger strike there..STOP THE KILLING!
maryshan
We want our kacha theevu back..only to protect ourselves..STOP THE KILLING!
»

maryshan
Dont the SL Navy has a son /daughter like me dad?.." Our CM, PM also have My dear son."

maryshan
Dad when will u come back ?. " only if SL Navy leaves me , son " STOP THE KILLING!

maryshan
we mourned for all the attacks in India ,but who will console&support us now?.STOP THE KILLING!

maryshan
we are counting the death , and you can start counting the days in power.STOP THE KILLING!

maryshan
Is killing a hobby , & lobbying a fun, ????STOP THE KILLING!

»

maryshan
we are bored with all the excuses..dear PM & CM.. STOP THE KILLING!



மிக்க நன்றி..

ப‌திவ‌ர் : ப‌ய‌ண‌மும் எண்ணங்க‌ளும்

ட்வீட்டரில் மீனவப் புரட்சி..! பங்கெடுக்க வாருங்கள் தோழர்களே..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

வழக்கம்போல எப்போதும் நடக்கின்ற கொலைதான் என்கிறவகையில் தற்போது கடைசியாக நடந்திருக்கும் நாகப்பட்டினம் மீனவர் ஜெயக்குமாரின் கொலை, சிறிதளவு இந்திய, தமிழக அரசுகளை அசைத்துப் பார்த்திருக்கிறது..!
தேர்தல் நேரம் என்பதாலும், இதனை எதிர்க்கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து சினிமாத்தனமாக அனைவருக்கும் முந்திக் கொண்டு இரவோடு இரவாக அரசு வேலை தரும் ஆணையை கிராமத்து வீட்டுக்கே கொண்டு போய்ச் சேர்ப்பித்திருக்கிறது மாநில அரசு.

இந்த வேகத்தை முதல் மீனவன் பலியானபோதே இலங்கை அரசை கண்டிப்பதிலும், தண்டிப்பதிலும் நிகழ்த்தியிருந்தால் மிச்சம் இருந்த 535 பேரின் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கலாமே..?

அரசுகளின் இந்த அவலட்சணத்தை இதுவரையிலும் சொல்லிக் கொண்டிருந்த வெகுஜன ஊடகங்களுக்கு மத்தியில், இப்போது இணைய ஊடகங்களும் களத்தில் குதித்துவிட்டன.

வலைத்தளங்களில் பல பதிவர்கள் சிங்கள அரசின் கொடுமையைக் கண்டித்தும், மீளாத் துயிலில் மூழ்கியிருக்கும் தமிழக, மத்திய அரசைக் கண்டித்தும் பதிவெழுதிவிட்டார்கள்.

கூகிள் பஸ் மற்றும் பேஸ்புக் இணையத்தளங்களிலும் உடனுக்குடன் எதிர்ப்பு கோஷங்களும், அரசுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுவிட்டது.

இன்னும் ஒரு படி மேலே போய் உணர்வுள்ள அத்தனை பேரையும் உடனுக்குடன் ஒருங்கிணைக்கும் வசதி கொண்ட ட்வீட்டரில் இதற்கென  http://twitter.com/
#TNfisherman என்ற தனி ஐ.டி.யை ஆரம்பித்து அதில் தங்களது கோபத்தையும், கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர் தோழர்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பாக வலையுலக நண்பர் டிபிசிடி ஆரம்பித்த இந்த மீனவர்களுக்கான ஆதரவுப் போராட்டத்திற்கு இரண்டாவது நாளிலேயே ஊடகங்கள் ஆதரவு கொடுத்து அடையாளப்படுத்தின.

ட்வீட்டர் என்றில்லாமல் அங்கே இடுகின்ற செய்திகளும், கண்டனங்களும், கோரிக்கைகளும் http://www.savetnfisherman.org  என்ற வலைத்தளத்தில் தொகுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வேகத்தோடு இது அரசின் காதுகளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்கிற அக்கறையோடு கடந்த மூன்று தினங்களாக ட்வீட்டர் உலகம் கலங்கிப் போய் இருக்கிறது..!

இதன் உச்சக்கட்டமாக நேற்று இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அனைத்து தமிழர்களும் இந்த டிவீட்டரின் மூலம் இயங்கும் மீனவர் ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

9 மணி என்றில்லாமல் அதற்கு முன்பிருந்தே பல ட்வீட்டர்களும் கண்டனங்களை அதில் எழுப்பிக் கொண்டேயிருந்தார்கள். 9 மணிக்குப் பிறகு, மேலும் வேகம் பிடித்து ட்வீட்டர் ஓவர் லோடு ஆகும் அளவுக்கு தமிழர்கள் பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

அந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 3710 ட்வீட்டுகள் மீனவர் பிரச்சினை தொடர்பாக இடப்பட்டன. நேற்று இரவு 10 மணிவரையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பான பதிவர்கள் இட்ட ட்வீட்டுகளின் எண்ணிக்கை 17,000-த்தை தாண்டியிருந்தது..!






