கயிற்றை எடுத்து... கழுத்தில் நெரித்து.. நடுக் கடலில் காலனாகக் காத்திருக்கும் சிங்கள ஓநாய்களைத் தட்டிக்கேட்க வழியே இல்லையோ? நாகை மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், செந்தில், ராஜேந்திரன் என்ற மூவரும் கடந்த 22-ம் தேதி காலை மீன் பிடிக்கக் கிளம்பினார்கள். சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடந்த இடத்தின் அருகே மாலை 6 மணிக்கு வலை விரித்துக் காத்திருந்தனர். இரவு 11 மணிக்கு கறுப்பு நிறப் படகில் வந்தான் எமன். அதன் பிறகு நடந்த கொடூரத்தை, உயிர் பிழைத்து வந்த செந்தில் சொல்கிறார். ![]()
இறந்துபோன மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்துக்கு ![]() ![]() ஏ.கே.எஸ்.விஜயன், வேதாரண்யம் எம்.எல்.ஏ. வேதரத்தினம், நாகை டி.ஆர்.ஓ. ராஜேந்திரன் ஆகியோர் வந்தனர். ஊருக்குப் போனால் பிரச்னை ஆகும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட... வேதாரண்யம் மருத்துவமனை வளாகத்திலேயே காசோலையை, ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம், அவர்கள் வாங்க மறுத்தும், வற்புறுத்திக் கொடுத்தனர். ஜெயக்குமாருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகின்றன. ஒன்றரை வயதில் பூமிகா, ஆறு மாதத்தில் ஜனனி என்று இரண்டு பெண் குழந்தைகள். ''எங்க உசுருக்கு அஞ்சு லட்சம்னு விலை வெச்சிருக்கீங்களா? இப்படியே எங்க தாலிய அறுத்துக்கிட்டே போறானுங்களே... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா? இப்படிப் பாதியில விட்டுட்டுப் போயிட்டாரே, இந்தப் பிஞ்சுங்களை நான் எப்படி வளர்ப்பேன், அப்பா எங்கன்னு கேட்டா நான் என்னன்னு சொல்லிச் சமாளிப்பேன்?'' என்று கைக்குழந்தை ஜனனியோடு தெருவில் உருண்டு புரண்ட முருகேஸ்வரிக்கு யாரிடமும் ஆறுதல் வார்த்தைகள் இல்லை. ![]() ஜெயக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அ.தி.மு.க-வின் ஓ.எஸ்.மணியன், ''முதலில் பீரங்கியால் சுட்டான், அடுத்துத் துப்பாக்கியால் சுட்டான். பிறகு கட்டையால் அடித்துக் கொன்றான். இப்போதோ கழுத்தில் கயிறு போட்டுக் கொல்றான். மீனவன் செத்தால், பணத்தைத் தூக்கிக்கொண்டு ஓடி வருகிறவர்கள், அவனைச் சாகாமல் காப்பாற்ற ஒரு நிரந்தர ஏற்பாட்டை செய்யாமல் இருப்பது ஏன்?'' என்றார் கோபமாக. ஆனால் இந்த மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக கடலோரக் காவல்படை சொல்ல ஆரம்பித்திருக்கிறது. மீனவக் குடும்பங்களில் வீதிக்கு ஒரு கைம்பெண்ணை உருவாக்கும் கயவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவது யார்? |
ஜூனியர் விகடன் 30-ஜனவரி-2011
No comments:
Post a Comment