Sunday, January 30, 2011

தமிழக மீனவன் இழவுக்காதை-கிழிந்து தொங்கும் முகமூடிகள்

ஈழத்தில் லட்சக்கணக்கில் இனம் அழிக்கப்பட்ட போது பிளாஸ்திரி ஒட்டிக்கொண்ட வாய்கள் இந்திய இறையாண்மை; அயல்நாட்டு விவகாரம் என்ற சாக்குக்குள் ஒளிந்த கதை பழசாகிப்போனது.

அந்த சாக்கு முகமூடிகள் சிங்களவன் சர்வீஸ் செய்த துப்பாக்கிகளை சோதித்துப்பார்க்க தென்தமிழக மீனவன் மார் கொடுக்கும் இந்நாட்களில் பொத்தலாகிக் கிழிந்து தொங்குகின்றன.

இலங்கையில் தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என்ற போது வரிந்து கட்டிக் கிளம்பிய தமிழ் திரையுலகத்திற்கு இந்த இழவுகளால் பெரிய நஷ்டமேதும் இல்லை. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், தான் இதுகாறும் பெரும்பாடு பட்டு சம்பாதித்து வைத்திருக்கும் ’’மெண்ட்டல்’’ இமேஜால் இந்த பிரச்சனையிலிருந்து அவரே அறியாமல் தப்பித்து விடுகிறார். யாரும் பொருட்டாக மதித்து அவர் குறித்து வினவுவதில்லை. சமீபகால தன்னிலை விளக்கங்களின் மூலம் கலைஞ்சரையே விழுங்கிவிடும் ஃபார்மில் உள்ள கமல்ஹாசன் இலங்கைத் தமிழனுக்கு சினிமா பைத்தியம் ’’இமேஜை’’ நிலை நிறுத்தி சாதனை செய்தது போல தமிழக மீனவனுக்கு பெண்பித்தன், மொடாக்குடியன் போன்ற ஏதேனுமொரு கதாபாத்திர மெருகேற்றல் பணியில் ஈடுபட்டிருக்கக் கூடும்.

டாக்டர் கேப்டனின் அறிக்கை எங்காவது வந்திருக்கிறதா என்று இணைய செய்தித் தாள்கள் முதல் பிள்ளைகளுக்கு இசி வழித்தெறியும் துண்டுச்சீட்டு வரை துழாவினாலும் கிடைக்கப் பெறவில்லை

ஃபோனுங் கையுமாவே சுத்துறாப்ல; டயலாக் இதுதான்!

''நுப்பத்தஞ்சா அது 2006லனா ஓகே! ஆங்...''

''அம்பத்தி.... மூணா அது போன மாசம்!...... சேலத்துல கூட்டத்த பாத்தீங்கள்ள! பின்ன .... ''

''எலுவதுக்கு மேலன்னா பேச்சு. இல்லாட்டி அய்யா கால்(Call !!!) வெயிட்டிங்கு''

இந்த அரிபரிகளுக்கிடையில் மீனவன் செத்தத லேடி கேப்டனும் கேள்விப்பட்டிருக்க மாட்டாங்க பன்ரொட்டியாரும் சொல்லி இருக்கமுடியாது. எனவே விசயமே தெரியாமல் (எதிர்பாராத காரணங்களால்) போனதால் விசயகாந்த் ஆட்டையிலிருந்து விலகிவிட்டார்.

அடுத்ததாக லெட்டர் பேடில் 2011ன்னு போட்டு புதுசா அடிக்காம பழைய லெட்டர் பேடிலேயே ஒயிட்னர் வைத்து பத்தை பதினொன்றாக்கும் நிலையில் கட்சி நடத்தி வருகிற சரத் குமார்,கார்த்திக் பற்றியெல்லாம் ஜெயா நியூசில் விளக்கமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுறா என்ற படத்தில் மீனவனாக நடித்த இளையதளபதி விஜய் தன் சமகால நடிகர்களில் மீனவனாக நடித்தது தான் மட்டும் தான் என்ற திருப்தியுடன் இவ்விசயத்தில் ஆசுவாசம் கொண்டிருக்கலாம். மீண்டும் கலைஞ்சர் குழும தொலைக்காட்சிகளில் காவலன் தலை காட்டத் தொடங்கி விட்டதால் இழுத்து மூடுவதைத் தவிர அவருக்கும் வேறு வழியேதுமில்லை.

