Saturday, January 29, 2011

ஏதாவது செய்யுங்கள்!

இழப்புகளின் வலியை எப்போதும்
சற்று அதிகமாகவே உணர முடிகிறது!
வலி சுமப்பவர்கள் கேட்கிறோம் - ஐயா!
இப்போதாவது ஏதாவது செய்யுங்கள்!

சில வருடங்களில் இந்தியா வல்லரசாம்
சொல்லிக் கொள்கிறார்கள் - நல்லது
அப்படியானால் இதையும்
தெரிந்து கொள்ளுங்கள்
இப்போதே இலங்கை வல்லரசுதான்
சொல்லாமலே கொல்கிறார்கள்!

இந்தியாவிற்கு எப்போதும்
தமிழர்கள் தேவை!
இராணுவ பலம் சோதிக்க
இலங்கைத் தமிழன்! - தன்
சகிப்புத்தன்மையைகாட்ட
இந்தியத் தமிழன்!

அம்மா தன் கணவர் கொலைக்கு
ஈழத்தமிழரைப் பழிதீர்த்தாராம் - தேச
பக்திமிக்கவர்கள் சொன்னார்கள்
அமைதியாகக் கேட்டுக்கொண்டோம்
ஒருவேளை தமிழ்நாட்டில் நிகழ்ந்ததால்
ஒட்டுமொத்த தமிழரையும்...?

நண்பர் பிரபாவின் வேண்டுகோளை ஏற்று ஒரு தமிழனாக இதைப் (கவிதை மாதிரி?) பதிவுசெய்கிறேன்!

பதிவர் வானம் தாண்டிய சிறகுகள்

No comments:

Post a Comment