Saturday, January 29, 2011

கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???

நம்ம கும்மியும் , செந்தழல் ரவியும் ஒரு முக்கிய மான விசயத்துக்கு பதிவு எழுத சொல்லி இருக்காங்க . கண்டிப்பா எல்லோரும் அவசியம் செய்ய வேண்டிய ஒரு விஷயம் . தயவு செய்து அனைவரும் முயற்சி செய்யுங்கள் .

நமது மீனவர்கள் கடலுக்குள் அடிக்கடி இலங்கை கடற்படையால் தாக்கப் படுவது , கொள்ளப் படுவதும் சர்வ சாதாரண விஷயம் . அதற்கு உடனடியாக நமது தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதமும் , இறந்தவர்களுக்கு இழப்பீடும் தருவது டிராபிக் போலீஸ் லஞ்சம் வாங்குவது மாதிரி அதைவிட சாதாரண விஷயம் .
எனக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்லைங்க முன்னாடி தான் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் இருந்ததால் சந்தேகத்தின் பெயரில் தாக்கப்பட்டார்கள் தமிழக மீனவர்கள் ...... இது கூட கொஞ்சம் நியாயமான விஷயம் ..... ஆனா இப்ப என்ன நடக்குது???

புதிதாக சேரும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நமது தமிழக மீனவர்கள் தான் ஜாலினான இலக்கு . ஆனா இப்போது சீன மற்றும் இலங்கை கூட்டு கடற்படைக்கும் நமது மீனவர்கள் தான் இலக்கு . இன்னும் கொஞ்ச நாள் போனா ஐ.நா. சபைலே உலக நாட்டு கடற்படை வீரர்கள் துப்பாக்கி சுடுவதில் பயிர்ச்சி பெற இந்திய கடலோர பகுதி உலகின் சிறந்த பகுதின்னு அறிவிச்சாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை .

என்ன சார் முட்டாத்தனமா இருக்கு ... ஒரு தடவை ரெண்டு தடவை என்றால் பரவாயில்லை ஏதோ கவனக்குறைவு என்று கூறலாம் ..........
இந்த நியுஸ் வர்றப்ப நாம என்ன பன்றோம் டீ, தம்மோட பேப்பர் படிச்சுக்கிட்டே ...ச்சு...ச்சு....ச்சுன்னு கவலைப்பட்டு , "கள்ளக்காதல் கொலை " இல்லை "உல்லாச அழகிகள் கைது" நியுஸ் எங்கடா இருக்குன்னு தேட ஆரம்பிச்சிடுவோம் .

இதற்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ...அரசாங்கம் மட்டுமே கடுமையான நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும். ஆனா நாம் எல்லாரும் சேர்ந்து குரல் கொடுத்து அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டுவரலாம்.

ஒரு வேலை தமிழக மீனவர்கள் தினமும் கடலுக்குள் சென்று விட்டு வந்து "இலங்கை கடற்படை தாக்குதில் இருந்து நாங்கள் தப்பி வந்தற்காக கலைஞருக்கு நன்றி"ன்னு பேட்டி குடுத்தால் தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் பிறக்குமோ ???

டிஸ்கி : பதிவெழுதும் நண்பர்கள் தங்களுடைய பதிவுகளை கீழே உள்ள தளத்தில் இணைக்கவும்
 
"http://www.savetnfisherman.org/"
 
ப‌திவ‌ர் : மங்குனி அமைச்சர்
 

No comments:

Post a Comment