இத்தனை களேபரங்களும் இங்கே நடந்து கொண்டிருக்க.. மத்திய அரசோ மிக மெதுவாக “நாளைக்கு நாள் நல்லாயில்லை. அடுத்த நாள் நல்லாயிருக்கும்..” என்று தேர்ந்தெடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையன்று நமது வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புகிறதாம். அவர் அங்கே போய் என்ன பேசப் போகிறார் என்று தெரியவில்லை.

இதுநாள்வரையிலும், இத்தனை மீனவர்கள் இறந்தார்களே.. அவர்களுடைய மரணத்திற்கு காரணம் யார் என்றுகூட விசாரிக்க முடியாத, விசாரிக்கத் தெரியாத இந்தத் துப்புக் கெட்டவர்கள் “சுடாதீங்க.. அவங்க பாவம்ல்ல.. எங்களுக்கு நிறைய பிரச்சினையாகுதுல்ல..” என்று சொல்வதற்காக ஒரு தூதரை அனுப்பி வைக்கிறார்கள். இதுவே மிகக் கேவலம்.

நான் எழுதிய
தொடரும் மீனவர்கள் படுகொலை - தொலையட்டும் இந்தக் குடும்பம்..!  என்ற கட்டுரையை வாசித்த தி.மு.க.வைச் சேர்ந்த தோழர்கள் என்னிடம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

"தி.மு.க. இப்போது ஆட்சியைவிட்டு விலகினால்.. கருணாநிதி இல்லை என்றால் சிங்கள அரசு தமிழக மீனவர்களைச் சுடாது என்கிறீர்களா..?"
 
"அல்லது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டால் இது மாதிரியான சம்பவங்கள் திரும்பவும் நடக்காது என்கிறீர்களா..?" என்று கேட்கிறார்கள்.

இவ்வாறு கேட்பதற்கு இவர்களுக்கு எப்படி மனது வருகிறது என்றே தெரியவில்லை.

இப்போது நடப்பது கருணாநிதி தலைமையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி. தமிழகத்தின்  முதல்வர் கருணாநிதிதான். செத்தவன் தமிழகத்தைச் சேர்ந்த மீனவன். நியாயத்தை யாரிடம் கேட்பது..? எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிடமா கேட்க முடியும்?

ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் இறந்தபோது மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்றால் சுடத்தான் செய்வார்கள் என்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். யார் இதனை இல்லை என்று சொன்னது..? அப்போது அதனை மறுத்தும், எதிர்த்தும் பேசிய கருணாநிதி இன்றைக்கு தனது ஆட்சியிலேயே ஒரு மரணம் நிகழ்ந்ததும் கள்ள மெளனம் சாதிப்பது ஏன்..? நாங்கள் எங்கே ஜெயலலிதாவை உத்தமி என்று சொன்னோம்..?

தற்போது இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு எனில், மத்திய அரசை எப்பாடுபட்டாவது வற்புறுத்தி இந்தப் படுகொலைகளை நிறுத்துவது மாநில அரசின் கடமையல்லவா..? கருணாநிதி ஏன் செய்யவில்லை..? ஏன் இவரால் செய்ய முடியாது..?

தனது பேரன்களின் கேபிள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க சட்டம் வரப் போகிறது என்ற தகவல் கிடைத்த 1 மணி நேரத்திற்குள் கவர்னர் மாளிகைக்கு அன்பழகன் தலைமையில் கட்சிப் பிரமுகர்களை அனுப்பி வைத்து புலம்பத் தெரிந்தவர்தானே இந்தக் கருணாநிதி..!

தனது பேரனுக்கும், தனது கட்சிக்காரர்களுக்கும் நல்ல லாபமான, பசையான துறைகளை வாங்கித் தர வேண்டி இந்தத் தள்ளாத வயதிலும் டெல்லியின் தெருக்களில் லாவணி பாட ஓடத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

கேட்ட துறைகள் கொடுக்கப்படவில்லை என்றவுடன் பதவியேற்பில் கலந்து கொள்ள மாட்டோம். நாங்கள் வெளியேயே நின்று கொள்கிறோம் என்று மிரட்டத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

