பசித் தீர்க்க
கடல் புகுந்தோம் !!!
அவன் வெறி
தீர்க்க பலியானோம் !!!
உன் பணம்
மீட்டுத் தருமோ
உயிரை - கடிதம்தான்
பாதுகாப்புத் தருமோ !!!
பணம் வேண்டாம்
எமக்கு - உன் ஆறுதலும்
வேண்டாம் !!!
முடிந்தால் எமை
காப்பாற்று - இல்லையேல்
துப்பாக்கிகளை தா
எம்மிடம் - எங்களைக்
காப்பாற்ற சக்தி
உண்டு எங்களிடம் !!!
தேவையில்லை உமது
நீலிக் கண்ணீரும்
புலம்பலும் - மீண்டும் செல்வீர்
தலைநகரம் - தேர்தலில்
கூட்டணி அமைக்க !!!
உமக்கு நேரம் எங்கே
எங்களைப் பற்றி
சிந்திக்க - கட்சியினரின்
திருட்டை மறைக்கவே
நேரமில்லை உமக்கு !!!
அன்புடன் எல்கே
http://lksthoughts.blogspot.com
http://kavisolaii.blogspot.com
No comments:
Post a Comment