Saturday, January 29, 2011

த்தூ!

த்தூ! வெட்கமாயில்லை சாகும் மீனவனை வெச்சி அரசியல் செய்கிறோமே என்று. நேற்று முதல்வர் புள்ளி விவரம் சொல்கிறா அ.தி.மு.க ஆட்சியில் 38 மீனவர்கள் செத்தார்கள் அப்ப எல்லாம் ஏன் நேரில் போய் ஆறுதல் சொல்லவில்லை? என் அரசு மீனவன் செத்த அன்றே 5 லட்ச ரூபாய் கொடுத்தது, அக்கன்வாடியில் அவர் மனைவிக்கு வேலைக்கான லெட்டரும் அன்றே கொடுக்கப்பட்டதை சாதனையா ஒரு முதல்வர் சொல்கிறார். த்தூ வெட்கமாயில்லை இப்படி செத்தவனுங்களை வெச்சி அரசியல் செய்ய.

ஒருமாசத்துக்கு முன்னாடி சீனாவின் மீன்பிடி படகு ஜப்பானின் ரோந்து படகில் மோதிட்டுன்னு ஜப்பான் காரன் சீன மீனவனை அரெஸ்ட் செஞ்சி கூட்டிட்டு போயிட்டான். சீனா என்னா செஞ்சிது? லெட்டரோ தந்தியோ அடிக்காம...மறுநாள் நடைபெற இருந்த சீனா- ஜப்பான் உயர்மட்ட பிரதிநிதிகளின் மீட்டிங்கை ரத்து செய்துவிட்டு, நாளைக்குள் மீனவன் விடுவிக்கப்படனும், இல்லை என்றால் நடப்பதே வேறுன்னு மிரட்டல் கொடுத்துச்சு. ஜப்பான் வேற வழியே இல்லாம மன்னிப்பு கேட்டு அந்த மீனவரையும் படகையும் ரிலீஸ் செஞ்சிது. அதில் பாதி சூடு சொரனையாவது வேண்டாம்?

மீனவன் சாகிறான் என்ற கவலையை விட தேர்தல் நேரத்தில் சாகிறானே என்ற கவலை முதல்வருக்கும், இன்னொரு மீனவன் சாகமாட்டானா என்ற கவலை எதிர்கட்சி தலைவருக்கும் இருக்கும். இவிங்கதான் நமக்கு தலைவரு?

த்தூ வெட்கமாக இருக்கிறது எனக்கு. இதுமாதிரி தலைவர்கள் இருக்கிறார்களே என்று.


பதிவர்:  குசும்பன்

No comments:

Post a Comment