வைகோ டெல்லி சென்று சிங்கிடம் கடிதம் கொடுத்து சிவசங்கர மேனனுக்கு டாட்டா காட்டி ஏர்போர்ட் நெருங்கி இருக்கக் கூடமாட்டார் அடுத்த இழவு சேதி வந்துவிட்டது! அவர் கொடுத்த கடுதாசி நம்பர் 10,ஜன்பத் சாலை வீட்டில் உளுந்தவடைக்கு எண்ணை உறியச் செய்ய அனுப்பப் பட்டு இருக்கலாம். பிப்ரவரி 6ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போகிறாராம். நல்லது நடந்தா சரி சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஜூஸ் குடுத்து சிறப்புரையாற்ற செயலலிதாவ கூப்பிடாம இருந்தா பரவால்லைங்க.

ராமதாஸ் கோவாலபுரத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துவிட்டாராம்.

அதனால் ””ரெண்டு வாரம் முன்னாடி செத்துருந்தானுகன்னா அறிக்க உட்டுருப்பேனே!”” என்கிறார். மேலும் முதல்வரிடம் மீனவர்களுக்கு நல வாரியம் அமைப்பதாக இருந்தால் பாதிப்பேரை வன்னியர்களாகப் போடச்சொல்லி வலியுறுத்தப் போவது உறுதி!

செயலலிதா கொஞ்சம் அதிரடியாக ஹெலிக்காப்டரைக் கிளப்பினார்! ஆஹா! வந்துவிட்டாரய்யா தர்ம தேவதை! அம்மா வருவதற்கு முன்னமே இழவு வீட்டில் தற்காலிகமாக மரக்கட்டையில் படிகள் அமைக்கப்பட்டதாம்; அம்மையீர் உள்ளே நுழைய வசதியாக வாசல் சற்று இடித்து அகலப் படுத்தப்பட்டதாம் விட்டின் முன்புறம் முழுக்க மணல் கொட்டி மேடாக்கப் பட்டதாம் அடடா! இதல்லவா அதிரடி நலத்திட்டம்! இதற்குப் பிறகான காட்சி தான் அற்புதம்! இழவு வீட்டில் இறந்த மீனவரின் மனைவி மற்றும் தாயாரைத் தவிர அத்தனை பேரையும் துரத்திவிட்டார்களாம். மொத்தமாக 8 நிமிடம் அம்மா அந்த வீட்டில் இருந்தார் அழுதவர்களைக் கட்டி அணைத்தார் சில பல ஃப்ளாஷ்கள்! 1,00,000/- நிதி உதவி! முடிந்தது மேட்டர். வெளியே வந்ததும் நீட்டப்பட்டன மைக்குகள்! ‘’அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள்’’ என்பதை வேறுமாதிரியாகப் பரப்புரை செய்துவிட்டு கிளம்பி விட்டார் ‘’எனது நல்லாட்சியில் மீன்களே இனி துள்ளிக் குதித்து வந்து கட்டுமரத்தில் விழும் ’’ என்று மட்டும் தான் சொல்லவில்லை.

கலைஞ்சர் டீவிக்காரர்கள் செயா வருகை தெரிந்த உடன், அவசர அவசரமாக மாவட்ட நிர்வாகம் மூலம் இழவு வீட்டில் 5,00,000/- பணம் கொடுத்துவிட்டு, மைக்கை நீட்டி ’’கலைஞ்சர் நல்லவர்;வல்லவர் நாலும் தெரிந்தவர்னு வாக்குமூலம் வாங்கிக் கொண்டு கிளம்பினர்.

திருமாவளவனை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் 500 பேர் மறியல் செய்தனர் [இவர்கள் நிலை தான் பரிதாபம்] இந்தச் சிறுத்தை துரோகத்தில் நம் முதல்வருக்கும் கருணாவுக்கும் சற்றும் குறைந்தவரில்லையல்லவா?! அதனால் தான்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் மானமிகு வீரமணியும் இளைஞன் படத்தை ஒவ்வொரு ஷோவும் பார்த்து எப்ப்படியாவது ஹிட்டாக்கும் முயற்சியில் உள்ளனர்! ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சமீபத்திய கிரக நிலை மாற்றங்கள் அவர் எதிர்பார்த்தாற் போலில்லையாதலால் சித்த பிரமையாம். மற்றவர்களுக்கு அறிக்கை எழுதிக் கொடுக்கும் அஸிச்டெண்ட்டுகள் லீவில் சென்றுவிட்டதால் சொல்வதற்கு எதுவுமிருக்காது.