நாங்கள் இருக்கவா வேண்டாமா என்பதை முடிவெடுத்துச் சொல்லுங்கள் என்று மிரட்டி ஜெயிலில் இருந்து தனி உத்தரவு மூலம் தான் மட்டும் வெளியேறத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தொலைக்காட்சி துவங்க 5 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் பி்ன்னுக்குத் தள்ளிவிட்டு விண்ணப்பம் கொடுத்து 15 நாட்களில் தனது தொலைக்காட்சிக்கு மட்டும் அனுமதி வாங்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

உலகத்தில் எந்த நாடும் செய்திருக்காத சாதனையாக ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஜீரோக்களை எண்ணக்கூடத் தெரியாதவர்கள் இருக்கின்ற இந்த நாட்டில் அந்த ஊழல் நாயகனைக்கூட திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அடம் பிடிக்கத் தெரிந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

தனது மகனை ரவுடி என்று விமர்சித்த பேரனை ஒரே நொடியில் தனது சார்பான அமைச்சர்கள் பட்டியலில் இருந்து தூக்கத் தெரிந்திருந்ததே இந்தக் கருணாநிதிக்கு..!

ஆங்கிலமும், இந்தியும் பேசத் தெரியாத மகனை, இது இரண்டு மட்டுமே தெரிந்த பிரதமரின் அமைச்சரவையில் கேபினட் மினிஸ்டராக ஆக்கத் தெரிந்திருக்கிறதே இந்தக் கருணாநிதிக்கு..!

இன்னும் எத்தனையோ திருட்டுக்களையும், கொள்ளைகளையும் மறைமுகமாகச் செய்து பிழைத்து வரும் இந்தக் கருணாநிதிக்கு மீனவர்களின் தொடர் படுகொலையை தடுக்கக் கூடவா தெரியாது..?

இவருடைய கட்சி எம்.பி.க்களின் ஆதரவோடுதானே மத்திய அரசே இயங்குகிறது.. அந்த மத்திய அரசில் இவரும் ஒரு அங்கம்தானே.. பின்பு இவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் போய் கேட்பது..?

இவர் உண்மையான தமிழனாக இருந்தால், முள்ளிவாய்க்கால் போரின்போதே கூட்டணியில் இருந்து விலகியிருக்க வேண்டும். அப்போதே தெரிந்துவிட்டது ஐயா தனது குடும்பத்தினருக்கு மட்டும்தான் தமிழன் என்று..!

நானாக இருந்திருந்தால் ஆட்சியில் இருந்து விலகியிருப்பேன். மத்திய அரசை நட்டாத்தில் விட்டிருப்பேன். அடுத்து மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது நானே முதல் படகில் அமர்ந்து சென்று “இப்போ வந்து சுட்டுப் பாரு..!” என்று சவால் விட்டிருப்பேன்.

கடற்படையினரை நம்பி இனிமேல் புண்ணியமில்லை. முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு ஓட்டுப் போட்ட மக்களைக் காப்பாற்ற நான்தான் முனைய வேண்டும். அந்த வகையில் தமிழக காவல்துறையினரை மீனவர்களின் பாதுகாப்புக்காக நடுக்கடலுக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அதனை செய்திருப்பேன்..!

எதிர்க்க வருபவர்களை, தடுக்க நினைக்கும் மத்திய அரசினை எதிர்த்து மக்களைத் திரட்டியிருப்பேன். போராடியிருப்பேன்.. ஆட்சி டிஸ்மிஸாகும் என்றாலும் பரவாயில்லை. துணிந்து நிற்கிறேன். டிஸ்மிஸ் செய்து பார் என்று சவால் விட்டிருப்பேன்.

ஆனால் கருணாநிதி செய்யவில்லையே.. அவருக்கு இப்போது என்ன கவலை..? ஒரே கவலைதான். தனது ஆட்சி போகக்கூடாது. அவ்வளவுதான். தனது ஆட்சியை நம்பித்தான் தனது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். தனது ஆட்சி போய் வேறொரு ஆட்சி வந்தால், அவர்கள் சம்பாதிக்கிறார்களோ இல்லையோ.. தனது குடும்பத்தினர் மீது கை வைத்து விடுவார்களே என்று பயப்படுகிறார்.

