Saturday, January 29, 2011

தமிழக மீனவர்கள் தொடர் படுகொலை: இலங்கை தூதரகம் சி.பி.எம் முற்றுகை !


இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்து வருகிறது. கடந் தாண்டு மட்டும் 20 மீனவர் கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். அவ்வப் போது மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பிடுங்கிக் கொள்வதோடு, படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த 15 தினங்களில் இரண்டு தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களையும், மீனவர்கள் படுகொலைச் செய்யப்படுவதையும் தடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் நேற்று, இலங்கத் தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதை விட்டு மீனவர்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர் படுகொலையை மத்திய அரசு வேடிக்கை பார்க்காதே, மீனவர் படு கொலையை தடுக்க ராஜீய ரீதியான நடவடிக்கை எடு, இலங்கை அரசு சர்வதேச சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை கட்சி ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஏந்தி வந்தனர்.

“பிழைப்புத்தேடி கட லுக்குச் சென்றால், பிணமாக திரும்புவதை தடுத்து நிறுத்து”, “வாய்ச்சவடாலை ஓரங்கட்டி மீனவர்கள் உயிரை பாதுகாத்திடு”, “ மத்திய, மாநில அரசுகளே, மீனவர் வாழ்வுரிமையை பறிக்காதே” என்பன போன்ற கோஷங்கள் போராட்டத்தில் எழுப்பப் பட்டன.

இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கி  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்:

“தமிழக மீனவர்கள் கட லில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது 400க்கும் மேற்பட்டோரை இலங்கை ராணுவத்தினர் சுட்டு படுகொலை செய்துள்ளனர். கடந்த 22ம் தேதி ஜெயக்குமார் என்ற ஊனமுற்ற மீனவரை, கயிற்றால் கட்டி கடலில் தள்ளி இலங்கை ராணுவம் படுகொலை செய்துள்ளது. தமிழக மீனவர் களின் வாழ்வுரிமையான மீன்பிடியை தடுக்கும் வகையில் இத்தகைய படுகொலைகளை இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக செய்து வருகிறது.

இந்தப்படுகொலைகளை தடுத்து நிறுத்த தமிழக மக்கள் ஏகோபித்தமான முறையில் குரல் எழுப்பிய பிறகும், படுகொலை தொடர்கிறது. ஜெயக்குமார் படுகொலைக்கு பிறகு மத்திய அரசு, இலங்கை அரசை கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு அறிக்கையோடு நிறுத்திக்கொள்ளாமல் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்..

கடல் எல்லையில், இந் திய கடற்படையும், இலங் கை கடற்படையும் இணைந்து கூட்டு ரோந்து நடத்துவதன் மூலமே இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல், மீனவர்கள் படுகொலைகளை தடுக்க முடியும். இலங்கை அரசு, இனி படுகொலைகள், துப்பாக்கிச்சூடு நடக்காது என்று தான் கூறியுள்ளது. அப்படியெனில் இதற்கு முன்பு நடந்த அனைத்து தாக்குதலுக்கும், அத்துமீறல்களுக்கும், படுகொலைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் பாதிக்கப்படும்போது மத்திய, மாநில அரசுகள் தலையிடாமல், தடுக்காமல் உள்ளன. மக்கள் பாதிக்கப்படும் போது அரசியல் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதையும், ஆறுதல் கூறச் செல்வதையும் திசை திருப்பக் கூடாது.”

கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் க.பீம்ராவ், வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.கே.சண்முகம், மாநிலக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.மகேந்தி ரன் எம்எல்ஏ, ஏ.ஆறுமுக நயினார், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பா.கருணாநிதி ஆகியோர் முன்செல்ல தூதரகத்தை முற்றுகையிட சென்ற கட்சி ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
 
ப‌திவ‌ர்: மாற்று

No comments:

Post a Comment