Sunday, January 30, 2011

நிருபமாராவ் இலங்கை பயணம் : மீனவர்கள் மீது தாக்குதல் நிறுத்த வேண்டுகோள்

இந்திய வெளியுறவு துறை செயலர் நிருபமாராவ் இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறார். தமிழக மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து இவர் செல்லும் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்ப்படும் வேளையில் இதனால் பயன் ஏதும் கிடைக்கப்போவதில்லை என்றும் இது ஒரு கண்துடைப்புதான் என்றும் பா.ஜ., தலைவர் நிதின்கட்காரி குறை கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களில் 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த மீனவர்கள் பலியான விவகாரம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.bஇந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதினார். மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசை மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


மத்திய நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜியிடமும் முதல்வர் வலியுறுத்தியதை அடுத்து இது கவலை தரும் விஷயம் என்றார்.உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிரணாப், வெளியுறவு துறை செயலர் நிருபமாராவை அனுப்பி வைக்க்க பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து இன்று ராவ் சென்னை வழியாக இலங்கை புறப்பட்டு செல்கிறார். அங்கு அவர் வெளியுறவு துறை அமைச்சர் பெரீஸ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்து மீனவர்கள் நிலைமை குறித்து விவாதிக்கிறார். இந்திய இலங்கை கூட்டுக்குழு கூட விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வார். மேலும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.இத்துடன் இலங்கை கடற்படையினர் அத்துமீறி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிப்பார் என தெரிகிறது.

கண்துடைப்பு என்கிறார் நிதின்கட்காரி: சென்னையில் நிருபர்களிடம் பேசிய நிதின்கட்காரி கூறுகையில்; தமிழக மீனவர்கள் நலனில் பா.ஜ., முழு அக்கறை வைத்துள்ளது. மத்திய அரசு இந்த விஷயத்தில் முன்கூட்டிய உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஆனால் தவறி விட்டனர். மத்திய அரசு தற்போது நிருபமாராவை இலங்கைக்கு அனுப்புவது ஒரு கண்துடைப்பு தான் என்றார். சமீபத்தில் கொல்லப்பட் வேதாரண்யம் மீனவர்கள் குடும்பத்தினரை பா.ஜ., நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார்கள் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., அரசுகள் தமிழக மீனவர்களை காத்திட தவறி விட்டது. மீனவர்கள் நிலை குறித்து பார்லியில் குரல் எழுப்புவோம்'' இவ்வாறு கட்காரி கூறினார்

RamnaD

No comments:

Post a Comment