இந்திய ஜனாதிபதிக்கு சேலையை சரியாகக் கட்டுவதே சிரமமாக உள்ள நிலையில் ராஷ்டரபதி பவனில் ரோஜாச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கு இல்லை.



மன்மோகன் சிங்குக்கு நீல டர்பன் வேணாம்னு மஞ்ச டர்பன் கோவாலபுரத்துல இருந்து பார்சல் போயிருக்காம் அத சுத்தி சுத்தி கட்டிட்டு இருப்பார்.


சொக்கத் தங்கம் சோனியா காந்தி நிருபமா ராவ இலங்கைக்கு அனுப்பி இருக்காங்க. ஈழப்படுகொலைகளுக்கு நடவடிக்கை எடுக்கறதா சொல்லி அனுப்புனாங்களே முன்னொரு தடவை கடசீல என்ன ஆச்சு? அதே தான் இப்பவும் ஆகப் போவுது. எனக்கு புரியாத ஒரே விசயம் நேர்ல ஆளனுப்பிச்சு (Nil Report)அறிக்கைய வாங்கிட்டு வரணுமா! இல்ல பொம்பளைய அனுப்பிச்சி தான் இதுக்கு முன்னால எல்லாம் மத்த நாடுகளிலிருந்து அறிக்கை வாங்குனீங்களா?


கொன்னவன் வீட்டுக்குப் போயி மன்னிப்பு கடிதத்துல கையெழுத்து வாங்கற கேவலம் வேற எங்கயும் நடக்காது.




இந்திய ஊடகங்கள் இந்த பிரச்சனைய உப்புசப்பில்லாததுன்னு ஒதுக்கித் தள்ளுவதிலும் நியாயம் இல்லாமலில்லை; பின்ன தெனம் ஒரு கட்சி அறிக்கை உடறதுதான் சென்சிடிவ் பிரச்சன! அதைக் கவர் பண்ணினா காசு பாக்கலாம்; மீனவன் செத்தத உள்ளூர்லயே ஒருத்தனும் கண்டிக்கல இத வெச்சு மயிரா புடுங்கறதுன்னு நெனச்சிருப்பான்.


தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில பாதி மஞ்சத் துண்டுக்கு மணியடிக்கவே கொள்கைச் சபதம் கொண்டவை.மீனவர் படுகொலைன்னு தலைப்பிட்டு செத்தவன் போட்டோ குடும்ப விபரம் எல்லாம் விலாவாரியா போட்டுட்டு தொடர்ச்சி 26ம் பக்கம்னு சொல்லிடுவானுக அடுத்த பக்கத்துல கலைஞ்சரும், அவர்தம் புத்திரச் செல்வங்களும் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும்! இந்த கருமத்துக்கு முரசொலியே பரவால்ல.


தமிழக அரசு கலைமாமணி அறிவிச்சாச்சு! வாங்குனவன்லாம் சேர்ந்து இனி பாராட்டு விழா எடுப்பான். கெழம் அதுல பிஸியாகிடும். பொழப்பத்த வக்கீல் தமிழன் ஹை கோர்ட்ல மீனவன் செத்துட்டான் நடவடிக்கை தேவைனு கேஸ் போடுவான்; ஹை கோர்ட் அரசை கேள்வி கேட்கும். கருணாநிதியின் அல்லக்கை ஐ ஏ எஸ் எவனாவது சிறப்பு அலுவலர்னு வெள்ள அம்பாசிடர தூக்கிட்டு வெட்டிப் பயணம் கெளம்பிடுவார்.


அடுத்த இழவுக்காக தமிழர்கள் காத்திருப்பார்கள்....


டிஸ்கி 1: டுவிட்டரிலும் பதிவுகளிலும் முன்னெடுக்கப் பட்டிருக்கும் பரப்புரையையும்,அதை செய்பவர்களையும் நக்கலடிக்கும் நண்பர்களுக்கு ஒரு :-)


டிஸ்கி 2:இத்தனை பேர ஏன் ஒண்ணும் செய்ய மாட்டீங்கிறீங்கன்னு கேட்டதுக்கு கூடவே இருக்கற சக பதிவர்,டுவிட்டர்கள் சிலரிடம் {பினா பானாஸ்} கேட்கத் தான் நினைத்திருந்தேன் அந்த முகமூடியும் கிழிந்து தொங்கட்டும் என்று
அவர்களுக்கு ஒரு :-)

பதிவர்: ராஜன்

No comments:

Post a Comment