Sunday, January 30, 2011

கிள்ளி எறியப்படுவது மீனவன் உயிரல்ல,தமிழனின் மானம்!!!

எல்லை பாதுகாப்பு என்ற பேரில் சிங்களக் கொலைப்படையும், இந்தியக்கடல்படையும் கூட்டு சேர்ந்து தமிழக மீனவன் உயிரை குடிக்க ஆரம்பித்து 500க்கும் மேற்பட்டோர் தெருநாயைப்போல கடலுக்குள்ளேயே சுடப்பட்டிருக்கின்றனர். மீனவன் எல்லையைத்தாண்டிப்போனதால் சுட்டுக் கொல்லப்படவில்லை, நம் தேசத்து எல்லைக்குள்ளேயே நிராயுதபாணியாக மீன் பிடிக்கையில் அந்த சிங்கள இழிமகன்களால் சுடப்பட்டிருக்கின்றனர். தலைக்கு மேலே சீன இழிமகன்கள் நில எல்லையை அபகரிக்கின்றான்கள். காலடியிலே சிங்கள மதயானைகள் நீர் எல்லையை அபகரிக்கின்றனர். வெட்கமும் துப்பும் கெட்ட மத்திய மாநில அரசுகள் ஊழலில் எத்தனை கோடிகள் கிடைக்கும்? என்றே சதாசர்வகாலமும் சிந்தித்து மும்முறமாக கொள்ளையடிக்கின்றனர். நாசமாப்போக!!!


நூற்றுப்பதினெட்டு கோடி மக்கள் தொகை கொண்ட பாரதத்தில்கொல்லப்பட்ட மீனவர்கள் 500 பேர் என்ன,ஒரு பெரிய தொகையா ? என்று கேட்கலாம், இதே உயிர் மும்பை மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? கேரள மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? கோவா மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? இல்லை ஆந்திர/வங்காள மீனவன் உயிராய் இருந்தால் அடிக்கடி போகுமா? சட்டசபையில் கிழி கிழியென்று இந்நேரம் நாறடித்துக் கிழித்திருப்பார்கள். நன்றாக சிந்தித்துப்பாருங்கள். ஒரு இயக்குனர் பெரும் பாடுபட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு சென்று பிணமாய் திரும்புவதை யதார்த்த சினிமாவாக எடுத்திருக்கிறார். அதைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போடும் நம் மாநில அரசு,


மத்திய அரசு என்ன பாராமுகம் காட்டினாலும் என் உயிரா போச்சு என வாயையும் குதத்தையும் பொத்திக்கொண்டிருக்கிறது.வேறு எந்த நாட்டிலாவது தவறு செய்யாத இன்னொரு நாட்டின் குடிமகனை நாயை சுடுவது போல சுடவும்,ஓணானின் கழுத்தை சுருக்கு போடுவது போல இழுத்துச் சென்றும் கொல்ல முடியுமா? ராஜீவ் என்னும் ஒற்றை உயிருக்காக தமிழர்கள் பலரை இன்னும் நாம் எத்தனை நாட்களுக்கு பலிகொடுப்பது? தமிழன் உயிர் தூசல்ல என்று இந்த பதர்களுக்கு காட்டும் நேரம் இது!!!.விஞ்ஞான யுகத்தில் இருக்கும் வசதிகளை பயன்படுத்தி ஒன்று திரள்வோம். நீதிக்கு குரல் கொடுப்போம், அங்கே கிள்ளி எறியப்படுவது மீனவன் உயிரல்ல, தமிழனின் மானம் என்பதை நன்கு புரிந்து கொள்வோம்.

நண்பர்களே!!!உங்களின் தலையான கடமையாக ஐந்து நிமிடம் இதற்காகசெலவிடுங்கள்:-மீனவர் சாவை தடுக்க இந்திய அரசின் கவனஈர்ப்புக்கு கொண்டு செல்லும் இந்த இணைய படிவத்தில் நீங்களும் கையெழுத்திடலாம்.நிறைய கையொப்பம் இடுங்கள். மொத்தம் ஒரு லட்சம் கையொப்பங்கள் வேண்டும் இன்னும் 2000 கூட தேறவில்லை, நான் என் உறவினர்கள் ஐடிகளைப் பயன்படுத்தி 6 கையொப்பம் இட்டேன். வாருங்கள். முடிந்த வரை இந்த செய்தியை உங்கள் இணைய தளத்தில், வலைப்பூவில்,ஃபார்வர்டு மெயில்கள் மூலம் பரப்புங்கள்.
நன்றி!!!நன்றி!!!நன்றி!!!

கீதப்ப்ரியன்

No comments:

Post a Comment