மாற்றங்களுக்கு அவசியமென்றால்
இந்த மனிதர்களுக்கு
புரியமாட்டேனென்கிறது
ஒரு கூலியின் கைகள் போதும்
கடவுளின் தோலுரிப்பதற்கு
கத்திகளெதற்கு
இழுத்துக் கட்ட நூல்கள் கிட்டும்
இஷ்டம் போல
கடவுள் என்பதால்
நெருப்புக்கெல்லாம் தாங்காது
இது கடவுளின் தோல்
சேரி வெயிலில் போட்டு அடித்தாலே
பூமி அதிரும்
கடவுளின் தோலில் செய்த பறை
நிச்சயம் தேவ இசையாயிருக்கும்
மாற்றங்களுக்கு அவசியமென்றால்
இந்த மனிதர்களுக்கு
புரியமாட்டேனென்கிறது
-ராஜ்குமார் ஸ்தபதி (பொருளற்ற சொற்கள்)
http://www.savetnfisherman.org/
http://www.PetitionOnline.com/TNfisher/
உமா
No comments:
Post a Comment