“நான் எனது நாட்டு மக்களைவிட எனது குடும்பத்தினரை அதிகம் நேசிக்கிறேன். அவர்களுக்காகவே நான் 24 மணி நேரமும் உழைக்கிறேன். நடிக்கிறேன். பேசுகிறேன். அவர்களைவிட்டுவிட்டு வேறு யாரையும் நான் நம்பத் தயாராக இல்லை. மத்திய அரசை பகைத்துக் கொண்டால் எனது மகனும், பேரனும் மந்திரி பதவியை இழந்துவிடுவார்கள். அதன் பின் கட்சியில் குழப்பம் ஏற்பட்டால்கூட சமாளித்துவிடுவேன். ஆனால் எனது குடும்பத்தில் குழப்பம் வரும். அதனை என்னால் சமாளிக்க முடியாது.. இப்போது எனது குடும்பத்தினர் சம்பாதித்து வரும் பணம் குறைந்துவிடும். சம்பாத்தியம் போய்விடும். ஏற்கெனவே சம்பாதித்ததற்கு கணக்கு வழக்கு கேட்பார்கள். வழக்குத் தொடர்வார்கள். அதனைச் சமாளிக்க வேண்டுமெனில் என்னிடம் அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரம் இல்லையெனில் எனது குடும்பத்தினரே என்னை மதிக்க மாட்டார்கள். இது எல்லாவற்றையும்விட எனக்கு எப்போது மரணம் என்று தெரியவில்லை. ஆனால் நான் சாகும்போதுகூட முதல்வராகவே சாக விரும்புகிறேன். அப்படி இறந்தால்தான் எனது 40 ஆண்டு கால நண்பர் எம்.ஜி.ஆரை போல எனக்கும் பெயர் கிடைக்கும்..  ஆகவே எந்த நாடு, எத்தனை தமிழர்களைக் கொலை செய்தாலும் பரவாயில்லை. எனக்கு எனது ஆட்சிதான் முக்கியம்.. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..”

- இப்படி சதா சர்வகாலமும் தனது குடும்பத்தைப் பற்றியே சிந்தித்து வருபவரிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்..? நேற்றுகூட ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 38 பேர் இறந்தார்களே.. ஜெயலலிதா அப்போது என்ன செய்தார் என்று..?

நீ ஏண்டா ஒரு நாள் அம்மணமா ஆடுறன்னு கேட்டா.. அவன் 38 நாள் ஆடுனானேன்னு அது உன் கண்ணுக்குத் தெரியலையா என்று கேட்கிறார் இந்தத் தமிழினத் தலைவர்..! இதுவா நியாயவான் பேசுகிற பேச்சு.. அப்போது இவரும் ஒரு ரவுடிதானே? ஜெயலலிதாவுக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமே அதே அளவுக்கு மரியாதைதான் இவருக்கும் கிடைக்கும். ஆனால் ஜெயலலிதா எதையும் சொல்லிவிட்டுச் செய்வார். கருணாநிதி சொல்லாமல் செய்வார், செய்தவர் என்பதால் அந்த மரியாதையைக்கூட இப்போது இழந்துவிட்டார்.

இப்போது மீனவர் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் அத்தனை பேரும் ஜெயலலிதாவுக்கு வக்காலத்து வாங்கியவர்களில்லை. வாங்குபவர்களும் இல்லை. இப்போது கருணாநிதி ஆட்சியில் இல்லாமல் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பார்கள். பேசியிருப்பார்கள்.

இப்படி ஜெயலலிதாவைக் காட்டியே அவரைவிட பல மடங்கு பணத்தையும், சொத்துக்களையும் தனது குடும்பத்தினருக்காகச் சம்பாதித்துக் குவித்திருக்கும் கருணாநிதி மீண்டும், மீண்டும் ஜெயலலிதா என்னும் பூச்சாண்டியைச் சொல்லியே நம்மிடமிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்..!

அவருக்கு மட்டுமல்ல, இனி ஆட்சி பீடத்தில் ஏறப் போகும் அனைவருக்குமே ஒரு பாடத்தைப் புகட்டுவதைப் போல நாம் நமது எதிர்ப்பை தொடர்ந்து காட்டிக் கொண்டே வர வேண்டும். இது தேர்தல் சமயத்தில் நமது மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவாக இந்த கோபாலபுரத்து கோயபல்ஸின் சாம்ராஜ்யம் மண்ணோடு மண்ணாக வேண்டும்..!

பதிவர்களும், வாசக அன்பர்களும் மீனவர்களுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தளத்திற்குச் சென்று பிரதமருக்கு ஒரு கண்டனக் கடிதத்தை உங்களது ஒப்புதலுடன் அனுப்பி வையுங்கள்..

மேலும் நேரமிருப்பவர்கள், வாய்ப்பு இருப்பவர்கள் ட்வீட்டரில் தற்போது நடைபெற்று வரும் இந்தப் போராட்டக் களத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள்
http://www.facebook.com/savetnfisherman என்ற தளத்தில் இணைந்து தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நம்மால் முடிந்ததை அந்த மீனவர்களின் சமுதாயத்தினருக்கு செய்வோம்..! வாருங்கள்..!
பதிவர்:   உண்மைத்த‌மிழ‌ன்