Saturday, January 29, 2011

டிவீட்டரில் தொடங்கிய எழுச்சி

டிவீட்டரில் தொடங்கிய ஒரு எழுச்சி, இன்று உலகம் முழுவதும் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறியிருக்கிறது. கொத்துகொத்தாக குண்டு போட்டு, ரத்தம் குடித்த ராஜபக்சே கூட்டத்திற்கு இன்னும் ரத்தவெறி அடங்கவில்லை போலும். அதான் கடலுக்கு செல்லும் நம் மீனவர்களை, இன்னும் கொன்று கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து, இன்னும் நாம் மௌனமாக இருந்து கொண்டிருந்தால், நாம் தமிழனாக, இல்லை, இல்லை மனிதனாக பிறந்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்

இணையத்தை உபயோகிக்கும் தமிழர்களின் முதல்முயற்சியாக, இதோ, டிவீட்டரில் தொடங்கிய, இந்த ஆரம்பம், ஒவ்வொருவர் மனதிலும், ஏதோ விதைகளை ஊன்றிவிட்டு வந்திருக்கிறது.

நீங்களும் மறக்காமல், இந்த லிங்கை க்ளிக் செய்து உங்கள் கண்டனத்தை தெரிவித்து, இன்னும் இந்த உலகில் மனிதம் மீதமிருக்கிறது என்று நிரூபிக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


பதிவர் :அவிய்ங்க ராசா

No comments:

Post a Comment